Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
எல்லா கோவிலுக்கு போயும் கல்யாணமாகலையா? ஒரு வியாழக்கிழமை இந்த பரிகாரத்த மட்டும் பண்ணுங்க...
திருமணத் தடைகள் இருக்கின்றவர்கள் வியாழக் கிழமையில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் பற்றி தான் இந்த கட்டுரை விளக்குகிறது. அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.
திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்காது. பெண்ணுக்கு மாப்பிளையோ பையனுக்குப் பொண்ணோ அமைய மாட்டேங்குது என்று நிறைய புலம்பல்களைக் கேட்டிருப்போம். சிலருக்கு வரன் அமையாமலே இருக்கும்.

சிலருக்கோ நிச்சயதார்த்தத்தை நெருங்கி வந்து வந்து தடைபட்டுப் போகும். எது எப்படியோ? திருமணம் இப்படி தடைபட்டுக் கொண்டே போவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

தோஷங்கள்
திருமணத்தில் தடைகள் உண்டாக, மனிதர்கள், பணம், பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு. அதில் ஜோதிட ரீதியான காரணங்கள் என்று பார்த்தால் தோஷங்கள் தான். தோஷங்கள் பலவாறு சொல்லப்படுகின்றன. செவ்வாய் தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் இப்படி தோஷங்க்ள சொல்லப்படுகின்றன. அதில் திருமணத் தடைகளுக்குக் காரணமாக இருப்பது ராகு தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை தான்.

கோவில் பரிகாரங்கள்
இந்த ராகு - கேது தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பல கோவில் தலங்கள் ஜோதிட வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானதாக சொல்ல வேண்டுமென்றால், திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்களில் பூஜை என்று யார் யாரெல்லாம் பரிகாரம் சொல்கிறார்களோ அங்கெல்லாம் போய் பரிகாரம் செய்து பார்த்தும் நிறைய பேருக்கு கல்யாணம் கூடுவதில்லை. அப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கு சிரமப் படாமல் எளிமையாக செய்யக்கூடிய பரிகாரம் ஒன்று இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

வியாழக்கிழமை பரிகாரம்
இந்த பரிகாரத்தை வியாழக் கிழமை நாளில் தான் செய்ய வேண்டும். மிகப் பெரிய அளவில் கிடையாது. இது மிக எளிமையான பரிகாரம் தான். அதேபோல் வாரா வாரம் செய்ய வேண்டியதெல்லாம் கிடையாது. ஒரு வியாழக்கிழமை மட்டும் செய்தால் போதும்.

தலைக் குளியல்
பரிகாரம் செய்வது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முதலில் வியாழக்கிழமை நாளில் அதிகாலை வேளையில் எழுந்து தலைக் குளியல் செய்ய வேண்டும்.

பசு பரிகாரம்
ஒரு மணி நேரம் நன்கு ஊற வைத்த பச்சரிசி 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு, 300 கிராம் அளவில் அதேபோல் ஊறவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த அரிசி, பருப்பு கலவையில் 200 கிராம் அளவுக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து அதோடு ஒரு கட்டு உருவிய அகத்திக் கீரையையும் அதில் போட்டு கலந்து அந்த கலவையை உங்களுடைய கைகளால் அள்ளி பசுவுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். முழுவதும் பசுவுக்கு சாப்பிடத் தர வேண்டும்.
அப்படி செய்து கொண்டிருக்கும் போது பசுவின் கழுத்து, திமில் பகுதிகளை நீவிவிட்டு வாலையும் கைகளால் உருவி விட வேண்டும். அரிசி முழுதும் தீர்ந்த பின், அந்த பாத்திரத்தில் சிறிது தண்ணீர் இருக்கும். அதை தீர்த்தம் போல் குடிக்க வேண்டும்.

சாம்பிராணி
தலையில் தண்ணீர் ஈரம் இருக்கக்கூடாது. குறிப்பாக பெண்களுக்கு நீளமான முடி என்பதால் தண்ணீர் தலையில் சொட்டாமல் இருக்க வேண்டும். வேண்டுமென்றால் ஆண், பெண் இருவருமே தலை காய்வதற்கு சாம்பிராணி புகை போட்டுக் கொள்ளலாம்.

தலையில் பூ
பெண்கள் இந்த பரிகாரத்தைச் செய்யும் போது மற்ற பூஜைகளைப் போன்று தலையில் பூ சூடக்கூடாது. பரிகாரம் முடிந்ததும் பசுவை மூன்று முறை வலம் வந்து கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். அடுத்த முகூர்தத்திலேயே கெட்டி மேளச்சத்தம் கேட்கும்.



Click it and Unblock the Notifications











