Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மரண ரகசியம் பற்றி எமனே தன்வாயால் என்ன சொல்லிருக்காரு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
மனிதர்களுடைய மரணத்தோட ரகசியம் பற்றி எமதர்மன் தன்னுடைய வாயாலே என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் காணப்போகிறோம்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாளில் இறப்பு என்பதை சந்தித்து தான் ஆக வேண்டும். இறப்பு என்று வரும் போது அது ஏழை, பணக்காரர், மதம்ள, சாதி என்று எதையுமே அது பார்ப்பதில்லை. எல்லாருக்கும் சமமான பொதுவான ஒரு விஷயம் இந்த மரணம். அதனால் தான் மரணத்தை பற்றிய எல்லா சுவாரஸ்யமான தகவல்களையும், கேள்விகளையும் அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.

இங்கே அந்த மறைந்த சுவாரஸ்யங்களை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். மரணத்தின் அதிபதியான எமதர்ம ராஜா எப்படி ஒருவரை மரணிக்க வைக்கிறார் என்பதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இங்கே பார்க்க உள்ளோம். பண்டைய நூல்களின் படி மரணம் மற்றும் ஆத்மாக்கு இடையேயான ரகசியங்களை பற்றி இங்கே விவாதிக்க உள்ளோம்.

நச்கெட்டா வின் 3 வரங்கள்
ஒரு நாள் நச்கெட்டா என்ற சிறுவன் எமதர்ம ராஜாவை பார்க்க சென்றார். தனக்கு மூன்று வரங்கள் தருமாறு எமதர்ம ராஜாவிடம் வினவினார். முதல் வரம் எனக்கு என் தந்தையின் அன்பு வேண்டும், இரண்டாவது நான் அக்னி வித்யா பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மூன்றாவது இறப்பிற்குப் ஆத்மாவிற்கும் இடையேயான சுவராஸ்யத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் எமதர்ம ராஜா கடைசி வரத்தை மட்டும் தர மறுத்தார். ஆனால் அந்த சிறுவனின் வற்புறுத்தலால் அதைக் கூற ஒப்புக் கொண்டார்.

ஓம் எனும் பிரணவ மந்திரம்
ஓம் எனும் பிரணவ மந்திரம் தான் பரமாத்மாவின் ஸ்வரூபம் ஆகும். ஒரு மனிதனின் இதயம் என்பது பிரம்மா வாழ்கின்ற இடம். எனவே ஓம் எனும் பிரணவ மந்திரத்தை மனசார ஜெபிப்பது கடவுளை நினைவு படுத்துகிறது.

ஆன்மா
ஒரு மனிதனின் ஆத்மாவானது இறப்பிற்கு பிறகு மரணிக்காது என்கிறார் எமதர்ம ராஜா. ஆனால் அவனின் உடல் மட்டுமே ஒரு நாள் மரணத்தை சந்திக்கும். ஏனெனில் ஆன்மாவிற்கு பிறப்பு, இறப்பு என்று எதுவுமே கிடையாது.

பிரம்ம ரூபம்
ஒரு நபர் இறந்த பிறகு அவரின் ஆன்மா முழு சுதந்திரம் அடைகிறது. இந்த சுதந்திர சுழற்சி தான் பிரம்ம ரூபம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அவரின் ஆன்மா கடவுளுக்குள் சேருகிறது.

கடவுளின் சக்தி
கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், நார்த்தீகவாதிகளாக இருப்பவர்கள் இறப்பிற்கு பிறகு ஒரு அமைதியை தேடி அவர்களின் ஆன்மா அலைகின்றது என்கிறார் எமதர்ம ராஜா. அவர்களின் ஆசைகள், பொன் பொருள், இன்பங்கள் போன்றவை நம் ஆத்ம வழியை பாழ்படுத்துகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் மனிதன் எல்லா விதமான ஆசைகளையும் துறந்து நித்திய பேரின்பத்தை அடைகிறான்.

ஆன்மீகம்
ஒருவரின் மரணத்திற்கு பிறகு அமைதி நிலையை அடைய ஆன்மீகம் கைகொடுக்கிறது. ஆன்மாவின் பயணத்தை நாம் அறிந்து இருந்தால் இயல்பான பயணம் மேற்கொள்ள எளிதாக இருக்கும். எனவே ஒருவரின் ஆன்மீகத் தன்மை மனிதர்களை உண்மையாகவும், நேர்மறையான குணங்களைக் கொண்டு மனிதர்களுடன் பழகவும் உதவுகிறது. இதனால் மரணத்திற்கு பிறகு நீங்கள் ஒரு நிம்மதியான ஆன்மாவையும் பெற முடியும்.



Click it and Unblock the Notifications











