Just In
- 6 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 5 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 7 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
6 விஷ ராசிகள் என்னென்ன? அதில் கொஞ்சம்கூட ஒத்துப்போகாத இரண்டு ராசிகள் எவை?
எந்த விஷயத்திலும் ஒத்துப்போகாத, ஒருவருக்கொருவர் நஞ்சாக விளங்கக்கூடிய ஆறு ராசிகள் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒரு உறவில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியமான விஷயத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தது, அது காதல் மற்றும் தனிப்பட்ட இடத்திற்கும் மேலானது, அதாவது 'இணக்கத்தன்மை'. சில நேரங்களில் காதல் மற்றும் பாசம் நிறைந்திருக்கும் நிலையிலும் இரண்டு அன்பான நபர்களிடையே மனக்கசப்பு தோன்றலாம்.
அதற்குக் காரணம் இணக்கத் தன்மை இல்லாததனால் தான். இது அபத்தமானது, ஆனால் அது உண்மைதான். காதல் இல்லாததால் மட்டும் அனைத்து உறவுகளும் வீழ்ச்சியடைவதில்லை. பல இடங்களில் "ஈகோ"- வினாலும் உறவுகள் தோல்வியடைகின்றன.
உறவு ஜோதிடம்: 6 நச்சு இராசிச் சேர்க்கைகள்
ஒரு உறவில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியமான விஷயத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தது, அது காதல் மற்றும் தனிப்பட்ட இடத்திற்கும் மேலானது, அதாவது 'இணக்கத்தன்மை'. சில நேரங்களில் காதல் மற்றும் பாசம் நிறைந்திருக்கும் நிலையிலும் இரண்டு அன்பான நபர்களிடையே மனக்கசப்பு தோன்றலாம். அதற்குக் காரணம் இணக்கத் தன்மையின்மையேயாகும்.
உறவுகள் ஏன் தோல்வியடைகின்றன ?
இது அபத்தமானது, ஆனால் அது உண்மைதான். காதல் இல்லாததால் மட்டும் அனைத்து உறவுகளும் வீழ்ச்சியடைவதில்லை. பல இடங்களில் "ஈகோ"- வினாலும் உறவுகள் தோல்வியடைகின்றன.
உறவு இணக்கம் என்றால் என்ன?
ஒருவருக்கொருவர் தேவைகளை புரிந்துகொள்வதையும், முதலில் அதை ஒப்புக்கொள்வதுமே இணக்கத்தின் அர்த்தமாகும். இணக்கம் கொண்டவர்கள் ஒருவரையொருவர் மதிக்கும் ஒரு பரஸ்பர எண்ணத்துடன் பல சிக்கல்களையும் முடிவுகளையும் ஒத்துக்கொள்கிறார்கள்.
ஒத்துவராத ஜோடிகள்
பல வருடங்களாக ஒன்றாக இருந்தாலும், இதயத்திலும் ஆத்மாவிலும் கலந்தவர்களாக இருந்தாலும், உறவை உயர்த்துவதற்குப் அடிக்கடி போராடும் தம்பதியரை நீங்கள் சந்திக்கலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் நேசித்தாலும், ஒரு நிமிடம் கூட பிரிவதைத் தாங்க முடியாமல் போயிருந்தாலும், அவர்களது நிலையான சண்டைகள் மற்றும் சச்சரவுகள் மற்றவர்களைப் பைத்தியம் பிடிக்க வைக்கும். இது சுற்றியுள்ளவர்களை "அவர்கள் ஏன் ஒன்றாக இருக்கிறார்கள்" என்ற ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ?
