Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா? நீங்களே பாருங்க அந்த கொடுமைய
மூன்று வயதுடைய நாய் கிட்டதட்ட 19 பேபி ரப்பரை சாப்பிட்டுட்டு படாத பாடு படுவதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் அதை ஒரு குழந்தைப் போல எப்பொழுதும் கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும். அதிலும் வீட்டில் நாய் போன்றவற்றை வளர்த்தால் எப்பொழுதும் அதை கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.

வெளியில எங்க போகுது, என்ன சாப்பிடுது, என்னத்த பிடிச்சிட்டு வருது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அதை பராமரிக்க வேண்டும். அப்படி ஒரு நாய் என்ன பண்ணிச்சு பாருங்க. குழந்தையின் ரப்பரை காணவில்லை என்ற ஓனருக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.

வாயில் வைக்கும் ரப்பர்
போஸ்டன் கால்நடை மருத்துவமனையில் இந்த வினோதமான வழக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தினமும் குழந்தைக்கு வாயில் வைக்கும் ரப்பரை அந்த நாய் சாப்பிட்டு வந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

பெட் டாக்
இந்த ஏஞ்சல் என்ற செல்ல நாயின் தம்மா துண்டு வயிற்றில் 19 பேபி ரப்பரை எடுத்துள்ளனர். அனிமல் மெடிக்கல் சென்டர் மூலம் மருத்துவர்கள் இந்த சிகிச்சையை செய்துள்ளனர். மோர்டிமர் என்ற 3 வயது நாய் ஒவ்வொரு தடவையும் உணவுக்கு முன் குமட்டல் வரத் தொடங்கியிருப்பதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர். சில மாதங்களாக இப்படி செய்வதைக் கண்டவர்கள் அதை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

நாயின் ஓனர்
இதை கண்டுபிடித்த பிறகு நாயின் ஓனரான எமிலி ஷனஹான் அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும் போது நாயின் வயிற்றில் ஏகப்பட்ட பேபி ரப்பர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல மாதங்களாக
செல்லப்பிராணி மோர்டிமர் பல மாதங்களாக ஷானஹானின் இரண்டு குழந்தைகளிடமிருந்து வாயில் வைக்கும் ரப்பரை எடுத்து விழுங்கி வந்துள்ளதை மருத்துவர்கள் இதன் மூலம் கண்டறிந்து உள்ளனர். எப்படியோ நாயின் வயிற்றில் இருந்த 19 ரப்பர்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டு விட்டது.
தற்போது அந்த சுட்டி நாயும் உயிர் பிழைத்து வீடு திரும்பி உள்ளது.
என்னங்க உங்க வீட்டிலயும் நாய் வளர்க்கிறீங்களா அப்போ கொஞ்சம் கவனமாகவே இருங்க.



Click it and Unblock the Notifications