Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 4 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 12 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 14 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..! அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..?
மருத்துவத்தில் பலவித அதிசயங்கள் நடக்கும். இவர் உயிர் பிழைக்கவே மாட்டார் என எண்ணினால் அவர்தான் உடனடியாக உயிர் பிழைத்து தெம்பாக நடமாடுவார். இவருக்குலாம் எதுவுமே ஆக்காதுப்பா..! இரும்பு மாதிரி உடம்பு" இப்படி யாரை சொல்கிறமோ அவர்தான் கூடிய சீக்கிரத்திலே . இப்படி நாம் ஒன்று நினைக்க, அதுவாக ஒன்று நடப்பது மிக இயல்பே. ஆனால், ஒரு சிலருக்கு வாயை பிளக்க கூடிய அளவிற்கு பல அதிசயங்கள் நடக்கின்றன.
"இட் ஐஸ் எ மெடிக்கல் மிராக்கிள்" என்றே நாம் இதனை சொல்ல வேண்டும். இது போன்ற விஷயங்கள் நம்மை சுற்றி பல நடக்கின்றன. அந்த வகையில் இங்கே ஒருவருக்கு 15 பீர் பாட்டிலை உடலில் செலுத்தி உயிரை காப்பாற்றி உள்ளனர். இது மருத்துவ துறையில் புதுவித அனுபவம் என்றே கூறலாம். இந்த நிகழ்வு எங்கே, யாருக்கு, எப்படி நிகழ்ந்த்து என்கிற சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.
யார் அவர்..?
குளுக்கோஸ் பாட்டில் நம் உடலில் ஏற்றி தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த 15 பீர் பாட்டில் விஷயம் சற்று வேடிக்கையாக தான் இருக்கும். வியட்நாம் நாட்டை சேர்ந்த நகுய் வான் நாட் என்கிற 48 வயதை நிரம்பிய ஒருவருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் 15 பீர் பாட்டிலை செலுத்தி தான் உயிரை மீட்டெடுத்தனர்.
காரணம்..?
நாட் என்பவரின் ரத்தத்தில் அதிக அளவு மெத்தனால் (methanol) என்கிற வேதி பொருள் கலந்துள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் அளவு 1119 மடங்கு அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த நிலை கொஞ்சம் நேரம் நீடித்தால் கூட அவருக்கு மரணம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் முடிவு..!
இப்படி உடலில் அதிக அளவு மெத்தனால் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்த பின்னர் இதை சரி செய்வதற்கான வழி முறையை ஆராய்ந்தார்கள். அப்போது தான் இவர்களுக்கு பீர் உதவியது.
ஆரம்பத்தில் 1 லிட்டர் பீரை அவரின் உடலில் மருத்துவர்கள் செலுத்தினர். இருப்பினும் இந்த வேதி பொருளின் அளவு குறையவில்லை.
அடுத்த முயற்சி..!
இதனால் ஒவ்வொரு பீர் பாட்டிலையும் இவரின் உடலில் குளுக்கோஸ் ஏற்றுவது போல ஏற்றினர். 10 பீர் பாட்டிலை ஏற்றிய பின்னரும் இவர் சுய நினைவுக்கு வரவில்லை. இறுதியாக 15 ஆவது பீர் பாட்டிலில் தான் இவர் சுய நினைவுக்கு வந்தார்.
MOST READ: அடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை சித்த வைத்தியத்தின் படி குறைப்பது எப்படி...?
என்ன தந்திரம்..?
யாரவது பீரை குடிக்காமல் உடலில் ஏற்றுவார்களா..? என்கிற உங்களின் கேள்விக்கு பதில் இதோ. அதாவது, மதுவில் பொதுவாகவே இரு வகை உண்டு. ஒன்று எத்தனால் (ethanol) கொண்ட மதுபானம். மற்றொன்று மெத்தனால் (methanol) கொண்ட மதுபானம்.
இவற்றில் மனித உடலானது முதலில் எத்தனாலை கல்லீரலின் மூலம் மாற்றம் பெற செய்யும். ஆனால் இவருக்கோ அதிக அளவில் மெத்தனால் உடலில் சேர்ந்துள்ளதால் பீர் பாட்டிலை உடலில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏன்..?
இவ்வாறு பீரை உடலில் செலுத்துவதன் மூலம் இந்த மெத்தனால் அளவு குறைய தொடங்கும். எனவே, கல்லீரலுக்கும் பாதிப்பு ஏற்படாது.
நாட், சுய நிலைக்கு மீண்டும் வர 15 பீர் பாட்டில்கள் தேவைப்பட்டதே ஆச்சர்யமான ஒன்று என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வியப்பான மருத்துவம்..!
இப்படிப்பட்ட வியப்பான மருத்துவத்தை இதுவரையிலும் மருத்துவ துறையில் செய்ததில்லை. இதுவே முதல் முறை என்பதால் சற்று புதிதாகவும், விந்தையாகவும் உள்ளது என மருத்துவ வட்டாரத்தில் குறிப்பிடு கின்றனர்.
தற்போதைய நிலை..!
15 பீர் பாட்டிலை ஏற்றிய பின்னர் சுய நினைவிற்கு வந்த நாட், 3 வார காலத்திற்கு பிறகு பழைய படி அவரின் வேலைகளை செய்ய இயலும். மேலும், இந்த புது வித மருத்துவத்தை துரிதமாக மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அதிக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
MOST READ:ஆண்களே! மலட்டு தன்மையை உங்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உருவாக்குகின்றன..!