MOST READ: மரண ரகசியம் பற்றி எமனே தன்வாயால் என்ன சொல்லிருக்காரு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
ராசிகள் மற்றும் அதன் உறவுகள்
ஒவ்வொரு தனி நபருக்கும் தனித்துவமான ஆளுமை உள்ளது, மேலும் இந்தச் சிறப்பியல்புகளுக்கு அவர்களின் ஜோதிட நட்சத்திரங்களே பெரிதும் காரணமாகின்றன. நெருப்பு, நீர், காற்று மற்றும் பூமி ஆகிய நான்கு கூறுகளின் சீரான கலவையானது வாழ்க்கையின் பாதையை தீர்மானிப்பதாக ஜோதிடம் விளக்குகிறது; எனவே, இராசிகளின் இணக்கத்தன்மையே அந்தந்த உறவுகளின் தலைவிதியை ஆளுகிறது.
இனம் சேராத ராசிகள்
சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஒன்றாகச் சேரும்பொழுது அவர்களுக்குள் அந்த ராசிகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட 6 மிக இணக்கமற்ற ராசிகளின் ஜோடிகளைப் பாருங்கள் ...
சிம்மம் மற்றும் கடகம்:
மாறும் இணக்க குணம் கொண்ட இந்த ராசி ஜோடிக்காரர்கள் தங்கள் உறவில் ஒரு நல்ல முடிவை கண்டுபிடிக்க முடியாது. கடகம் ஆத்மாவோடு ஆழ்ந்த மற்றும் வெளிப்படையான தொடர்பை எதிர்நோக்கியிருக்கையில், லியோவின் தொடர்ந்த பாதுகாப்பற்ற தன்மை அவர்கள் அன்பின் பரிசுத்தத்தன்மையைக் குறைக்கும்.
லியோவின் தீவிர உணர்ச்சி மாறுதல்; அடுத்த நிலையில், அன்பு மற்றும் பாதுகாக்கும் தன்மையிலிருந்து பிறழ்தல் போன்றவை ஒரு கணத்தில் கடகத்தை சங்கடத்தில் ஆழ்த்துகிறது. மிருகத்தனமற்ற அவர்களின் பொறுமையும் கூட சில நேரங்களில் மாறி கோபத்தை அவர்களின் ஆயுதமாக வெளிப்படுத்தி இறுதியில் அவர்களின் உறவின் வேர்களை இருக்கிறது.
மகரம் மற்றும் கும்பம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும் தங்களுடைய உறுதிப்பாட்டிற்காக அறியப்படுகின்றனர், அதுவே அவர்களை ஒருவரையொருவர் ஈர்க்கிறது (அவர்களை கண்ணீர் விடவும் வைக்கிறது). மகரம் உணர்ச்சி மிக்கவரானாலும் கும்பம் இருவரின் உறவையும் நடைமுறைக்குரிய வழியில் நடத்துகிறது.
ஒரு கட்டத்தில் இந்த வகையான ஏற்பாடு, கும்ப ராசிக்காரர்களை ஆதிக்கம் மிக்கவர்களாக மாற்றுவதோடு, உறவுகளில் தங்கள் மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மகரத்தை கெஞ்ச வைத்துவிடுகிறது. இறுதியில், அவர்களின் தீர்மானிப்பு அணுகுமுறை ஒரு மிருகத்தனமான சண்டையைத் தொடங்குகிறது அல்லது அமைதியாக்கி ஒரு நாள் பெரிய பிளவை ஏற்படுத்தி உறவை சீர்குலைக்கிறது.
கன்னி மற்றும் மிதுனம்
வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கலாம் அல்லது நடைமுறையில் வாழ்ந்து விடலாம், ஆனால் அது நீண்ட காலமாக இணைந்திருக்க முடியாது; அதாவது கன்னி மற்றும் மிதுனம் ஒருவரையொருவர் காதலிப்பதைப் போன்றது. மிதுனம் கனவுகள் நிறைந்ததாக இருக்கும் வேலையில், கன்னி உணர்ச்சி ரீதியாக பிரிக்கப்பட்டது மற்றும் நடைமுறை வழிகளையே தேடும் மனம் கொண்டது.
