Latest Updates
-
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இறந்ததாக கருதப்பட்ட நேதாஜி, துறவியாக வாழ்ந்து வந்தாரா? நீதிபதியின் பரபரப்பு தகவல்!
நீதிபதி சஹாய் தலைமையிலான குழு ஒன்று துறவி கும்மணி பாபா தான் நேதாஜியா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
ஓய்வுப் பெற்ற நீதிபதியான விஷ்ணு சஹாய் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அதில், கும்நாமி பாபா என அழைக்கப்படும் பைசாபாத் துறவி தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸா என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதனை உத்திர பிரதேச கவர்னர் ராம் நாயக்கிடம் அளித்துள்ளார்.
பலரும் இத்தகவலை ஆமோதித்துள்ளனர் என்பதால் சுபாஷ் சந்திர போஸ் குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.

கும்நாமி பாபா :
கும்நாமி பாபா தான் சுபாஷ் சந்திர போஸ் என்றும் இதனை விசாரிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், கடந்த வருடம் ஜூன் மாதம் சமாஜ்வாதி அரசால் நீதிபதி சஹாய் தலைமையிலான கமிஷன் நிறுவப்பட்டது.

நேதாஜி :
சஹாய் கமிஷனுக்கு கிடைத்த சாட்சிகள் கொண்டும் அவர்கள் கூறிய வாக்குமூலங்களை வைத்துமே இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் கூறியது கும்நாமி பாபா தான் நேதாஜி என்று தான். சிலர் இவர் நேதாஜி அல்ல என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

விசாரணை கமிஷன் :
அறிக்கையின் முடிவினை இன்னும் வெளிப்படுத்தாத நீதிபதி சஹாய் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில்,கும்நாமி பாபாவின் மரணத்திற்கும் விசாரணை கமிஷனின் சாட்சிக்கும் இடையே மிகப்பெரிய சவால் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

சவால் :
கும்நாமி பாபா இறந்தது 1985 ஆம் ஆண்டு.ஆனால் இவ்வழக்கு தொடுக்கப்பட்டு நடைப்பெற்றது 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் இடைவேளி இருக்கிறது. காலப்போக்கில் சில நினைவுகளை மறந்திருப்பார்கள், அல்லது சில நிகழ்வுகளை இவர்களாகவே கற்பனை செய்வதும் நடக்கும்.

மதிப்பீடு :
ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கும்நாமி பாபாவின் அடையாளத்தைப் பற்றி பலரும் கூறிய தகவல்களை மதிப்பீடு செய்திருக்கிறார் சஹாய்.
இந்த கமிஷன் நியமிக்கப்பட்ட நோக்கத்தின் படி ஆராய்ந்து பார்த்ததில், சாட்சிகளில் பெரும்பாலானோர் கும்நாமி பாபா தான் நேதாஜி என்று உறுதியாக கூறியிருக்கின்றனர்.மேலும், இந்த கமிஷன் தங்களின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால் மட்டும் கும்நாமி பாபா என்பவர் யார் என்பது குறித்து அடையாளம் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்வார்களாம்.



Click it and Unblock the Notifications