Just In
- 53 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 2 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 3 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தற்கொலைகள் இப்படியும் நடக்கலாம்! இளகிய மனம் கொண்டோர் படிக்க வேண்டாம். My story #63
தற்கொலைகள் காரண காரியங்களோடு நிகழ்வதில்லை என்பதை உங்களுக்குச் சொல்லும் கதை.
தற்கொலை என்ற செய்தியை கேள்விப்படும் போதே வாழத்தகுதியற்றவர், இந்த உலகத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்,கோழை, எதிர்த்து போட்டி போடாமல் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இறந்து விட்டால் எல்லாம் சரியாகிடுமா என்று அவர் மீது சில குற்றச்சாட்டுகளை தெளித்துவிட்டு நம்முடைய அடுத்த வேலையை நோக்கி நகர்ந்து விடுகிறோம். காலப்போக்கில் அந்த நபர் இருந்த தடமே தெரியாமல் மறந்து விடுகிறோம்.
உண்மையில் தற்கொலை ஏன் செய்கிறார்கள் என்று நம்மால் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாது தான். அது அவரவர் சூழலுக்கு ஏற்ப தாங்கள் வாழ்ந்த விதத்திற்கு ஏற்ப அவரது தனிப்பட்ட மனநிலையை பொறுத்தது அது. அதை நீ ஏன் செய்தாய் என்று கேள்வி கேட்டு துன்புறுத்தாமல் அதிலிருந்து மீண்டு வர வேண்டுமானால் உதவி செய்திடலாம்.
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் வேணுமா என்ன? தற்கொலைக்கான பின்னணியில் ஒரு காதல்,ஒரு தோல்வி,ஒரு துரோகம், ஒரு ஏமாற்றம்,ஒரு வலி என எதாவது இருக்கத்தான் வேண்டுமா என்ன?
இதற்கான பதில் இந்த கதையின் முடிவில் உங்களுக்கே தெரிய வரும்.
முந்திரி அல்வா :
அம்மா... நான் செத்துட்டா என்ன பண்ணுவ? வாசலில் உட்கார்ந்து பூ கட்டிக்கொண்டிருந்த அம்மா இந்த கேள்வியை என்னிடமிருந்து எதிர்ப்பார்த்திருக்கவில்லை போலும்.
கோபத்துடன் ஒரு முறைப்பு...
சொல்லுமா... என்று நச்சரிக்க
அதோ அங்க தாத்தா போட்டோ மாட்டிருக்குல அதுக்கு பக்கதுல உன் போட்டோ வச்சுருவோம்... வருசம் ஒருக்கா உனக்கு புடிச்சத படச்சி கும்புடுவோம்.
போட்டோக்கு பூ வைப்பியா.... அம்மா எனக்கு ஸ்வீட்ஸ் நிறைய வை சரியா... ம்ம்ம்.. அல்வா.... முந்திரி அல்வா என்று அடுக்கிக் கொண்டே செல்ல ஏன் நாளைக்கே சாவப்போறியா போய் பொலப்ப பாரு என்று சொல்லி ஆஃப் செய்து விட்டாள்.
தற்கொலை :
ஆம்... தற்கொலை செய்யப்போகிறேன் யாரிடமும் சொல்லாத திடீர் மரணமாக அது இருக்க வேண்டும் என்ற ஆசை. அந்த திடீர் மறைவு, இல்லாமையை ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது.
அதை விட இன்னொரு முக்கியமான யோசனை என்ன தெரியுமா? எப்படி இறப்பது என்பது தான்.
முக்கிய யோசனை :
இறப்பு என்பது நிச்சயம் என்பதை உணர்ந்த கணத்தில் நான் எப்படி சாக வேண்டும் என்ற கற்பனை ஆரம்பித்திருந்தது. எங்கள் நட்பு வட்டத்திற்குள் இதைப்பற்றிய ஒரு விவாதமே நடந்து.
எல்லாரும் அமைதியான... இன்னும் சொல்லப்போனால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்திட வேண்டும். யாருக்கும் எந்த உபத்திரமும் இல்லமல் இறக்க வேண்டும் என்றார்கள் சிலர்.. என் தோழியொருத்தி பேஸ்கட் பால் ப்ளேயர் அவளோ நான் மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும் என்றாள்...
தொடர்ந்து இன்னொருவன் மேடையில் நான் ஆடிக்கொண்டிருக்கும் போது என்றான் இப்படியாக வரிசையாக சொல்லிக்கொண்டிருக்க என் முறை வந்தது.