இவர்களுக்குள் உறவு என்றுமே நிலைக்காது. ஏனெனில் கன்னி எளிதில் மிதுனத்தை ஏங்க / தவிக்க விட்டுவிட்டு உறவிலிருந்து வெளியேறி விடும். உடைந்த இதயத்துடன் மிதுனத்தை தன்னையே தற்காத்துக் கொள்ளும் ஆறுதல் நிலைக்குத் தள்ளிவிட்டு எளிமையான வழியில் கன்னி அந்த உறவிலிருந்து வெளியேறும் வேலையைச் செய்யும்.
துலாம் மற்றும் ரிஷபம்
இவர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள்; இவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்திருத்தல் மற்றும் ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கைச் சவாரியில் போவது போலத்தெரிகிறது என்றாலும் பின்னர் உறவு பிரிந்து ஊசலாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், அவர்களது உறவு ஒருபோதும் வேலை செய்யாது. அவர்கள் இருவரும் மிகுந்த காதல் கொண்டு ஒருவருக்கொருவரை நேசிக்கிறார்கள், மற்றும் நீண்ட காலம் விலகி இருப்பது என்ற எண்ணத்தையே தாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
ஆனால், துலாமின் பிடிவாதம் மற்றும் ரிஷபத்தின் விரக்தி, எந்தநேரமும் 'தான் செய்வதே சரி' என்ற உணர்வே, இவர்களின் உறவைப் புதைக்கும் சவப்பெட்டியின் இறுதி ஆணி ஊசிகளையும் பிடுங்கி விடுகிறது. பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஒருபோதும் வழங்கப்படாத இவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகம் என்பதை ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்து மற்றும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
MOST READ: காதலனையே வெட்டி கூறுபோட்டு பிரியாணி சமைத்து பரிமாறிய கொடூரம்... இப்படியுமா நடக்கும்?
விருச்சிகம் மற்றும் மீனம்
இது ஒரு கொடிய கலவையாகும், ஏனெனில் இரண்டும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவை, ஒருவருக்கொருவர் மிகவும் சந்தேகத்திற்குரியவை. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மனம் கொண்ட மீனத்திடம் தன் அன்பை வெளிப்படுத்தும் போது, விருச்சிகம் பொறுப்பாக நடந்துகொள்வதில்லை.
இவர்களின் வித்தியாசமான குணம், ஒருமுறை பற்றிக் கொண்டால் அவர்கள் இருவரின் உறவின் அனைத்தையும் எரித்து விட்டு துயரம் என்னும் சாம்பலை மட்டுமே விட்டுச் செல்கிறது. மீனம் இடம்கொடுக்க நினைத்தாலும் விருச்சிகத்தின் சந்தேக குணம் அவர்கள் உறவினை மூச்சுத்திணற வைக்கிறது.
தனுசு மற்றும் கடகம்
இந்த இரண்டு இராசிகளும் கண்டிப்பாக நெருங்கி இருக்கக்கூடாது, குறிப்பாக உறவில் இணையக்கூடாது. கடகம் வாழ்க்கையில் தாமதமாக வெற்றி பெறுவதில்' சந்தோஷமடைகிறது மாறாக தனுசுக்கு எந்த சாவலையும் எதிர்கொண்டு வெல்லும் பாதை பிடிக்கிறது. எனவே அவர்கள் கடகத்தின் பொறுமையை வெறுத்து ஓட ஆரம்பிக்கிறார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் வேகமாக மாறும் உலகில் நீந்தி முன்னேறிச்செல்ல நினைக்கிறார்கள், ஆனால் கடகம் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதில்லை. தங்களுக்குள்ளான வாழ்க்கையை தனுசு பாலியல் ரீதியிலும், கடகம் உணர்ச்சி ரீதியிலும் இணைக்க விரும்புவதால் உறவு நிலை கேள்விக்குரியதாகிறது.