Latest Updates
-
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...!
கோவிலுக்குள் புகுந்த முதலை... மக்கள் அத பார்த்து என்ன பண்ணாங்க தெரியுமா?
கோவிலுக்குள் புகுந்த முதலையைப் பார்த்ததும் மக்கள் வழிபடத் துவங்கிய சுவாரஸ்யமான நிகழ்ச்சி பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
இந்து மத கலாச்சாரத்தில் பல்வேறு விலங்குகளையும் பறவைகளையும் வழிபடும் பழக்கம் உள்ளது. மக்கள் முழு அர்ப்பணிப்போடு இந்த விலங்குகளையும் பறவைகளையும் வழிபட்டு அவைகளுக்கு உணவு கொடுத்து வருகின்றனர்.

உண்மையில் அபாயகரமாக விளங்கும் இத்தகைய விலங்குகளை நிஜத்தில்வழிபடுவது எந்த விதத்தில் சிறந்தது? ஆனால் இந்தியர்களாகிய நாம், நம்முடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை ஒருபோதும் கைவிட நினைப்பதில்லை.

கோவிலுக்குள் முதலை
அந்த நம்பிக்கையில் சில அபாய விளைவுகள் ஏற்பட்டாலும் அதனால் நமது நம்பிக்கை பொய்ப்பதும் இல்லை. அது போல் ஒரு வழக்கு தான் இப்போது நாம் காணவிருப்பது. குஜராத் மாநிலத்தில் மஹிசாகர் மாவட்டத்தில் கொடியர் மாதா ஆலயத்தில் ஒரு முதலை நுழைந்து விட்டது.

நடு கோவில்
ஒரு மாலை நேரத்தில் கொடியர் ஆலயத்தின் பிரகாரத்தில் ஒரு முதலை நுழைந்துவிட்டது. கொடிய மாதாவை வழிபடக் கூடிய ஆலயமாக விளங்குவது இந்த கொடியர் ஆலயம். அந்த தெய்வத்தின் வாகனமாக அறியபப்டுவது முதலை. முதலைக்கும் இந்த கோயிலுக்கும் உள்ள இந்த தொடர்பால், முதலை கோயிலுக்குள் நுழைந்த செய்து அறிந்த மக்கள் முதலையைக் காண கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.

மக்கள் பயம்
முதலைக்கு பசி எடுத்தால் அது தன் இரையை விட்டு வைக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூடியிருந்த மக்கள் இதனைப் பற்றி பயமோ பதட்டமோ அடையவில்லை. முதலைக் கண்ட மக்கள் பயம் இல்லாமல் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்தனர்.
ஆம், அங்கு குழுமி இருந்த மக்கள் முதலையை சுற்றி நின்று அதற்கு ஆரத்தி எடுக்கத் தொடங்கினர். ஒரு ஆறடி முதலை இந்த கோயிலுக்கு நுழைந்ததை அறிந்த வனத்துறையினர் சிறிதும் தாமதிக்காமல் அந்த இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தனர்.

வழிபாடு
இந்த கோயிலைச் சுற்றி வசித்த மக்கள் முதலையை வனத்துறையினரிடம் ஒப்படைக்க சுமார் மூன்று மணி நேரம் தாமதித்தனர். அவர்கள் அனைவரும் அந்த முதலையை வழிபட்ட பின்பு தான் முதலையை வனத்துறையினர் மீட்டுச் சென்றதாக காடுகளின் துணைப் பாதுகாவலர் Mr. RM. பரமர் அறிக்கை வெளியிட்டார்.

வனத்துறை
முதலையை எடுத்துச் செல்லும் கடைசி நிமிடம் வரை அதனைக் காண கூட்டம் வந்து கொண்டிருந்ததாக அவர் கூறினார். மதம் குறித்த மக்களின் நம்பிக்கையை கெடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வனத்துறையினர் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து பின்பு அவர்கள் முதலையை அங்கிருந்து அகற்றி அருகில் இருந்த ஒரு ஏரியில் விட்டு விட்டதாக அதிகாரிகள் கூறினர்.



Click it and Unblock the Notifications











