Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்..
ஆண்களை பெண்கள் கற்பழிக்கும் கலாச்சாரம்!!உலகில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறைகள்!
அதிர்ஷ்டத்திற்காகவும், கடவுளாக்காகவும் பின்பற்றப்படும் சில விசித்திரமான கலாச்சார நடைமுறைகள்
நாம் வாழும் இந்த உலகத்தில் எக்கச்சக்கமான மதம்,கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றுகிறாரக்ள். சில நடைமுறை வழக்கமானதாக இருக்கும் ஆனால் சில மிகவும் விசித்திரமானதாக இருக்கும்.
நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத விஷயங்கள் கலாச்சாரம் என்ற பெயரிலும், கடவுளின் பெயராலும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி உங்களை உறையவைக்கும் சில விசித்திரமான கலாச்சார நடைமுறைகள்.

ஆண்கள் கற்பழிப்பு :
ஜிம்பாபேவில் இருக்கும் விசித்திரமான நடைமுறை இது. ஜூஜூ என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையின் படி பெண்கள் ஆண்களை கற்பழிக்க வேண்டும். அதோடு அவர்களை விந்தணுக்களை திருடிக்கொண்ட தப்பித்திட வேண்டும்.
இப்படிச் செய்வதால் பெண்களின் ஆயுள் கூடுமாம். சமீபத்தில் பல ஆண்கள் இதற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார்கள்.

மணமகள் கடத்தல் :
ராம்னி என்ற ஜிப்சிகளின் கலாச்சாரத்தின் படி ஒரு பெண்ணைக் கடத்தி மூன்று முதல் ஐந்து நாட்கள் வைத்திருந்தால் சட்டப்படி அவர்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முழு உரிமையும் வந்துவிடுகிறதாம்.

பிணம் திண்ணிகள் :
பிரேசில் மற்றும் வெனின்சுலாவில் வசிக்கும் யனோமமி என்ற பழங்குடி இன மக்களிடையே இந்த நடைமுறை இருக்கிறது. அவர்கள் கூட்டத்தில் யாராவது இறந்துவிட்டால் எரித்துவிடுகிறார்கள்.
பின்னர் எரிந்த சாம்பலையும் எலும்புத்துண்டுகளையும் அவர்கள் குடிக்கும் சூப்பில் கலந்து குடித்துவிடுகிறார்கள்.
இதனால் இறந்து போன உறவு தம்மோடு எப்போதும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

குழந்தைகள் :
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சண்டீஸ்வரர் கோவில் ஐம்பதடி உயரத்தில் இருந்து கைக்குழந்தைகளை கீழே வீசுகிறார்கள். கீழே இருப்பவர்கள் துணியைக் கொண்டு குழந்தையை பிடித்து காப்பாற்றுகிறார்கள்.
இப்படி செய்வதால் அதிர்ஷ்டம் வரும் நம்புகிறார்கள் வருடந்தோறும் 200 குழந்தைகள் வரை இப்படி உயிரை பணையம் வைக்கிறது.

ஆண் தன்மை :
அமேசான் காட்டுப் பகுதியில் இருக்கும் சட்டீரே மாவே என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் மிகவும் வலி மிகுந்த நடைமுறை இது. ஒரு வித கட்டெறும்புகள் நிறைந்த உள்ளாடையை ஆண்கள் அணிய வேண்டும். சதையை ஒரு தோட்டா துளைத்தால் எப்படி வலிக்குமோ அப்படியான வலி உண்டாகும்.
ஒரு ஆண் , இந்த நடைமுறையை செய்யவில்லையெனில் அவன் ஆண் என்றே கருதப்பட்ட மாட்டானாம். அவர்கள் இனத்தில் ஆண்கள் கண்டிப்பாக இந்த நடைமுறையை பின்பற்றியாக வேண்டும்.

விரலை வெட்டுதல் :
உலகிலேயே மிகவும் கொடூரமான நடைமுறையாக இது பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் வசிக்கும் டேனி பழங்குடியின மக்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள்.
குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் இறந்துவிட்டால் உயிரோடு இருக்கும் பெரியவர் தன் விரலை வெட்டிக் கொள்ள வேண்டும்.

சீனக் கால்கள் :
சீனாவில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறை இது. இளம்பெண்களின் கால்களை 4 அல்லது ஐந்து வருடங்கள் கட்டி வைப்பாரக்ள். அவர்கள் பாதம் வளரக்கூடாது என்பதற்காக. இப்படிச் செய்வதால் கெட்ட சக்திகள் அண்டாது, மத நம்பிக்கை, போன்றவை எல்லாம் அல்ல, அழகுக்காக இப்படிச் செய்கிறாரக்ள்.

கழிவறைக்குச் செல்லத்தடை :
கேட்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறதல்லவா? இந்தோனேஷியாவில் வசிக்கும் டிடோங் என்ற இனமக்கள் இதனை கடைபிடிக்கிறார்கள்.
அவர்களின் திருமண சடங்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. திருமணம் முடித்து மூன்று நாட்கள் அந்த ஆணும் பெண்ணும் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
இப்படிச் செய்வதால் தம்பதிகள் நீண்ட ஆயுளுடனும் சந்தோஷத்துடனும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வார்கள் என்று நம்புகிறார்கள். மூன்று நாட்களுக்குப்பிறகு கழிவறையை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications