Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
கடவுள் விஷ்ணு மிருத்யு லோகத்துக்கு எதற்கான சென்றார்?... அதற்கும் உலக அழிவிற்கும் சம்பந்தம் இருக்கிறத
கடவுள் விஷ்ணுவைப் பற்றியும் அவருடைய மிருத்யு லோகம் பயணங்கள் பற்றியும் இங்கே விரிவாகப் பார்ப்போம்.
கடவுள் விஷ்ணு ஒரு நாள் மிருத்யு லோகம் சென்றார். அன்னை லட்சுமி தேவியும் தன்னை அழைத்துச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் அதற்கு கடவுள் விஷ்ணு அவர்கள் மிருத்யு லோகம் பற்றிய முழு விஷயங்களும் உனக்கு தெரியாது. அங்கே பின்பற்றப்படும் விதிமுறைகள் பற்றி உனக்கு தெரியாது எனவே உன்னை அங்கே அழைத்து செல்வது பாதுகாப்பானது இல்லை என்றார்.

ஆனால் லட்சுமி தேவி அவரை விடுவதாக இல்லை. மறுபடியும் மறுபடியும் அவரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டார். கடவுள் விஷ்ணு மிருத்யு லோகத்துக்கு எதற்கான சென்றார்?... அதற்கும் உலக அழிவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சிலர் சந்தேகிக்கின்றர். ஆனால் இந்த மிருத்யு லோக பயணத்துக்கும் உலக அழிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மிருத்யு லோகம் நோக்கி புறப்படுதல்
லட்சுமி தேவியிடம் மிருத்யு லோகத்தின் அனைத்து விதிகளையும் நீ மறக்காமல் பின்பற்ற வேண்டும் என கூறினார் கடவுள் விஷ்ணு பகவான். எந்த சூழ்நிலையிலும் விதிமுறைகளை மீறக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார். லட்சுமி தேவியும் அதற்கு சம்மதித்ததால் இருவரும் மிருத்யு லோகம் நோக்கி புறப்பட்டனர். ஒரு இடத்தில் லட்சுமி தேவியை அங்கயே இருக்கும் படி விஷ்ணு பகவான் கூறிவிட்டு தன் பயணத்தை தொடங்கலானார். அன்னை லட்சுமி தேவியும் அதை ஒப்புக் கொண்டார்.

விஷ்ணு பகவான் திரும்பவில்லை
மிருத்யு லோகத்தினுள் சென்ற விஷ்ணு பகவான் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. பொறுமை இழந்த லட்சுமி தேவி விஷ்ணு பகவான் சென்ற திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். லட்சுமி தேவி கொஞ்சம் தூரம் சென்றதும் அங்கே ஒரு அழகான கடுகு தோட்டத்தை காணலானார். எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கி கண்ணை பறித்துக் கொண்டு இருந்தனர். அந்த அழகில் மயங்கி விஷ்ணு பகவான் கூறிய விதிமுறைகளை அவர் மறந்து விட்டார். தன் ஆசையை அடக்க முடியாமல் அங்கிருந்த அந்த அழகிய மஞ்சள் வண்ண மலரை எடுத்து தன் கருமையான கூந்தலில் சூடிக் கொண்டார்.

பழங்களை காணுதல்
அப்படியே லட்சுமி தேவி கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அழகான பழத்தோட்டங்களை காண்கிறார். அதின் சுவையை ருசிப்பதற்காக அங்கிருந்த பழம் ஒன்றை எடுத்து சாப்பிடுகிறார்.அப்பொழுது தான் எதிரே தன்னை நோக்கியும் வரும் கடவுள் விஷ்ணுவை அவர் காண்கிறார். அப்பொழுது தான் விஷ்ணு கூறியது அவருக்கு நினைவுக்கு வருகிறது. தன்னை கேட்காமல் எந்த ஒரு முடிவையும் இங்கே எடுக்க கூடாது என்று சொன்னாரே என்று லட்சுமி தேவி யோசிக்கிறார்.

விஷ்ணு வந்தது ஒரு மாயை
விஷ்ணு வருவதாக லட்சுமி தேவி நினைத்தது ஒரு மாயை ஆகிறது. ஆனால் அவர் எதிரே நின்றவரோ, பூமியில் உள்ள விவசாயி, ஒரு நல்ல மனிதாபிமான தாராளமான நபர் தான் இருந்தார். தன் பண்ணையில் இருந்து என் அனுமதி இல்லாமல் பழங்களை பறித்ததற்காக பன்னிரண்டு ஆண்டுகள் என் வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

பன்னிரண்டு ஆண்டுகள்
இந்த பன்னிரண்டு ஆண்டுகளிலும் சகல செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமி தேவியே தன் வீட்டில் தங்கி விடுவதால் அந்த விவசாயி பெரிய பணக்காரராக ஆகி விடுகிறார். பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்ததும் லட்சுமி தேவி அந்த விவசாயின் வீட்டை விட்டு புறப்பட தயாரானார். இன்னும் சிறுது காலம் இருந்து விட்டு செல்ல வேண்டும் என்பது அந்த விவசாயின் ஆசையாக இருந்தது.

தேவியின் ஆசிர்வாதம்
ஏகாதசி நாளில் வீட்டை எல்லாம் சுத்தம் செய்து என் திருவுருவ சிலையை வைத்து பூஜித்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் என் ஆசிர்வாதம் எப்பொழுதும் உனக்கு கிடைக்கும் என்று கூறிவிட்டு சென்றார் அன்னை லட்சுமி தேவி. இந்த வழிபாட்டின் மூலம் அந்த விவசாயி இன்னும் ஓராண்டுகள் லட்சுமி தேவியின் அருளை பெற்றார். இந்த நாளைத் தான் நாம் ஒவ்வொரு வருடமும் த்ரோயதசி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications











