Just In
- just now வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 5 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொடையில் சிறந்தவன் கர்ணனா? தர்மனா? கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எடுத்த பாடம்!
அந்தணர் வேடமிட்டு கொடையில் சிறந்தவர் யாரென கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் அறிந்த கதை!
அர்ஜுனன் மனதில் ஒரு கேள்வி பல நாளாக உறுத்திக் கொண்டே இருந்தது. தன் அண்ணன் தர்மனும் தான் வருவோர் எல்லாருக்கும் தானம், தர்மம் செய்கிறான். ஆனால், ஏன் மக்கள் அனைவரும் கர்ணனை சிறந்த வள்ளல் என கூறுகின்றனர்? என எண்ணி எண்ணி ஓய்ந்தே போனான் அர்ஜுனன்.
இந்த கேள்விக்கு விடை அறிந்தே ஆகவேண்டும் என பகவான் கிருஷ்ணரிடம் செல்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணரும் அனைவரையும் போல பொட்டில் அடித்தது போல, ஆம்! தர்மனை காட்டிலும் கொடையில் சிறந்தவன் கர்ணனே என கூற அதிர்ந்து போகிறான் அர்ஜுனன்.
பிறகு, எப்படி எதை வைத்து அப்படி நீங்களும் அப்படி கூறுகிறீர் என பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் வினவ..., அதை நிரூபிக்க ஒரு நாடகமும் போடுகிறார் கிருஷ்ணர்...
அந்தணர் வேடம்!
கிருஷ்ணர் அர்ஜுனனை அழைத்து, போய் அந்தணர் வேடமிட்டு வா, நான் உனக்கு கர்ணன் தான் சிறந்த கொடையாளன் என நிரூபிக்கிறேன் என கூறுகிறார்.
பிறகு பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் அந்தணர் வேடமிட்டு தர்மன் வீட்டிற்கு முதலில் செல்கின்றனர்.
ஓயாத மழை!
பகவன் கிருஷ்ணர் வருணனை வேண்டி ஓயாத பெரும் மழை பெய்ய செய்கிறார். அந்த மழை நின்ற பிறகு, தர்மன் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே தர்மன் அந்தணர் வேடத்தில் இருந்த பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை சகல மரியாதையுடன் அழைத்து உபசரிக்கிறார்.
வேண்டுகோள்!
ஐயா! எங்கள் வீட்டில் இருந்த விறகுகள் எல்லாம் மழையில் நனைந்துவிட்டன. வீட்டில் அடுப்பெரிக்க விறகுகள் ஏதும் இல்லை. நீங்கள் தான் கொடுத்துதவ வேண்டும் என வேண்டுகிறார்.
தர்மனின் பதில்...
அதற்கு தர்மன்..,"எங்கள் அரண்மனையில் இருந்த விறகுகள் எல்லாம் பயன்படுத்தி ஆயிற்று. இனி வேண்டும் என்றால் மரத்தை தான் வெட்ட வேண்டும்.
மரங்களும் மழையில் நனைந்து ஈரமாக தான் இருக்கின்றன. வேண்டுமானால் நீங்கள் குடும்பத்துடன் வந்து அரண்மனையில் உணவருந்தி செல்லுங்களேன் என பதில் அளிக்கிறார்.
அந்தணர் வேடத்தில் இருந்த இருவரும் சரி என தலையாட்டி இடத்தை விட்டு நகர்கின்றனர்...
கர்ணன் அரண்மனையில்...
கர்ணன்னும் அந்தணர் வேடமிட்டு வந்த கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை மரியாதை செய்து வரவேற்கிறார். அர்ஜுனனும், கிருஷ்ணரும் அதே உதவியை கர்ணனிடமும் வேண்டினர்.
கர்ணநும் அதே சூழலில் தான் இருந்தான். ஆனால், அவன் விறகுகள் இல்லை என பதில் அளிக்கவில்லை.
வில், அம்பை எடுத்த கர்ணன்!
உடனே தனது வில்லை எடுத்து, அம்பை நானிலேற்றினான். பகவான் கிருஷ்ணனும், அர்ஜுனனும் கர்ணனின் செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
மறுநொடியே அவர்கள் என்ன நடக்கும் என யோசிக்கும் முன்னர், அம்புகளை தொடர்ந்து தன் அரண்மனை ஜன்னல் மற்றும் கதவுகளில் எய்து உடைத்தெறிந்து. இதோ! நீங்கள் கேட்டவை. எடுத்து சென்று பயன்பெறுங்கள் என அனுப்பி வைத்தான்!
புரிந்துக் கொண்ட அர்ஜுனன்!
அந்த தருணத்தில் தான் அர்ஜுனனே.., தனது அண்ணன் தர்மனை காட்டிலும் கர்ணன் தான் சிறந்த கொடையாளன் என உணர்ந்து. பகவான் கிருஷ்ணருக்கு நன்று உரைத்தான்.