Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
திருமணமான முதல் 5 நாள், மருமகளை நிர்வாணமாக அமர வைக்கும் வினோத சடங்கு!
இந்தியாவின் இப்பகுதியில் முதல் 5 நாள் மருமகளை நிர்வாணமாக அமர வைக்கும் வினோத பழக்கம்!
இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ந்துக் கொண்டே வருகிறது. நிலாவில் பெரும் ஆராய்சிகள் நடக்கின்றன. கூடிய விரைவில் வல்லரசு நாடாகிவிடும் என இந்தியாவின் ஏறுமுகத்தை பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் பல மாநிலங்களில் பழங்குடி மழைவாழ் மக்கள் மத்தியில் சில பழமையான, விசித்திரமான சடங்கு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

Image Source: Google
பழமைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால், அறிவியல் வளர்ந்த பிறகு கண்மூடி தனமாக வெறுமென காரண, காரியமே இல்லாமல் சில மோசமான சடங்குகளை பின்பற்றுவதை தான் திருத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் இருக்கும் ஒரு பழங்குடி மலைவாழ் மக்கள் மத்தியில் இன்றளவும் பழக்கத்தில் பின்பற்றப்படும் வினோதமாக கருதப்படும் ஒரு சடங்கினை பற்றி தான் இந்த தொகுப்பினில் காணவிருக்கிறோம்...

பழங்குடியினர்!
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு மலைவாழ் பழங்குடியினர் மத்தியில், ஒரு சடங்கு முறை இன்றளவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை யாராலும் கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆம்! திருமணமான நாளில் இருந்து முதல் ஐந்து நாட்கள் மணப்பெண் நிர்வாணமாக வீட்டில் இருக்க வேண்டும்.

வினோதம்!
இதுவரை நாம் அறிந்ததில், படித்ததில் இது மிகவும் வினோதமான சடங்காக இருக்கிறது. மிக நீண்ட காலமாக இந்த சடங்கு முறையை ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அந்த மலைவாழ் பழங்குடியினர் பின்பற்றி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

குக்கிராமம்!
ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த சடங்கை பின்பற்றி வரும் அந்த பழங்குடியினர் ஒரு குக்கிராமத்தில் வசித்து வருகிறார். இங்கே இன்றளவிலும் திருமணம் முடித்த புதுப்பெண் முதல் ஐந்து நாட்கள் கணவன் வீட்டில் நிர்வாணமாக ஒரு அறையில் தங்க வேண்டிய சடங்கு முறை பின்பற்றப்படுகிறது.

தடை!
புதுமணப்பெண் நிர்வாணமாக இருக்கும் அந்த ஐந்து நாட்களில் கணவன் - மனைவி இடையே தாம்பத்தியம் குறித்தோ, ரொமான்ஸ் சார்ந்த பேச்சுக்களோ இருக்கவே கூடாது.
ஏன், அந்த ஐந்து நாட்களில் புதுமண தம்பதியினர் உடல் ரீதியான உறவில் இணையவோ ஒருவரை ஒருவர் தொட்டு கூட பேச கூடாது என்றும் அறியப்படுகிறது.

நம்பிக்கை!
ஹிமாச்சல பிரதேசத்தின் அந்த குக்கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடி மக்கள் இந்த சடங்கின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த சடங்கு நல்லப்படியாக முடிந்து விட்டால், கணவன் - மனைவி உறவில் ஒரு கட்டுப்பாடு இருக்கும். அந்த திருமண வாழ்க்கை ஒருபோதும் தோல்வியில் முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கேடு!
ஒருவேளை யாரேனும் ஒரு புதுமண தம்பதியர் அந்த ஐந்து நாட்களில் புதுமணப்பெண் நிர்வாணமாக இருக்கும் போது தொட்டு பேசி விட்டாலோ, அல்லது உறவுக் கொண்டு விட்டாலோ, அது அந்த கிராமத்திற்கு கேடு விளைவிக்கும் அல்லது பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என்று அந்த மலைவாழ் பழங்குடியினர் நம்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications