Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
வீட்டுகிட்ட ஏலியனை பார்த்தேன் - ஒரு பைத்தியம் மோடிக்கு அனுப்பிய சுவாரஸ்ய கடிதம்... இதோ உங்களுக்காக
ஏலியன்களை நேரில் பார்த்ததாக மோடிக்கு கடிதம் அனுப்பிய சுவாரஸ்யமாக கதை சொல்லியதோடு அதிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு மோடிக்கு மின்னஞ்சல் ஒ்னறையும் புணுவில் ஒருவர் எழுதியிருக்கிறார்.
ஏலியன்கள் இருப்பதாகவும் அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுக்களில் பறந்து கொண்டிருப்பதாகவும் வேற்றுகிரக வாசிகள் பூமிக்குள் ஊடுருவி விட்டதாகவும் அதை பார்த்ததாகவும் அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றனவே தவிர, நாம் யாரும் ஒருபோதும் ஏலியன்களைப் பார்த்ததில்லை.

நம் எல்லோருக்குமே அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஏலியன்களை சந்தித்து விட வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதும் உண்மை தான். ஆனால் ஒருவுர் தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஏலியனைப் பார்த்ததாக சொல்கிறார்.

வேற்றுகிரகவாசிகள்
ஏலியன்களைப் பற்றி நமக்கு எப்போதுமே ஒருவித ஆவலும் எதிர்பார்ப்பும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களுடைய முகம் எப்படியிருக்கும், கண்கள் எப்படியிருக்கும், எப்படி முழிப்பார்கள், அதைவிட எல்லோருக்கும் இருக்கும் மிக ஆச்சர்யமான கேள்வி என்னவென்றால் ஏலியன்கள் என்ன மொழியில் பேசுவார்கள் என்பது தான். ஆம். நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கிறது. அப்படி ஏலியன்களை நாம் நேரில் பார்த்தால்? எப்படியிருக்கும்?
ஆமாங்க அப்படி ஒருவர் தான் ஏலியனை நேரில் பார்த்ததாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதனால் பிரதமர் அலுவலகமே சமீபத்தில் இந்த கடிதத்தால் அல்லோகலப்பட்டிருக்கிறது.

எங்கே நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கோதாரூட் என்னும் இடத்தில் வாழ்ந்து வரும் ஒருவர்தான் இப்படி ஒரு பீதியை கிளப்பியிருக்கிறார். ஆம். தான் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது, வீட்டுக்கு வெளியே ஏதோ இயல்புக்கு மாறான செயல்பாடுகள் நடந்ததாகவும் வெளியே வந்து ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்த போதுதான் தெரிந்தது அது ஏலியனாகிய வேற்றுகிரக வாசிகள் என்பது தெரிந்தது என்றும் பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

விசாரணை
இப்படி பிரதமர் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலால் பிரதமர் அலுவலகமே அல்லோகலப்பட்டது. இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பியது யார் என்ற விசாரணையில் ஈடுபட்டது பிரதமர் அலுவலகம். உடனே இந்த தகவல் புணே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் புணே காவல்துறை விசாரித்து யார் என்று கண்டுபிடித்தது.

அவர் ஒரு பைத்தியம்
தன் வீட்டு அருகே ஏலியனைப் பார்த்ததாகச் மின்னஞ்சல் அனுப்பியவர் புனேவில் கோதாரூட் பகுதியில் உள்ள ஒருவர் தான் அனுப்பியிருக்கிறார் என்றும் அவர் ஒரு மனநிலை தெளிவில்லாத நபர் என்றும், அவருக்கு மூளையில் ரத்த அழுத்தக் குறைபாடு இருப்பதாகவும் தெரிய வந்தது.

வெளிச்சம்
வீட்டுக்கு வெளியே சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு பெரிய வெளிச்சத்தைக் கண்டதாகவும் அதை பார்த்துவிட்டு தான் ஏலியன் என்று (வேற்றுகிரகவாசிகள்) என்று அவர் நம்பியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இப்படி அவ்வப்போது ஏதேனும் சத்தம் வெளிச்சத்தைக் கண்டால் இ.வர் இப்படி ஏதாவது பேய், பிசாசு என்று பிதற்றிக் கொண்டிருப்பாராம்.



Click it and Unblock the Notifications