Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
திருமணமான முதல் 5 நாள், மருமகளை நிர்வாணமாக அமர வைக்கும் வினோத சடங்கு!
இந்தியாவின் இப்பகுதியில் முதல் 5 நாள் மருமகளை நிர்வாணமாக அமர வைக்கும் வினோத பழக்கம்!
இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ந்துக் கொண்டே வருகிறது. நிலாவில் பெரும் ஆராய்சிகள் நடக்கின்றன. கூடிய விரைவில் வல்லரசு நாடாகிவிடும் என இந்தியாவின் ஏறுமுகத்தை பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் பல மாநிலங்களில் பழங்குடி மழைவாழ் மக்கள் மத்தியில் சில பழமையான, விசித்திரமான சடங்கு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

Image Source: Google
பழமைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால், அறிவியல் வளர்ந்த பிறகு கண்மூடி தனமாக வெறுமென காரண, காரியமே இல்லாமல் சில மோசமான சடங்குகளை பின்பற்றுவதை தான் திருத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் இருக்கும் ஒரு பழங்குடி மலைவாழ் மக்கள் மத்தியில் இன்றளவும் பழக்கத்தில் பின்பற்றப்படும் வினோதமாக கருதப்படும் ஒரு சடங்கினை பற்றி தான் இந்த தொகுப்பினில் காணவிருக்கிறோம்...

பழங்குடியினர்!
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு மலைவாழ் பழங்குடியினர் மத்தியில், ஒரு சடங்கு முறை இன்றளவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை யாராலும் கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆம்! திருமணமான நாளில் இருந்து முதல் ஐந்து நாட்கள் மணப்பெண் நிர்வாணமாக வீட்டில் இருக்க வேண்டும்.

வினோதம்!
இதுவரை நாம் அறிந்ததில், படித்ததில் இது மிகவும் வினோதமான சடங்காக இருக்கிறது. மிக நீண்ட காலமாக இந்த சடங்கு முறையை ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அந்த மலைவாழ் பழங்குடியினர் பின்பற்றி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

குக்கிராமம்!
ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த சடங்கை பின்பற்றி வரும் அந்த பழங்குடியினர் ஒரு குக்கிராமத்தில் வசித்து வருகிறார். இங்கே இன்றளவிலும் திருமணம் முடித்த புதுப்பெண் முதல் ஐந்து நாட்கள் கணவன் வீட்டில் நிர்வாணமாக ஒரு அறையில் தங்க வேண்டிய சடங்கு முறை பின்பற்றப்படுகிறது.

தடை!
புதுமணப்பெண் நிர்வாணமாக இருக்கும் அந்த ஐந்து நாட்களில் கணவன் - மனைவி இடையே தாம்பத்தியம் குறித்தோ, ரொமான்ஸ் சார்ந்த பேச்சுக்களோ இருக்கவே கூடாது.
ஏன், அந்த ஐந்து நாட்களில் புதுமண தம்பதியினர் உடல் ரீதியான உறவில் இணையவோ ஒருவரை ஒருவர் தொட்டு கூட பேச கூடாது என்றும் அறியப்படுகிறது.

நம்பிக்கை!
ஹிமாச்சல பிரதேசத்தின் அந்த குக்கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடி மக்கள் இந்த சடங்கின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த சடங்கு நல்லப்படியாக முடிந்து விட்டால், கணவன் - மனைவி உறவில் ஒரு கட்டுப்பாடு இருக்கும். அந்த திருமண வாழ்க்கை ஒருபோதும் தோல்வியில் முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கேடு!
ஒருவேளை யாரேனும் ஒரு புதுமண தம்பதியர் அந்த ஐந்து நாட்களில் புதுமணப்பெண் நிர்வாணமாக இருக்கும் போது தொட்டு பேசி விட்டாலோ, அல்லது உறவுக் கொண்டு விட்டாலோ, அது அந்த கிராமத்திற்கு கேடு விளைவிக்கும் அல்லது பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என்று அந்த மலைவாழ் பழங்குடியினர் நம்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications











