Latest Updates
-
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது!
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா?
Baba Vanga's Shocking Predictions for Next 100 Years: எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகளில் பாபா வாங்கா மிகவும் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். 1996-ல் பாபா வாங்கா இறந்திருந்தாலும் அவரது உலகப் போர்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் தொழில்நுட்பப் புரட்சிகள் பற்றிய அவரது கணிப்புகள் உலகில் கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. அவரது தீர்க்கதரிசனங்கள், அவரது காலத்தைத் தாண்டி, 9/11 தாக்குதல் முதல் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி வரை அனைத்தையும் கணித்தன.

அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், உலகில் நடக்கப்போகும் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்திருப்பார். தற்போது பதட்டமான போர் சூழல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என அவரது குரல் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானதாக உணரப்படுகிறது. மனித வரலாற்றின் அடுத்த 100 ஆண்டுகளைப் பற்றி அவர் என்ன கணித்துள்ளார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
2025-2035: கண்ணுக்குப் புலப்படாத கண்களின் காலம்
அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும், இதனால் மக்களின் பிரைவசி என்ற ஒன்று இல்லாமல் போகலாம். முகத்தை அடையாளம் காணுதல் மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிதல் உள்ளிட்ட மேம்பட்ட பயோமெட்ரிக் கண்காணிப்பு சர்வ சாதாரணமாகிவிடும்; இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு இவை அவசியம் என்று அரசாங்கங்கள் நியாயப்படுத்தும் சூழல் உருவாகலாம். மக்கள் தங்கள் தகவல்களை பாதுகாக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
2035-2045: டிஜிட்டல் தீர்க்கதரிசிகளின் எழுச்சி
2035-2045 காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு அதன் எல்லைகளைக் கடந்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் சக்தியாக பரிணமிக்கும் காலமாக இருக்கும். இந்த "டிஜிட்டல் தீர்க்கதரிசிகள்", ஆட்சிமுறை முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை பல்வேறு துறைகளில் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்தி, இயந்திர வழிகாட்டுதலுக்கும், மனிதர்களின் வாழ்க்கைக்கும் இடையிலான எல்லைகளைக் குறைப்பார்கள்.
2045-2060: செவ்வாய் கிரகத்தை நோக்கியப் பயணம்
இந்த காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பயணம் எதிர்பார்க்கப்படுகிறது, இது கிரகங்களுக்கிடையேயான குடியேற்றத்தில் மனிதகுலத்தின் அசாத்திய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த பெரும் பயணம் வெறும் ஆய்வுக்கான தேடல் மட்டுமல்ல, பூமியில் மக்களின் வாழ்விடம் குறித்து அதிகரித்து வரும் சவால்களுக்கு ஒரு பதிலாகவும், மனித நாகரிகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.
2060-2080: மரணத்தை வெல்லும் ரகசியம்
இந்த காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் இறப்பு விகிதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உணர்வுப் பரிமாற்றம் மற்றும் ஆயுளை நீட்டிக்கும் சிகிச்சைகள் போன்ற புதுமையான சிகிச்சை முறைகளின் மூலம், மரணம் பற்றிய எண்ணம் ஒரு மாற்றத்திற்கு உள்ளாகும், இது இயற்கையாக ஏற்படும் மரணத்திற்கு சவால் விடுவதாக இருக்கும்.
2080-2095: வெறிச்சோடிய நகரங்கள்
இந்த காலகட்டத்தில் நகர்ப்புற நிலப்பரப்புகளில் ஒரு வியத்தகு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் நகரங்களில் மக்கள் தொகை குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அல்லது சமூகக் கட்டமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த மாற்றம் ஏற்படக்கூடும், இது மக்களை நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்கும்.
2095-2125: சுழல் நிகழ்வு
"சுழல் நிகழ்வு" என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான நிகழ்வுடன் இந்த நூற்றாண்டு நிறைவடையும். இந்த கணிப்பு பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணம் என்றும், நாகரிகத்தின் போக்கை எதிர்பாராத வழிகளில் மாற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
