Just In
- 56 min ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 2 hrs ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
Don't Miss
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Sports இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!
அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!
இந்தியாவின் மிகச்சிறந்த மேதைகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். வாழ்க்கைக்கான தத்துவங்களில் இருந்து வெற்றிக்கான ரகசியம் வரை அனைத்தையும் நாம் சாணக்கியரின் அறிவுரைகளில் இருந்து பெறலாம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் எக்காலத்திற்கும் பொருந்த கூடியவையாகும்.
இன்றைய இளைஞர்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அவர்களின் அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளாகும். பெரும்பாலான இளைஞர்கள் மனஅழுத்ததிற்கு ஆளாவதற்கு காரணமே அவர்களின் அலுவலங்களில் நடக்கும் அரசியலை சமாளிக்க முடியாமல்தான். இதை எளிதாக சமாளிக்கும் வழிகளை சாணக்கியர் கூறியுள்ளார்.
நேர்மை
சாணக்கியர் எப்போதும் அதீத நேர்மையுடன் இருக்கக்கூடாது என்று கூறுவார். ஏனெனில் நேராக வளர்ந்த மரங்கள்தான் முதலில் வெட்டப்படும். எங்கு தந்திரமாக இருக்க வேண்டும் எங்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலையில் செய்ய வேண்டியது
எந்தவொரு வேலையையும் தொடங்கும் முன் உங்களுக்குள் மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் செய்கிறேன், இதன் முடிவு என்னவாக இருக்கும், இதில் நான் வெற்றிபெறுவேனா இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு இந்த வேலை தகுதியானதா என்று யோசித்து கொள்ளுங்கள்.
கடின உழைப்பில்
ஒரு வேலையை தொடங்கும் முன் அது தோல்வியில் முடியும் என்று நினைத்தோ அதனை பாதியில் நிறுத்தக்கூடாது. கடினமாக வேலை செய்பவர்களே மகிழ்ச்சியானவர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். தினமும் உங்கள் முன்னேற்றத்தை கண்காணியுங்கள்.
ரகசியங்கள்
மிகப்பெரிய குரு மந்திரம் என்னவெனில் உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களை அழித்துவிடும். ஒருபோதும் வதந்திகளில் ஈடுபடாதீர்கள்.
நட்பில்
அனைத்து நட்பிற்கு பின்னாலும் ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு இருக்க வாய்ப்பில்லை. இது கசப்பான உன்மையாகும். நண்பர்களை வைத்து கொள்ளுங்கள் ஆனால் மிகவும் நெருக்கமான நண்பர்களை வைத்த கொள்ளாதீர்கள்.
பயம்
பயம் உங்களை நெருங்கும் போதே அதனை தாக்கி அழித்து விடுங்கள். கற்றுக்கொள்வதை மட்டும் எப்பொழுதும் நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் உங்களை பயத்தில் இருந்து பாதுகாக்கும் ஒரே விஷயமாகும்.
போட்டி
நீங்கள் ஓடுவதற்கு முடிவு செய்யாத வரை நீங்கள் போட்டியில் இல்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் தோற்றாலும், கீழே விழுந்தாலும் பரவாயில்லை. முயற்சி செய்யாமல் இருப்பதற்கு கலந்து கொள்வது சிறந்தது.
MOST
READ:
ஜூலை
மாதத்தில்
பிறந்தவர்கள்
உண்மையில்
எப்படிப்பட்டவர்கள்
தெரியுமா?
தவறுகள்
மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளில் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். மக்களிடமும், சூழ்நிலைகளிடமும் கவனமாக இருங்கள்.