Latest Updates
-
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
நாளை முதல் இதுக்கெல்லாம் கூட நீங்க ஆதார் கார்டு காட்டணும்...!
ஒருவேளை நாளை முதல் இதற்கெல்லாம் கூட மக்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அல்லது ப்ரூப்பாக காட்ட வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வரலாம்.
அரசு பள்ளிகளில் சத்துணவு வாங்கி உண்ணும் குழந்தைகளிடம் கூட அரசு ஆதார் எண்ணை கேட்க துவங்கியுள்ளது. சமீபத்தில் PAN கார்டு வாங்குவதற்கும் ஆதார் கார்டு காட்ட வேண்டும் என்ற சட்டம் வந்துள்ளது. இதே போல நாளை மத்திய அரசு இதற்கெல்லாம் கூட ஆதார் கார்டு கேட்கலாம்...

(ஒரு சிறிய கற்பனை... உலலாச்சுக்கும்....)

விஷயம் # 1
வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம்.

விஷயம் # 2
நீங்கள் ஆன்லைனில் ஏதேனும் பொருள் வாங்குகிறீர்கள் என்றால், விலாசத்துடன் சேர்த்து ஆதார் எண்ணையும் சேர்க்க வேண்டும். இல்லையேல் பொருள் டெலிவரி செய்யப்பட மாட்டாது.

விஷயம் # 3
முக்கியமான கோவில்களுக்குள் சென்று கடவுளை தரிசிக்க வேண்டும் என்றால், முக்கியமாக ஏழுமலையான் உண்டியல் காசு போட வேண்டும் என்றால் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்.

விஷயம் # 4
முகநூலில் புதிய கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும், நடப்பு கணக்கை தொடர வேண்டும் என்றாலும் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதார் என்னை பதிவு செய்து தான் லாகின் செய்ய வேண்டும். மார்க்குடன் ஒப்பந்தம் கூட போடலாம்.

விஷயம் # 5
இனிமேல், மீம்ஸ் போட்டால் அதில் ஆதார் எண்ணை வாட்டர்மார்க்காக சேர்க்க வேண்டும். இல்லையேல் அந்த மீம் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களில் இருந்து நீக்கப்படும்.

விஷயம் # 6
எப்படி வண்டி ஓட்ட டிரைவிங் லைசன்ஸ் வேண்டுமோ, அதுபோல, இனிமேல் இந்திய சாலைகளில் நடப்பதற்கு ஆதார் கார்டு வேண்டும். அரசு அதிகாரிகள் உங்களை எங்கு வேண்டுமானலும் மடக்கிப்பிடித்து ஆதார் கார்டு கேட்பார்கள். உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும்.

விஷயம் # 7
கல்யாணம் பண்ணிக்கணும்னா கட்டாயம் ஆதார் கார்ட் காட்ட வேண்டும். ஆண், பெண் ஒருவரிடம் ஆதார் கார்டு இல்லை என்றாலும் கூட அந்த கல்யாணம் செல்லாது.

விஷயம் # 8
ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றால், அவரது ஆதார் கார்டு காட்டிய பிறகு அட்மிட் செய்ய வேண்டும்.

விஷயம் # 9
பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கையின் போது ஆதார் எண் கட்டாயம். இல்லையேல் அவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட மாட்டாது.

விஷயம் # 10
அரசு பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் முன்னர் ஆதார் எண்ணை காட்ட வேண்டும்.



Click it and Unblock the Notifications