நான் எப்படி சாக வேண்டும் ? :
உள்ளே என்ன சொல்ல என்ன சொல்ல என்று ஓடிக் கொண்டியிருந்தது. நான் எப்படி இறக்க வேண்டும் என்று நானே எப்படி முடிவெடுக்க முடியும்.. இதெல்லாம் நடந்து விடப்போகிறதா என்ன? அப்படியே நடந்து விட்டால் குழப்பங்களுடன் தவித்தேன்.
என் இறப்பை நானே முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இறந்தது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் அதை வெளியில் சொல்லலாமா என்ற தயக்கம் வேறு இருந்ததால் உள்ளேயே வைத்துக் கொண்டேன்.
நல்லா சிரிக்கணும்... வாய் விட்டு குலுங்கி குலுங்கி சிரிச்சுட்டேயிருக்கும் போது அப்டியே என் மூச்சு நிக்கணும் என்றேன்.
சிரிச்சுட்டே சாகணுமா? என்று கேட்டு கேட்டு சிரித்தார்கள்.
மரணம் எப்படியிருக்கும்? :
வர முடியாத... மீள முடியாத ஒரு முடிவாக தான் மரணம் இருக்கும். மரணத்திற்கு பிறகான இந்த உலகம் எப்படியிருக்கும் இவர்கள் சொல்வது போல பேய்... ஆவி எல்லாம் இருக்கிறது.
அப்படியே பேயாகிவிட்டாள் நான் யாரை பழி வாங்க வேண்டும்? ஆம், பேயென்றாள் தன் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு பெரிய பங்களாவில் ஒளிந்து கொள்ள வேண்டும் தானே..
அகோர மரணம் :
யார் கண்ணிலும் படாமல் அப்படியே கரைந்து போகக்கூடிய மரணம் எதாவது இருக்கிறதா? அகோரமான பார்க்கவே பயங்கரமானதாக இருக்கக்கூடிய மரணமாக அது இருந்தால் எப்படியிருக்கும்.
நெருப்புக் குழம்பில் அமிழ்ந்து உருகி உருக்குலைந்து கரைவது போன்ற ஓர் வலி. மரணத்தை சந்தோசத்துடன் தான் எதிர்கொள்ள வேண்டும் என்று எதாவது இருக்கிறதா என்ன? வலியுடன் இருந்தால் தான் என்ன?
காரணம் :
தற்கொலைக்கான சம்பிரதாய நடைமுறைகள் யோசிக்க ஆரம்பித்தேன். தற்கொலை என்றாலே முதலில் அதற்கான காரணத்தை தேடுவது, நான் இறந்த பிறகு மற்றவர்கள் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ அதற்கான காரணத்தை முதலில் நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாய் இருக்கிறது.
பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த காரணமும் இல்லை. மரணத்தை பார்க்க ஆசை.. ஒரு வெறுப்பு அவ்வளவுதான்.
இதைச் சொன்னால் எங்கே நம்புவார்கள். இட்டுக்கட்டி திரைக்கதையையே எழுதி விட மாட்டார்களா.?
கடிதம் :
காரணத்தை சொல்லிவிட்டு சாகவா இல்லை தேவையில்லையா? அதான் நான் செத்துட்டேன் அவன்வன் மண்டைய பிச்சுட்டு அலையட்டும் என்று நினைத்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
மறு கணமே எங்கே காரணத்தை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி பிறருக்கு தேவையில்லாத இடைஞ்சல் வந்து விடுமோ என்ற தயக்கம் இருந்தது.
சரி எதுக்கு வம்பு காராணத்தை எழுதி விடுவோம்.
பெட்ரோமாஸ் :
இந்த பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா? என்பது போல மெயில், ஃபேஸ்புக்,ட்விட்டர் என்று எத்தனையோ சமாச்சாரங்கள் வந்திருந்தும் தற்கொலைக்கான காரணத்தை பேப்பரிலேயே எழுதி வைக்க வேண்டுமா.... வழி வழியாக எல்லாரும் அப்படித்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் நாமும் அவ்வழியே செல்லலாம்.
கடிதம் :
‘அன்புள்ள அப்பா அம்மா... என்னை மன்னித்து விடுங்கள்',‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை', ‘சுயநினைவுடன் தான் முடிவெடுக்கிறேன்' போன்ற க்ளீஷேக்கள் எல்லாம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் தானே. நம்பும்படியான ஸ்ட்ராங்கான காரணத்தை சொல்லித் தொலைக்க வேண்டும்.
