Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
பெருங்குற்றம் செய்து சிறை சென்ற 20 இந்திய அரசியல்வாதிகள் - கருப்பு ஆடுகள்!
இங்கு பெருங்குற்ற வழக்கில் சிக்கி சிறை சென்ற இந்திய அரசியல்வாதிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் என்றாலே கெட்டவர்கள், ஊழல் செய்பவர்கள், குற்றவாளிகள் என்ற பார்வை ஏற்பட காரணம் ஒருவேளை இவர்களாக இருக்கலாம்.

பதவியை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வண்ணம் தவறுகள் செய்து பெருங்குற்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற இந்திய அரசியல்வாதிகள்...

ஜெயலலிதா!
கட்சி - அதிமுக
குற்றம் - சொத்துக் குவிப்பு வழக்கு, ஊழல்
தண்டனை - நான்கு ஆண்டு சிறை, நூறு கோடி அபராதம்!
காலமான காரணத்தால் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார்.

சசிகலா!
கட்சி - அதிமுக!
குற்றம் - சொத்துக் குவிப்பு வழக்கு, ஊழல்
தண்டனை - நான்கு ஆண்டு சிறை, நூறு கோடி அபராதம்!

அமித்ஷா!
கட்சி - பா.ஜ.க
குற்றம் - போலி என்கவுண்டர் வழக்கு, கொலை, ஊழல்
தண்டனை - தண்டனை பெற்ற மூன்று மாதத்தில் ஜாமீனில் வெளிவந்துட்டார். குற்றத்தின் காரணத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

லாலு பிரசாத் யாதவ்!
கட்சி - ஆர்.ஜே.டி
குற்றம் - கால்நடைத் தீவன முறைகேடு, ஊழல், சொத்துக் குவிப்பு வழக்கு
தண்டனை - ஐந்து வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அக்பருதீன் ஓவாய்சி!
கட்சி - எ.ஐ.எம்.ஐ.எம்
குற்றம் - இனவாத, மத பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசியது.
தண்டனை - தண்டனை பெற்ற நாற்பது நாட்களில் ஜாமீனில் வெளிவந்துவிட்டார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மஹிபால்
கட்சி - காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்!
குற்றம் - பன்வாரி தேவி கொலை வழக்கு, கொலை, கடத்தல்
தண்டனை - சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

கனிமொழி!
கட்சி - திமுக
குற்றம் - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஊழல்
தண்டனை - ஆறு மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

சுரேஷ் கல்மாடி!
கட்சி - காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
குற்றம் - 2010 காமன்வெல்த் விளையாட்டு-ல் 70,000 கோடி ஊழல், மோசடிகள்,
தண்டனை - ஐந்து லட்சம் அபராதம், பத்து மாதம் சிறையில் இருந்து பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார். இவர் மீது இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பப்பு யாதவ்!
கட்சி - ஆர்.ஜே.டி!
குற்றம் - புருலியா ஆயுத வழக்கு, கொலை

ஆ. ராசா!
கட்சி - திமுக.
குற்றம் - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், 1.76 லட்சம் கோடி இழப்பு!
தண்டனை - திகார் சிறையில் 15 மாதம் இருந்து பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

எடியூரப்பா!
கட்சி - பா.ஜ.க
குற்றம் - நீர்ப்பாசன நில மோசடி, சுரங்க தொழில் நில மோசடி, ஊழல்
தண்டனை - ஒரு மாதம் சிறையில் இருந்து பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு அனுப்பலாம்.

அமர் சிங்!
கட்சி - எஸ்.பி யில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
குற்றம் - வாக்குக்கு பணம் கொடுத்தது, ஊழல்.
தண்டனை - 13 நாட்கள் சிறையில் இருந்து பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி!
கட்சி - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.
குற்றம் - நில மோசடி, சொத்து குவிப்பு வழக்கு.
தண்டனை - 16 மாதங்கள் சிறை இருந்து, பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார். எப்போது வேண்டுமானலும் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம்.

மது கோடா!
குற்றம் - சுரங்க ஊழல்.
தண்டனை - 2.6 வருடம் சிறையில் இருந்த பிறகு, ஜாமீனில் வெளிவந்துவிட்டார். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம்.

மாயா கோட்னானி
கட்சி - பா.ஜ.க
குற்றம் - இனவாத பதட்ட நிலை உருவாக்கியது, கலவரம் சதி, கொலை, நரோடா பாட்டியா படுகொலை
தண்டனை - 28 வருட சிறை தண்டனை. ஆனால், மூன்று மாதத்தில் மருத்துவ சிகிச்சை காரணமாக ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

சுசந்தா கோஷ்
கட்சி - சி.பி.ஐ. (எம்)
குற்றம் - கொலைகள், கடத்தல்
தண்டனை - ஆறு மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம்.

பீபீ ஜாகீர் கவுர்
கட்சி - எஸ்.எ.டி
குற்றம் - மகள் கொலை வழக்கு.
தண்டனை - ஐந்து வருட சிறை, 5000 அபராதம். 9 மாதத்தில் ஜாமீன் வாங்கி வெளிவந்துவிட்டார்.

முகமது ஷாபுதின்!
கட்சி - ஆர்.ஜே.டி
குற்றம் - கொலை, கடத்தல், வாக்குச் சாவடி மோசடி, ஊழல்
தண்டனை - ஆயுள்தண்டனை

பங்காரு லக்ஷ்மணன்
கட்சி - பா.ஜ.க
குற்றம் - ஆயுத ஊழல் வழக்கு
தண்டனை - நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆனால், தண்டனை காலத்தின் இரண்டாவது ஆண்டிலேயே மரணம் அடைந்துவிட்டார்.

ராஷீத் மசூத்!
கட்சி - காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
குற்றம் - மருத்துவ தேர்வாணையம் ஊழல்.
தண்டனை - நான்காண்டு சிறை தண்டனை.

ஓம் பிரகாஷ் சவுதாலா
கட்சி - ஐ.என்.எல்.டி
குற்றம் - ஆசிரியர் தேர்வு முறைகேடு
தண்டனை - 10 ஆண்டுகள் சிறை தண்டனை.

சுக் ராம்
கட்சி - காங்கிரஸ்
குற்றம் - டெலிகாம் விநியோகம் முறைகேடுகள், சொத்துக் குவிப்பு வழக்கு.
தண்டனை - 2002-ல் மூன்று ஆண்டுகளும், பிறகு 2011-ல் ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications











