Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
நீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி !
போலீஸ் அதிகாரி ஆமையை காப்பாற்றிய சுவாரஸ்யமான கதை
பார்க்கிற விஷயங்களை ஆராயாமல் ஓர் முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் என்று தான் சொல்ல வேண்டும். இன்றைக்கு பெருகி விட்டிருக்கிற வாகனங்களால் மனிதர்களாலேயே தைரியமாக சாலையில் நடந்து சென்று வர முடிவதில்லை. இந்நிலையில் விலங்குகளின் பாட்டை என்றைக்காவது நினைத்திருக்கிறோமா?
காட்டை எல்லாம் அழித்து வீடு, நமக்கான வாழ்விடங்களை கட்டிக் கொண்டு விட்டோம் காட்டையே தன் வீடாய் கொண்டிருந்த விலங்குகள் எல்லாம் எங்கே செல்லும் ? கேள்விகள் தான் விடையைத் தேடி பயணிக்க வைக்கும். சரி இங்கே கதைக்கு வருவோம் நான் சௌரியமாக இருக்கிறேனா? எல்லாம் எனக்கு வசதியாக கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வாழ்பவர்களுக்கு மத்தியில் ஓரறிவு உயிரினத்திற்காக இந்த போலீஸ் செய்த செயல் தான் இணையத்தில் வைரலாக்கியிருக்கிறது.

#1
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரோடு போடும் வேலை நடந்திருக்கிறது. அப்போது அந்த தெருவில் ஒரு நாய் படுத்திருப்பதைக்கூட சட்டை செய்யாமல் அப்படியே தாரை கொட்டிக் கொண்டே சென்று தங்களது கடமையை முடித்து விட்டிருக்கிறார்கள். நாயின் பாதி உடல் தாரில் புதைந்து கிடக்கிறது. அந்த புகைப்படம் இணையத்தில் பரவி பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.

#2
இதே நேரத்தில் வெளிநாட்டில் நடந்த ஓர் சம்பவத்தை பாருங்கள். மேரீலேண்ட் அருகில் உள்ள க்ரீன்பெல்ட் என்ற இடத்தில் கரோலின் மற்றும் ஹாமெட் என்ற தம்பதிகளின் வீடு அமைந்திருக்கிறது. ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருக்கும் போது தான் அந்த சம்பவத்தை கவனித்தார்கள்.
காலை வேலை தான் ஆனால் மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது.

#3
சாலையின் நடுவில் ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார். முதலில் சாலையை கடக்கத்தான் நிற்கிறார் என்று நினைத்துக் கொண்டார்கள். வீட்டிற்குள்ளே காரை பார்க் செய்துவிட்டு கேட் மூடும் போதும் அந்த போலீஸ் அதேயிடத்தில் நின்று கொண்டிருந்தார்.
ஏதேனும் முக்கியமான ஒரு பொருளை தொலைத்துவிட்டாரா அதைத்தான் நீண்ட நேரமாக தேடிக் கொண்டிருக்கிறா என்று இருவரும் யோசிக்கிறார்கள்.

#4
ஹாமெட் ஏதேனும் உதவி வேண்டும் என்று குரல் கொடுக்கிறார் பின்னால் திரும்பி பார்த்த அந்த போலீஸ் வேண்டாம் என்பது போல கையசைக்கிறார். எதற்கும் நீங்கள் அங்கே சென்று பாருங்கள் என்று கரோலின் சொல்ல குடையை எடுத்துக் கொண்டு ஹாமெட் கிளம்பி விட்டார்.
நீண்ட நேரமாக இங்கேயே நிற்கிறீர்கள் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று போலீஸ் அதிகாரி அருகில் சென்று மீண்டும் கேட்டார்.

#5
முழுதாக தொப்பலாய் நனைந்திருந்த அந்த போலீஸ் அதிகாரி இல்லை என சொல்லி கீழே குனிந்தார். அப்போது தான் ஹாமெட் அதை கவனிக்கிறார். ஒரு கணம் அவருக்கு திக்கென்றது.
அவருக்கு வார்த்தைகளை வரவில்லை இதற்காகவா? என்பது போல ஹாமெட் அந்த போலீசை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தார்.

#6
கீழே அந்த போலீசின் கால்களுக்கு இடையில் ஒரு ஆமை இருந்தது. இந்த மழையில் வழி தவறி சாலைக்கு வந்துவிட்டது. இந்த தார் சாலையில் தண்ணீர் வேறு இருப்பதால் அதனால் நகர முடியவில்லை. ஆமை என்றாலே அது மெதுவாக பயணிக்கக்கூடியது என்பதை குழந்தைப் பருவத்திலேயே கதைகளின் வழியே கேட்டிருப்போம் ஆனால் இந்த வகை ஆமை நகரவே நகராதாம்.
ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் நீண்ட நேர ஓய்வு எடுத்துக் கொள்கிறது.

#7
அதான் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எதுவும் அதன் மீது ஏற்றிச் சென்றுவிடாமல் இருக்க இங்கேயே நின்று விட்டேன் என்றிருக்கிறர. ஒரு நிமிடம் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு ஓடியவர் மனைவியிடம் விஷயத்தை சொல்லி இரண்டு டவல்களை கொண்டு வருகிறார்.
அந்த ஆமையை டவலில் வைத்து புல்தரையில் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆமை மெல்ல நகர ஆரம்பித்ததும் இருவரும் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.

#8
இந்த விஷயத்தை கரோலின் தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர அந்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த அதிகாரியின் பெயர் ஷர்னைஸ் ஹாக்கின்ஸ் க்ரகம். இவருக்கு இந்த செயலைப் பாராட்டி பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications