For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலவி மற்றும் இரத்த வெறிப்பிடித்த இந்துமதப் பெண் கடவுள் பற்றித் தெரியுமா?

தேவியின் குரூரமான அம்சமாக காணப்படும் அரிதலைச்சி பற்றி உங்களுக்கு தெரியுமா?

|

அரிதலைச்சி, படத்தில் காணவே சற்று கொடூரமான தோற்றம் கொண்டிருக்கும் தேவியின் அம்சம் இவள். மகாவித்யா என அழைக்கப்படும் பத்து தேவதைகளில் இவளும் ஒருத்தி. தனது தலையை தானே அரிந்து கையில் ஏந்தி இருப்பது போல காட்சியளிப்பவள்.

இதனாலேயே அரிதலைச்சி என்ற பெயர் பெற்றாள். தேவியின் குரூரமான அம்சமாக கருதப்படும் இவளுக்கு, சின்னமஸ்தா மற்றும் பிரசண்ட சண்டிகை என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.

அரிதலைச்சி என்ற பெயருக்கு, அம்சத்திற்கு தன்னை தியாகம் செய்தல் என்றொரு கோட்பாடும் இருக்கிறது. சுயக்கட்டுப்பாடு, கலவி, வேட்கை, கலவியாற்றல் என பல கோட்பாடுகளின் உருவகமாகவே அரிதலைச்சி காணப்படுகிறாள்.

பார்க்க மட்டுமல்ல, அரிதலைச்சியை வணங்கும் வழிமுறைகளும் கூட சற்றே ஆபத்தானது என கூறுகிறார்கள். மேலும், தாந்திரீகம் செய்பவர்களே கூட, அரிதலைச்சியை வழிப்பட வேண்டாம் என எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Chhinnamasta, Who is Considered as Ferocious Aspect of Devi!

Lesser Known Facts About Chhinnamasta, Who is Considered as Ferocious Aspect of Devi!
Story first published: Wednesday, January 3, 2018, 10:18 [IST]
Desktop Bottom Promotion