Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க, இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வணங்கினால் போதும்..!
எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் நமக்கு பிடித்தமான கடவுள்களை வேண்டி கொள்வது வழக்கம். சிலருக்கு விநாயகர் தான் விருப்பமான கடவுளாக இருப்பார். சிலருக்கு சிவன் என்றால் மிகவும் பிடிக்கும். சிலருக்கு பராசக்தி தான் தெய்வமாக இருப்பார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள்கள் விருப்பமானதாக இருப்பார்கள்.

எந்த கடவுளாக இருந்தாலும் அவரை வழிபடும் போது அவருக்கு பிடித்த சில உணவுகளை வைத்தே நாம் வழிபடுவோம். எல்லா வகை உணவுகளும் கடவுள்களுக்கு பிடிக்காது. சனி பகவான் முதல் துர்க்கை வரை பலவித உணவு விருப்பங்கள் இருக்கும். இதை நாம் "நெய்வேதியம்" என்போம்.
இறைவனுக்காக பிடித்த உணவுகளை படைக்கும் போது நமது எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதே போன்று சனியின் பிடியில் இருந்து தப்பிக்க அவருக்கு பிடித்தமான உணவு படைத்தால் சிறந்தது. இந்த பதிவில் எந்த கடவுள்களுக்கு எந்தெந்த உணவுகள் பிடிக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

இறை வழிபாடு!
இறை வழிபாடு என்பது காலங்கள் மாற மாற வேறுபட்டு வருகிறது. முதலில் இயற்கையை வழிபாட்டு வந்த மனித இனம் காலம் செல்ல செல்ல அவற்றை கடவுளாக மாற்ற தொடங்கினான்.
அவ்வாறு வழிபடும் போது அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படைக்கும் பழக்கத்தையும் கொண்டு வந்தான். இது நாம் கடவுள்கள் மீது வைத்துள்ள மட்டற்ற அன்பை குறிக்கிறது.

விஷ்ணு
காக்கும் கடவுளாக உள்ள விஷ்ணுவை வழிபடும் போது மஞ்சள் நிறத்தில் உள்ள உணவு பொருட்களை நெய்வேதியமாக படைப்பது சிறந்தது.
குறிப்பாக லட்டு, வெல்லம் போன்ற உணவுகளை படைத்தால் விஷ்ணு பகவான் மிகவும் சந்தோஷப்படுவார். இவை அனைத்திற்கும் மேல் வெண்ணெய் தான் அவரின் பிரதான உணவு பொருள் என புராணங்கள் கூறுகின்றன.

அனுமன்
உங்கள் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிய அனுமனுக்கு இந்த ஒரே ஒரு பொருளை நெய்வேதியமாக படைத்தால் போதும். அதுவும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள துவரம்பருப்பை நீரில் ஊற வைத்து அனுமனுக்கு படைத்தால் எப்போதுமே நல்லதே நடக்கும்.

லட்சுமி
வீட்டில் பண மழை பொழிய லக்ஷ்மியை வணங்கினாலே போதும். செல்வத்தின் அரசிக்கு அரிசியால் செய்த பாயசம் என்றால் மிகவும் பிடிக்கும்.
மிக பிரம்மாண்ட உணவுகளை காட்டிலும் வெள்ளை நிற அரிசியை வைத்து செய்ய கூடிய பாயசம் தான் லக்ஷ்மியின் விருப்ப உணவாம்.

சிவன்
அழிக்கும் கடவுளாக பார்க்கப்படும் சிவனுக்கு பால் தான் மிகவும் விருப்பமான உணவு பொருளாம். குறிப்பாக பல் பொருட்கள் அனைத்துமே சிவனுக்கு நெய்வேதியமாக படைக்கலாம். சிலர் பாங்கு, தயிர் போன்றவற்றை சிவ ராத்திரி நேரங்களில் சிவனுக்கு படைப்பதுண்டு.

துர்க்கை
துர்க்கை அம்மனுக்கு பிடித்தமான உணவு என்றால் அது பாயசம் மற்றும் காய்கறிகள் பல சேர்த்த கிச்சடி தான். மற்ற உணவுகளை காட்டிலும் இதை தான் துர்கை அம்மனுக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் பலவித காய்கறிகள் கொண்ட உணவுகள் அனைத்துமே துர்க்கைக்கு படையலாக தரலாம்.

சனி, ராகு, கேது
பலரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடும் வலிமை சனி, ராகு, கேது ஆகிய மூவருக்கும் இருக்கிறது. இவர்கள் மூவருக்கும் பிடித்த நிறம் கருப்பு தான். ஆகையால் இவர்களுக்கு கருப்பு நிற உணவு பொருட்களை படைப்பது சிறந்தது. முக்கியமாக கருப்பு எள்ளு, கடுகு போன்றவை இவர்களுக்கு பிடித்தமான உணவு பொருளாம்.

சரஸ்வதி
கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை வணங்கும் போது வெள்ளை நிற உணவு பொருட்களை படையலாக தரலாம். குறிப்பாக வெண்பொங்கல், தயிர், தட்டை அரிசி ஆகியவற்றை நெய்வேதியமாக கொடுக்கலாம்.

விநாயகர்
விநாயகருக்கு பிடித்தமான உணவு எது வென்று கேட்டால் குழந்தைகளுக்கு கூட தெரியும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான உணவு கொழுக்கட்டை தான். அத்துடன் லட்டு போன்ற இனிப்பு வகையும் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும்.



Click it and Unblock the Notifications