Just In
- 18 min ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 1 hr ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 2 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Don't Miss
- News காமராஜர், ஜெயலலிதா, மூப்பனார்! மாற்று கட்சி தலைவர்கள் பெயரை சொல்லி.. மோடி பிரச்சாரம்! கவனிச்சீங்களா?
- Movies பெண்களை வார்த்தையால் கற்பழிக்கிறார்கள்.. அறந்தாங்கி நிஷா மன வேதனை!
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பார்ன் படம் பார்க்கும் பரவசத்தில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்!
பார்ன் படம் பார்க்கும் பரவசத்தில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்!
ஆங்கிலத்தில் ஒரு அற்புதமான தத்துவம் இருக்கிறது... மனித வாழ்க்கை என்பது பேக்ஸ்பேஸ் இல்லாத கணினியின் கீபோர்டு போன்றது. எனவே, எதையும் கவனத்துடன் செய்யுங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளலாமே தவிர, செய்த தவறை அழிக்க இங்கே வாய்ப்பில்லை என்பார்கள்.
சில சமயங்களில் நாம் அவசரத்தில், உணர்ச்சிவசத்தில் செய்யும் விஷயங்களும் இப்படி தான் அழிக்க முடியாமல் போய்விடும். அப்படியான ஒரு நிகழ்வு தான் இது. பார்ன் பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் உணர்ச்சி பரவசத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாது தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டுள்ளார்.
30 வயது!
தகவல்களின் படி இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த ஆண் முப்பது வயது மிக்கவர் என்று அறியப்படுகிறது. இவரது பெயர் வ்ஹிசனு ஸ்ரிசனோ. இவரது வீட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரையிலான புகைப்படங்கள் இப்போது சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏறத்தாழ உடல் முழுவதும் இரத்தம், கீறல்கள் என பார்ப்பதற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறார் அந்த நபர். இந்த சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்ன் ரசிகர்!
வ்ஹிசனு ஸ்ரிசனோ ஒரு பார்ன் ரசிகர். ஹார்ட்கோர் பார்ன் வீடியோக்களை காணும் பழக்கம் கொண்டிருந்தவர். ஒரு நாள் வீட்டில் தனியே தனது ஸ்மார்ட் போனில் பார்ன் படங்கள் பார்த்து வந்துள்ளார். பார்த்தக் கொண்டிருந்த பார்ன் வீடியோ மூலம் உச்சகட்ட இன்பத்திற்கு சென்று வ்ஹிசனு ஸ்ரிசனோ ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ப்ளேடு போன்ற பொருளை கொண்டு தனது ஆண்குறியை அறுத்துக் கொண்டுள்ளார்.
இப்படியான நடவடிக்கையை sadomasochism என்று கூறுகிறார்கள். அதாவது தங்களையும், பிறரையும் துன்புறுத்தி செக்ஸுவல் ரீதியான இன்பம் காணும் வகை ஆகும்.
இரத்தம்!
ஆரம்பத்தில் தனது உடலில் பிளேடு கொண்டு கீறிக் கொண்டிருந்த போது தனது கட்டுப்பாட்டில் இருந்துள்ளார் வ்ஹிசனு. ஆனால், தனக்கே தெரியாமல் தன்னிலை மறந்து தனது ஆண்குறியை ஆழமாக கீறி துண்டாக காரணமாகியிருக்கிறார்.
இதன் காரணமாக அவரது உடலில் இரத்தப் போக்கு அதிகரித்தது. ஆரம்பத்தில் இரத்தம் போவதையே உணராமல் பார்ன் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த இவர், வலி அதிகரித்த போதுதான் தனது உண்மை நிலைக்கு திரும்புயுள்ளார்.
வெட்கம்!
முதலில் அவசர உதவியை நாடுவதற்கு கூச்சப்பட்டிருக்கிறார். ஆனால், இரத்தப் போக்கு குறையாததாலும். எங்கே அபாயமானதாக ஏதும் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் அவசர உதவிக்கு கால் செய்துள்ளார்வ்ஹிசனு.
அவசர உதவி ஆட்கள் வீட்டை அடைந்த போது,வ்ஹிசனு வீட்டின் ஹாலில் இரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலத்தில் விழுந்து கிடந்ததாக அறியப்படுகிறது. பிறகு இவரை ஒரு போர்வையில் சுற்றி மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பிறகு, தனக்கு இப்படியான நிலை உண்டானதற்கு அந்த வீடியோ தான் காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார் வ்ஹிசனு. ஆண்குறி மட்டுமின்றி வ்ஹிசனு உடல் எங்கிலும் பல பகுதிகளில் கீறல் காயம் இருந்தது.
தற்போதைய நிலை...
மருத்துவர்கள் தகவல் படி, அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் வ்ஹிசனுவின் இரத்தப்போக்கினை மருத்துவர்கள் நிறுத்திவிட்டனர். போதுமான அளவு முதலுதவியும் செய்துள்ளனர். ஆயினும், எப்படியோ... அவசர உதவி வ்ஹிசனுவை வீட்டில் இருந்து அழைத்து வந்ததில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்து வரையிலான படங்கள் இன்டர்நெட்டில் வைரலாக பரவிவிட்டது.
சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இப்படியான வினோதமான சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகிவிட்டது.
வரலாறு...
இதற்கு முன் ஒரு இளம்பெண் சமூக தளத்தில் தனது பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கையை கூட்ட தன்னிடம் உறவு வைத்துக் கொள்ள இந்த ஹோட்டலுக்கு வரவும் என கூறி பதிவிட நூற்றுக்கணக்கான ஆண்கள் குவிந்து ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
ஒருமுறை இளம் தம்பதி ஆணுறைக்கு பதிலாக பாலிதீன் பையை பயன்படுத்தி இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. இதுபோக, காதலி சிறிய ஆண்குறி என்று கேலி செய்ததால் ஆணுறுப்பை அறுத்த கொண்ட நபர், நிச்சய மோதிரத்தை ஆண்குறியில் மாட்டிக் கொண்ட நபர், பிளாஸ்டிக் பாட்டிலுடன் உறவு கொண்ட நடுவயது ஆண் என சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சேர்ந்த மக்கள் தான் இப்படியான வினோதமான நிகழ்வுகளில் எதையாவது ஏடாகூடமாக செய்து உலக அளவில் வைரலாகிவிடுகிறார்கள்.
All Image Source: Viral Press