Latest Updates
-
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
நாளை முதல் இதுக்கெல்லாம் கூட நீங்க ஆதார் கார்டு காட்டணும்...!
ஒருவேளை நாளை முதல் இதற்கெல்லாம் கூட மக்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அல்லது ப்ரூப்பாக காட்ட வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வரலாம்.
அரசு பள்ளிகளில் சத்துணவு வாங்கி உண்ணும் குழந்தைகளிடம் கூட அரசு ஆதார் எண்ணை கேட்க துவங்கியுள்ளது. சமீபத்தில் PAN கார்டு வாங்குவதற்கும் ஆதார் கார்டு காட்ட வேண்டும் என்ற சட்டம் வந்துள்ளது. இதே போல நாளை மத்திய அரசு இதற்கெல்லாம் கூட ஆதார் கார்டு கேட்கலாம்...

(ஒரு சிறிய கற்பனை... உலலாச்சுக்கும்....)

விஷயம் # 1
வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம்.

விஷயம் # 2
நீங்கள் ஆன்லைனில் ஏதேனும் பொருள் வாங்குகிறீர்கள் என்றால், விலாசத்துடன் சேர்த்து ஆதார் எண்ணையும் சேர்க்க வேண்டும். இல்லையேல் பொருள் டெலிவரி செய்யப்பட மாட்டாது.

விஷயம் # 3
முக்கியமான கோவில்களுக்குள் சென்று கடவுளை தரிசிக்க வேண்டும் என்றால், முக்கியமாக ஏழுமலையான் உண்டியல் காசு போட வேண்டும் என்றால் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்.

விஷயம் # 4
முகநூலில் புதிய கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும், நடப்பு கணக்கை தொடர வேண்டும் என்றாலும் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதார் என்னை பதிவு செய்து தான் லாகின் செய்ய வேண்டும். மார்க்குடன் ஒப்பந்தம் கூட போடலாம்.

விஷயம் # 5
இனிமேல், மீம்ஸ் போட்டால் அதில் ஆதார் எண்ணை வாட்டர்மார்க்காக சேர்க்க வேண்டும். இல்லையேல் அந்த மீம் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களில் இருந்து நீக்கப்படும்.

விஷயம் # 6
எப்படி வண்டி ஓட்ட டிரைவிங் லைசன்ஸ் வேண்டுமோ, அதுபோல, இனிமேல் இந்திய சாலைகளில் நடப்பதற்கு ஆதார் கார்டு வேண்டும். அரசு அதிகாரிகள் உங்களை எங்கு வேண்டுமானலும் மடக்கிப்பிடித்து ஆதார் கார்டு கேட்பார்கள். உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும்.

விஷயம் # 7
கல்யாணம் பண்ணிக்கணும்னா கட்டாயம் ஆதார் கார்ட் காட்ட வேண்டும். ஆண், பெண் ஒருவரிடம் ஆதார் கார்டு இல்லை என்றாலும் கூட அந்த கல்யாணம் செல்லாது.

விஷயம் # 8
ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றால், அவரது ஆதார் கார்டு காட்டிய பிறகு அட்மிட் செய்ய வேண்டும்.

விஷயம் # 9
பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கையின் போது ஆதார் எண் கட்டாயம். இல்லையேல் அவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட மாட்டாது.

விஷயம் # 10
அரசு பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் முன்னர் ஆதார் எண்ணை காட்ட வேண்டும்.



Click it and Unblock the Notifications











