Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!
அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...!
இந்தியாவின் மிகச்சிறந்த மேதைகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். வாழ்க்கைக்கான தத்துவங்களில் இருந்து வெற்றிக்கான ரகசியம் வரை அனைத்தையும் நாம் சாணக்கியரின் அறிவுரைகளில் இருந்து பெறலாம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் எக்காலத்திற்கும் பொருந்த கூடியவையாகும்.

இன்றைய இளைஞர்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அவர்களின் அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளாகும். பெரும்பாலான இளைஞர்கள் மனஅழுத்ததிற்கு ஆளாவதற்கு காரணமே அவர்களின் அலுவலங்களில் நடக்கும் அரசியலை சமாளிக்க முடியாமல்தான். இதை எளிதாக சமாளிக்கும் வழிகளை சாணக்கியர் கூறியுள்ளார்.

நேர்மை
சாணக்கியர் எப்போதும் அதீத நேர்மையுடன் இருக்கக்கூடாது என்று கூறுவார். ஏனெனில் நேராக வளர்ந்த மரங்கள்தான் முதலில் வெட்டப்படும். எங்கு தந்திரமாக இருக்க வேண்டும் எங்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலையில் செய்ய வேண்டியது
எந்தவொரு வேலையையும் தொடங்கும் முன் உங்களுக்குள் மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் செய்கிறேன், இதன் முடிவு என்னவாக இருக்கும், இதில் நான் வெற்றிபெறுவேனா இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு இந்த வேலை தகுதியானதா என்று யோசித்து கொள்ளுங்கள்.

கடின உழைப்பில்
ஒரு வேலையை தொடங்கும் முன் அது தோல்வியில் முடியும் என்று நினைத்தோ அதனை பாதியில் நிறுத்தக்கூடாது. கடினமாக வேலை செய்பவர்களே மகிழ்ச்சியானவர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். தினமும் உங்கள் முன்னேற்றத்தை கண்காணியுங்கள்.

ரகசியங்கள்
மிகப்பெரிய குரு மந்திரம் என்னவெனில் உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களை அழித்துவிடும். ஒருபோதும் வதந்திகளில் ஈடுபடாதீர்கள்.

நட்பில்
அனைத்து நட்பிற்கு பின்னாலும் ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு இருக்க வாய்ப்பில்லை. இது கசப்பான உன்மையாகும். நண்பர்களை வைத்து கொள்ளுங்கள் ஆனால் மிகவும் நெருக்கமான நண்பர்களை வைத்த கொள்ளாதீர்கள்.

பயம்
பயம் உங்களை நெருங்கும் போதே அதனை தாக்கி அழித்து விடுங்கள். கற்றுக்கொள்வதை மட்டும் எப்பொழுதும் நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் உங்களை பயத்தில் இருந்து பாதுகாக்கும் ஒரே விஷயமாகும்.

போட்டி
நீங்கள் ஓடுவதற்கு முடிவு செய்யாத வரை நீங்கள் போட்டியில் இல்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் தோற்றாலும், கீழே விழுந்தாலும் பரவாயில்லை. முயற்சி செய்யாமல் இருப்பதற்கு கலந்து கொள்வது சிறந்தது.

தவறுகள்
மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளில் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். மக்களிடமும், சூழ்நிலைகளிடமும் கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications