Just In
- 22 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 50 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தாம்பத்தியத்திற்காக பின்பற்றப்படும் சில விசித்திர நடைமுறைகள்!
தாம்பத்தியத்திற்கு பல நாடுகளில் பின்பற்றப்படுகிற சில விசித்திரமான நடைமுறைகள்.
இன்றளவும் கர்ப்பம் என்பது மிகவும் உன்னதமான தருணமாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்தில் அதைச் சுற்றி ஏகப்பட்ட கற்பிதங்கள் இருக்கிறது. என்ன தான் நவீனம் நாகரிகம் என்று சொல்லிக் கொண்டாலும் கர்ப்பம் என்று வரும் போது சற்றே தயங்கி யோசிக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு பக்கம் கர்ப்பத்தடை மாத்திரைகள், கர்ப்பமடையாமல் இருப்பதற்கான வழிமுறைகள் என்று தேடிச் சென்றாலும் இன்னொருபக்கம் குழந்தை வேண்டும் என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை, அதற்காக சிகிச்சை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூகத்தில் குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு அவசியமான இன்றியமையாத ஒன்றாகவே மாற்றி வைத்து விட்டார்கள்.புதிதாக திருமணமான பெண் இன்னும் கருத்தரிக்கவில்லை என்று சொன்னால் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி புதிதாக விளக்கவேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொருவரும் பெரும் மருத்துவர்களாக, கடவுளாக என அவதாரம் எடுத்து அட்வைஸ் மழை பொழிவார்கள். நம்மூரில் மட்டுமல்ல குழந்தை பிறக்கவும் தாம்பத்தியத்தில் சிறக்கவும் உலகம் முழுவதிலுமிருந்து வேண்டுதல்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் சில விசித்திரமான வேண்டுதல்கள் முறைகளைப் பற்றி பார்க்கலாம்.
சிலை :
பாரிசில் பிரி லாச்சைஸ் என்னும் இடத்தில் இருக்கிறது விக்டர் நொய்ரின் சிலை. இவர் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். 1800களில் இறந்து விட்டார். அவரது முழு உருவச் சிலை அப்படியே வடிக்கப்பட்டது. அவருக்கு அருகில் அவருடைய தொப்பியும் இருப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு வருபவர்கள் சிலையின் உதட்டோடு முத்தம் கொடுக்கிறார்கள். அதோடு சிலையின் பிறப்புறுப்பில் கைவைத்து தேய்க்கிறார்கள்.
இப்படிச் செய்வதினால் தங்களது தாம்பத்திய வாழ்க்கை நிலைபெறும் அதோடு குழந்தைப் பேறு உண்டாகும் என்று நம்புகிறார்கள். இந்த வழக்கம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட இந்த வழக்கத்தினை பின்பற்றுகிறார்கள். சிலர் பரிசுப் பொருட்கள், பூங்கொத்துகள் ஆகியவற்றையும் வைத்துச் செல்கிறார்கள்.
சேரில் உட்காரு :
இத்தாலியின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்று நபலெஸ். அங்கே தான் அதிசயத்தை நிகழ்த்தக்கூடிய மாய சேர் இருக்கிறது. குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த மாயச் சேரில் போய் உட்கார்ந்து உங்களுடைய வேண்டுதலை சொல்லிவிட்டு வரவேண்டும்.
இந்த வழக்கம் அங்கே கிட்டதட்ட 200 ஆண்டுகளாகவே இருக்கிறதாம். அதோடு இங்கு வந்து வேண்டிக் கொண்ட பெண்களுக்கு குழந்தைகளும் பிறப்பதால் நம்பிக்கை இன்றளவும் தொடர்கிறது. குழந்தை பிறந்ததும் குழந்தையின் புகைப்படத்தை மறக்காமல் இங்கே அனுப்புகிறார்கள். அவர்களும் அதனை சுவரில் மாட்டி வைக்கிறார்கள். இப்படி வைப்பதனால் புதிதாக வரும் பெண்களுக்கு நம்பிக்கை வரும் என்கிறார்கள்.
புள்ளிவிவரமே சொல்லுதே.... :
இங்கிலாந்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது டோர்செட் என்னும் இடம் . இங்கே தரையில் மிகப்பெரிய அளவில் கிட்டத்தட்ட 180 அடி அளவில் செரின் அப்பாஸ் என்பவரது ஒவியத்தை வரைந்திருக்கிறார்கள். மிகப்பெரிய புல் மலையில் உடலின் அவுட்லைன் போல வழித்தடத்தை அமைத்திருக்கிறார்கள். அதனை காட்டுவதற்காக நடுவில் சுண்ணாம்பும் கொட்டி வைத்திருக்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தை சுத்தமாக்குவார்களாம்.
இந்த ஓவியத்தின் மீது படுத்துக் கொண்டு வேண்டிக் கொண்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிகப்பெரிய மனிதனின் ஓவியம் இது என்கிறார்கள். அங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி அந்த நாட்டிலேயே அதிக குழந்தைப்பேறு கொண்ட நகரம் அது தானாம்.
நுழைந்தால் குழந்தை! :
இதுவும் இங்கிலாந்தில் தான் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக கோர்னிஷ் ஹோல் என்ற சிலை இருக்கிறது. மிகப்பெரிய வளையம் போல இருக்கும் இதற்குள் நுழைந்து வெளியே வந்தால் பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்கிறார்கள்.
அதுவும் முழு நிலவு நாளன்று ஏழுமுறை அல்லது ஒன்பது முறை அந்த வளையத்திற்குள் நுழைந்து வெளியே வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த சிலை மூன்றாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
நெஸ்ட் சூப் :
சீனாவில் மணமக்களுக்கே இதனை செய்து ஆட்டம் காண்பித்துவிடுகிறார்கள். முதலில் மணமகன் மணமகளை தூக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் கரித்துண்டுகளின் மீது நடந்து வர வேண்டும். உள்ளே நுழைந்து சில சடங்கு சம்பிரதயாங்களை செய்கிறார்கள்.
அதன் பின்னர் மணமகளுக்கு ஒரு சூப் வழங்கப்படுகிறது. அந்த சூப் ஸ்விஃப்லெட் என்ற ஓரு பறவை கட்டிய கூட்டினைக் கொண்டு சூப் தயாரிக்கப்படுவதாகும்.
இது நாட்டு மருந்தாக செயல்படும் இதனை குடிப்பதினால் தாம்பத்திய உறவு மேம்படும் குழந்தைப் பேறு அதிகரிக்கும்.
தண்ணீர் :
ஹங்கேரியில் இந்த நடைமுறை. இளம் பெண்கள் மீது குறிப்பாக புதிதாக திருமணமான பெண்கள் மீது தண்ணீர் ஊற்றும் வழக்கத்தினை பின்பற்றுகிறார்கள். இந்த கொண்டாட்ட, ஈஸ்டரின் போது நடைபெறுகிறது. பெண்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து வந்து நிற்க ஆண்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊறுகிறார்கள்.
இந்த நிகழ்வு யாரால் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் இந்த வழக்கத்தினை பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து வருவதாக சொல்கிறார்கள். இப்படி தண்ணீர் ஊற்றி சடங்கு முறைகளை செய்வதினால் பெண்களின் பாவங்கள் அழியும் என்று நம்பப்படுகிறது.
கடல் மாதா :
தாய்லாந்தில் உள்ள ப்ரா நாங் என்ற கடற்கரையில் அமைந்திருக்கிறது இந்த வழிபாட்டுத்தலம் ஆண்களின் உடல்நலனுக்கும், குழந்தை பேறுக்கும் பெயர் கொண்ட இடமாக இருக்கிறது. முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் ப்ரா நாங் என்ற இளவரசி வசித்து வந்திருக்கிறார் அவருடைய கணவர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றவர் நீண்ட நாட்களாகியும் திரும்பவில்லை.
குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகும் கணவர் திரும்பி வராததைக் கண்டு அச்சமடைந்த ப்ரா கணவருக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதை வேண்டிக்கொண்டு ஆண்களின் பிறப்புறுப்பினை வடிமைத்து வைத்து வேண்டுதல் நடத்தியிருக்கிறார். காலத்தை கணக்கிட வேண்டி, குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்று என உறுப்பினை செய்து வைத்து வேண்டுதலை தொடர்ந்திருக்கிறார்.
இன்றும் அங்கு வருபவர்கள் அந்த குகைக்குள் பொம்மை உறுப்பினை வாங்கி வைத்துவிட்டு வேண்டிக் கொண்டு செல்கிறார்கள்.
மரம் :
பேங்காக்கில் இந்த வழக்கம் இருக்கிறது. சாவோ மே டுப்டிம் என்ற மரம் பெண்களுக்கு தாய்மைப் பேறு வழங்கக்கூடிய மரமாக பார்க்கப்படுகிறது. இங்கே வரும் பெண்கள் அந்த மரத்தை கட்டியணைத்துக் கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். இங்கு நிறைய சுற்றுலா பயணிகளும் வருகிறார்களாம். சிலர் மரத்திற்கு பூ, பரிசுப் பொருட்கள், சிலைகள் ஆகியவற்றை வாங்கி வைக்கிறார்கள்.
கிரேக்கம் :
கிரேக்கத்தில் கொண்டாடப்படுகிற டியோனைஸ் என்ற பாரம்பரியத்திருவிழாவில் குழந்தைப் பேறுக்கான வேண்டுதல்கள் நடைபெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணான சிமிலி கருவுற்றிருந்த போது ஏழாம் மாதம் குறைப்பிரசவம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார், ஆனால் அவரது கணவரான ஜியுஸ் குழந்தையை சிமிலி வயிற்றிலிருந்து எடுத்து காப்பாற்றினாராம்.
அவர்களை நினைவுகூறி இந்த விழா நடத்தப்படுகிறது. ஆனால் இதில் வெறும் வர்த்தகம் தான் நிறைந்திருகிறது. எல்லாரும் கமர்ஷியலாக எப்படி இதனை பிரபலப்படுத்தலாம் என்று தான் பார்க்கிறார்கள் என்று சொல்லி பழைய நம்பிக்கைகளை பின்பற்றி வருபவர்கள் இந்த கொண்டாட்டத்திற்கு எதிராக நிற்கிறார்கள். ஆனாலும் மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குழந்தை வேண்டாமா? :
துருக்கியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இஸ்தான்புல். இங்கே ஹஜியா சோபியா என்ற ஒர் அருங்காட்சியகம் இருக்கிறது. இங்கிருக்கும் ஒர் அறையில் உங்களுக்கு குழந்தை வேண்டாம் என்றால் இங்கே கையை வைக்காதீர்கள் என்று விளம்பப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அறைக்குள் நுழைந்தால் நீண்ட வரிசையில் மக்கள் நின்று ஒரு சிறிய துவாரத்திற்குள் தங்கள் கைவிரலை நுழைத்து விட்டு வருகிறார்கள்.
அங்கே புனித நீர் வருகிறதாம் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் அதற்குள் கைவைத்து ஒரு சுற்று சுற்றினால் கையில் தண்ணீர் படுகிறது இப்படிப்பட்டால் புனித நீர் மூலமாக தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டோம் என்ற நம்பிக்கையிடன் செல்கிறார்கள்.