Latest Updates
-
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்!
அனைத்து மந்திரங்களும் 'ஓம்' என தொடங்கி 'ஸ்வாஹ' என்று முடிவதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கே புரியும் கிட்டதட்ட அனைத்து மந்திரங்களும் ஓம் என்னும் சொல்லில் தொடங்கி ஸ்வாஹா என்னும் சொல்லுடன் முடிவடையும். இதற்கு காரணம் என்பதை நாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை.
உலகம் முழுவதும் இந்து கடவுள்களை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இந்து கடவுள்களை வணங்குபவர்களே அதிகம். ஒவ்வொரு கடவுளையும் வனனகுவதற்கு ஒவ்வொரு வழிமுறை பின்பற்றப்பட்டு வந்தாலும் கடவுள் வழிபாட்டுக்கென இருக்கும் ஒரு பொதுவான முறை மந்திரம் கூறி வழிபடுவதாகும்.

ஆனால் நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கே புரியும் கிட்டதட்ட அனைத்து மந்திரங்களும் ஓம் என்னும் சொல்லில் தொடங்கி ஸ்வாஹா என்னும் சொல்லுடன் முடிவடையும். இதற்கு காரணம் என்பதை நாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதற்கு பின் ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது. அனைத்து மந்திரங்களுக்கும் முன்னால் ஓம் இருக்க என்ன காரணமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓம்
கடவுளை வழிபடும்போது மந்திரங்கள் கூறி வழிபடுவது கடவுளின் பூரணமான அருளை பெற்றுத்தரும்.வேதங்களில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு மந்திரமும் ஓம் என்னும் புனிதமான பிரணவ மந்திரத்துடனேயே தொடங்கும். இதற்கான காரணம் தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வேதங்கள் என்ன சொல்கிறது?
இந்த உலகத்தை பற்றிய அனைத்து ரகசியங்களும், வாழ்க்கை நெறிகளும் வேதங்களில் உள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வேதங்கள் இந்த உலகை பற்றி கூறுவது என்னவென்றால் இந்த உலகம் மூன்று பண்புகளை கொண்டது. அவை யாதெனில் ராஜ், சாத் மற்றும் டாம்.

ஈகாஷர் பிராம்
ஓம் என்னும் பிரணவ மந்திரம் ஈகாஷர் பிராம் என்னும் கடவுளின் பெயராகும். இவர்தான் முழு இயற்கையின் படைக்கும் மற்றும் அழிக்கும் கடவுளாவார். மூன்று பண்புகளை கொண்ட மூவுலகத்தையும் ஆள்வது இவர்தான் என்று வேதங்கள் கூறுகிறது. இவர்தான் அனைத்திற்கும் அடிப்படை ஆவார்.

பரபிரம்மா
விநாயகரும் முழுமுதற் கடவுளாவார். அதனால்தான் அவரை வணங்கியே அனைத்து காரியங்களும் தொடங்கப்படுகிறது. கணேசன் என்பது அவரை மட்டும் குறிப்பதில்லை. குணங்களின் அதிபதி என்பதையம் குறிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பிள்ளையார் தேவர்களுக்கு மட்டும் அதிபதி ள்ள குணங்களுக்கும் அவர்தான் அதிபதி.

ஓம் என்பதன் காரணம்
இதனால்தான் ஓம் என்பது பிள்ளையாரின் அடையளமாக கருதப்படுகிறது. எனவே ஓம் என்பதை கூறி எந்த செயலை தொடங்கினாலும் அது மங்களகரமாக முடியும் என வேதங்கள் கூறுகிறது. அதனால்தான் அவர் முழுமுதற் பொருள்.

ஓம் மந்திரத்தை உச்சரித்தல்
இதனால்தான் அணைத்து மந்திரங்களின் முன்னும் ஓம் என்னும் சொல் கூறப்படுகிறது. ஓம் என்னும் சொல்லை கூறிவிட்டு மற்ற கடவுள்களை மந்திரங்கள் கூறி வழிபடும்போது அது உணர்த்துவது யாதெனில் விநாயருக்கு பின்தான் அனைத்து கடவுள்களையும் வணங்கவேண்டும் என்பதாகும். இந்த ஓம் என்னும் சொல் புனிதமானதாகவும் அளவில்லாத சக்தி உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

ஸ்வாஹா என்னும் சொல்
உலகத்தை உருவாக்க தொடங்கியபோது தேவர்கள் உணவு பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே அவர்கள் படைப்பின் கடவுளான பபிரம்மதேவரை அடைக்கலம் புகுந்தனர். பிரம்மதேவர் மனிதர்கள் யாகத்தில் அளிக்கும் பிரசாதங்களை தேவர்களுக்காக பயன்படுத்த முடிவெடுத்தார். அக்னிக்கு பிரசாதத்தை எரிக்கும் திறன் இல்லை எனவே அவர் வேறு யோசனை செய்தார்.

பிரம்மதேவரின் தவம்
பிரம்மதேவர் மூலப்பொருளான முழுமுதற் கடவுளை நோக்கி தவமிருந்தார். அந்த கடவுள் பிரம்மாவின் தவத்தை மெச்சி அவர் முன் தோன்றி அவர் விரும்புவது என்னவென்று கேட்டது. அவர் அக்னியுடன் இணைவதற்கு தேவிக்கு வேண்டுகள் விடுத்தார், அதன்மூலம் அக்னி பிரசாதங்களை எரிக்கும் தன்மை பெரும் என அவர் கூறினார்.

பிரம்மாவின் முடிவு
பிரசாதங்கள் தேவியின் இறுதியில் கூறி படைக்கப்பட்டால் மட்டுமே அவை தேவர்களை வந்தடையும் என்று பிரம்மா கூறினார். எனவே தேவி அக்னியின் துணையாக மாறி அவருடன் இணைந்தார். அதனால் அவர் பெயர் சொல்லி படைக்கப்பட்ட பொருட்கள் யாவும் தேவர்களை வந்து அடைந்தது. அதன்மூலம் ஸ்வாஹா என்னும் முடிவுடன் மந்திரத்தை கூறி பொருட்களை தீயில் போடும்போதெல்லாம் அதனை தேவர்களுக்கு வழங்கும் சக்தியை அக்னிதேவன் தன் மனைவியின் உதவியால் பெற்றார். நீங்கள் ஸ்வாஹா என்று இறுதியில் கூறி படைத்தால் மட்டுமே உங்களின் பிரசாதங்களை கடவுள் ஏற்றுக்கொள்வார்.



Click it and Unblock the Notifications