Just In
- 1 min ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 37 min ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 2 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
Don't Miss
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் நம்பி ஏமாறுவார்கள் என்பது தெரியுமா?
இங்கு அனைவரையும் நம்பி எளிதில் ஏமாறக்கூடிய ராசிக்காரர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் ஏமாளிகள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சிலர் மற்றவர்களை எளிதில் மற்றும் விரைவில் நம்பிவிடுவார்கள். இப்படி ஒருவரைக் கண்மூடித்தனமாக நம்புபவர்கள், மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுவார்கள். ஒருவருக்கு நீங்கள் எளிதில் ஏமாறுவீர்கள் என்பது தெரிந்தால், பின் அவர்களுக்கு உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களும் தெரியக்கூடும். இதன் விளைவாக உங்களை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வார்கள்.
இந்த கட்டுரையில் அனைவரையும் எளிதில் நம்பி ஏமாறக்கூடிய ராசிக்காரர்கள் யார்யார் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
முக்கியமாக இந்த பட்டியலில் இடம் பெற்ற ராசிக்காரர்கள் அனைவருமே எளிதில் நம்பி ஏமாறக்கூடியவர்கள். சரி, இப்போது மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பி ஏமாறக்கூடிய ராசிக்காரர்கள் யார் என்று காண்போம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல் தன்னைப் புண்படுத்தியவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விரைவில் மறந்து மீண்டும் தன்னைப் புண்படுத்தியவர்களை மன்னித்து, அவர்களது நல்ல குணத்தை மட்டும் மனதில் கொண்டு அவர்களை நம்பி மீண்டும் ஏமாறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக அனைவருமே எளிதில் நம்பிவிடுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சற்று குழப்பத்துடனேயே இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களால் ஏமாற்றப்படுவது போன்று தோன்றினால், அதற்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்வார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் காதலித்து ஏமாற்றம் அடைவார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களை எவ்வளவு தான் எச்சரித்தாலும், இந்த ராசிக்காரர்கள் காதலின் மீது நம்பிக்கை கொண்டு விழ விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருவரைக் காதலிக்கும் போது, இவர்களது ஆழ்மனம் சொல்வதைக் கேட்காமல் கண்மூடித்தனமாக காதலிப்பவரை நம்பி, நாளடைவில் காதல் தோல்வியால் கஷ்டப்படுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புத்திசாலி மற்றும் மிகவும் அப்பாவியாக காட்சியளிப்பர். இந்த ராசிக்காரங்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்கள் நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்படி இவர்கள் நினைப்பது சரியானது அல்ல. மறுபுறம், இந்த ராசிக்காரர்கள் எங்கேனும் பயணத்தை மேற்கொண்டால், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் பார்க்கும் அனைவரையும் பாவம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.
கடகம்
வாழ்க்கையில் உள்ள பல விஷயங்களால், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நாசூக்காக அடக்கி ஆளப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மோசமான காதல் முறிவையோ அல்லது தீவிரமான வாக்குவாதத்தினால் பிரியும் போது தான், இந்த ராசிக்காரர்கள் இதற்கு தனது அளவுக்கு அதிகமான நம்பிக்கையே காரணம் என்று உணர்வார்கள். அதே சமயம் என்ன தான் தன் காதலி/காதலன் தனக்கு மன காயத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள். இந்த உணர்வு தன் காதலன்/காதலியின் மீது மட்டுமின்றி, மற்றவர்கள் மீதும் இருக்கும்.