ம்ம்ம்... கடைசியில் மிஸ் யூ எழுதி மூன்று புள்ளியும்.
நம்பலாமா? :
நான் இறப்பதற்கான காரணம் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படியான காரணமாக தான் இருக்க வேண்டிய அவசியமில்லையே... நீ காதல் தோல்வியை பெரிதாக நினைப்பது போலவே நான் நண்பனின் பொய்யை பெரிதாக எடுக்கிறேன்.
காதல் தோல்விக்கு இறக்க துணியும் உன்னைப் போலவே அந்த பொய்க்கு நான் இறக்கத் துணிகிறேன். எனக்கு காதல் தோல்வி பெரிதாக தெரியவில்லை உனக்கு பொய்கள் சாதரணமாகத் தெரியலாம்.
இதெல்லாம் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் தான் இதெல்லாம் சாரணமான காரணங்கள் என்று தரம்பிரித்து ஆராய எல்லாம் எனக்கு நேரமில்லை.
அதை விட மிக முக்கியமாக என்ன காரணமிருந்தாலும் எதிர்த்து வாழ்ந்து காட்டணும் என்று பாடம் எடுப்பவர்கள் இப்பக்கம் வர வேண்டாம்.
வழி :
இறக்க பல வழிகள் இருக்கிறது. அவற்றில் நான் எதை தேர்ந்தெடுக்க நாலறைக்குள் துடித்துச் சாவது வேண்டாம் . பரந்து விரிந்து கிடக்கும் வானத்தை பார்த்தபடி, இந்த அண்டமே உன்னோடு நான் ஐக்கியமாகப்போகிறேன் என்று நிலத்தில் கிடந்தபடி, குருதி வழிய ஒர் மரணம்.
இயந்திர வாழ்க்கைக்கு ஓர் முற்றுப் புள்ளி வைத்து விட்டு நீண்ட பயணத்தின் முடிவில் இவை நிகழ வேண்டும்.
கேள்வி :
ஓர் நாள் இரவில் நெருக்கமான நண்பர்கள் சிலருக்கு நான் செத்துட்டா என்ன பண்ணுவ என்று கேட்டு வைத்தேன்.
வழக்கம் போல லூசு என்ற அடைமொழியுடனும் சில வசனங்களுடனும் முடித்துக் கொண்டார்கள். அவர்களின் வார்த்தைகள் என்னை இதிலிருந்து மீட்டெடுத்திருக்குமோ என்னவோ அப்படியெதுவும் அங்கே நடக்கவில்லை என் முடிவில் இன்னும் தீவிரமானேன்.
பேய் :
இப்போதிருக்கும் ஒரே பயம்... இறந்த பின் பேயாகிடுவேனா என்பது தான். பேயானால் என்னாகும்? கண்ட கண்ட சினிமாக்களை பார்த்து பயந்து கொண்டிருக்கிறேன். நான் பயமுறுத்தும் இடத்தில் இருக்கிறேன் என்பது கூட புரியாமல் பயந்து கொண்டிருப்பது தான் விதியென்பது.
உன்னைப் பற்றி மட்டும் யோசிக்கிறாய் உன்னைச் சுற்றியிருக்கும் பிறரைப் பற்றி நினைக்கவில்லை என்று பாடம் எடுப்பவர்களுக்கு நான் எழுதம் கடிதத்தின் நடுவில் பதில்களை சொல்ல திட்டமிட்டிருக்கிறேன். பரவாயில்லை கொஞ்சம் சுயநலத்துடன் இருந்து விட்டுப் போகிறேன்.
அந்த நாள் :
என்றைக்கு? எந்த நேரம்? என்றெல்லாம் எந்த திட்டமும் கிடையாது. மழைச் சாரல் தெறிக்கிற நாளில், என் நாய்க்குட்டி வாலாட்டி காலைச்சுற்றி வரும் வேலையில், யாரோ ஒருவரின் குறுஞ்செய்திக்காக காத்திருக்கிற கணத்தில், முகத்தில் காற்று அடிக்க வேகமாக வண்டியோட்டிக் கொண்டு செல்லும் வேலையில், தூக்கத்தின் நடுவில் எப்போது வேண்டுமானாலும் அந்த பொறி தட்டலாம்.
தட்டிய மறு கணத்தில் எல்லாமே அடங்கிப் போகும்.