Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
செத்துப் போன கணவர் கன்றுக்குட்டியா மீண்டும் பிறந்து வந்த அதிசயம்!!
இறந்து போன தன் கணவர் கன்றின் வடிவத்தில் பிறந்திருப்பதாக கருதி, கன்றையே திருமணம் செய்த கம்போடிய பெண்
மழை வேண்டி, ஊர் செழிக்க வேண்டும் என்றெண்ணி விலங்குகளுக்கு திருமணம் செய்துவைக்கும் சடங்குகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்.
காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. சாதி மாறி திருமணம் செய்வது எல்லாம் பழசு இப்ப புது ட்ரெண்ட் என்ன தெரியுமா?

கணவரும் கன்றும் :
கம்போடியாவின், கிராடி மாகாணத்தைச் சேர்ந்த மூதாட்டி, கிம் ஹாங், அவரின் கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அதே நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்த பசு, ஒரு ஆண் கன்றை ஈன்றது. அந்த கன்றின் செயல்பாடுகள் அனைத்தும், தன் கணவரின் செயல்பாடுகளை ஒத்திருப்பதாக, கிம் ஹாங் கருதினார்.
Image Courtesy

கன்றுடன் காதல் :
கிம்முக்கும் அந்த கன்றுக்குட்டிக்கும் ‘காதல்'. இறந்து போன தன் கணவரே கன்றுக்குட்டியாக வந்திருக்கிறார் என்று நம்பத்துவங்கிவிட்டார். கிம்மிடம் மிகுந்த பாசத்துடன் பழகும் அந்த கன்று, மகன்களிடமும் பாசமும் கண்டிப்புமாய் நடந்து கொள்கிறதாம்! (அப்பாவாம்)
Image Courtesy

திருமணம் :
பின்னர் ஒரு சுபமுகர்த்த நன்னாளில் ஊரார் எல்லாரையும் அழைத்து, அந்த கன்றையே திருமணம் செய்திருக்கிறார் கிம். அந்த கன்றை தினமும் குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என மிகவும் சிரத்தையுடன் பணிவிடைகளை செய்து கொண்டிருக்கிறார். கன்றுக்குட்டிக்கென்று தன் கணவர் பயன்படுத்திய அறை, கட்டில் என சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் கிம்.
Image Courtesy

சாசனம் :
தான் உயிரோடு இருக்கும் வரை, அந்த கன்றுக்குட்டியை பராமரிக்கப் போவதாக தெரிவித்துள்ள கிம், தனக்குப் பின்னும் தன்னுடைய கணவரை(கன்றுக்குட்டியை) மரியாதையாக பராமரிக்க வேண்டும், அதனை விற்றுவிடக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார்.
Image Courtesy

செத்தாலும் விடமாட்டோம் :
கன்று இயற்கையாக இறக்கும் வரை பராமரித்து, அது இறந்தவுடன் ஈமச்சடங்குகளையும் தவறாமல் செய்ய வேண்டுமாம்....
எங்க வீட்டு பப்பி காலச் சுத்தி சுத்தி வருதே!!!!!
Image Courtesy



Click it and Unblock the Notifications
