Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
மனித உயிருடன் விளையாடும் அடுத்த போட்டி? வருகிறது பிங்க் வேல் கேம்!!
இணையத்தில் தற்கொலையை தூண்டும் வகையிலான ப்ளூ வேல் கேமுக்கு போட்டியாக பிங்க் வேல் கேம் ஒன்று பரவி வருகிறது. இது மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர அறிவுறுத்துகிறது.
இணையத்தை பயன்படுத்துபவர்களை கதிகலங்கச் செய்த ப்ளூவேல் கேம் போலவே இப்போது பிங்க் வேல் என்ற கேம் வேகமாக பரவி வருகிறது. ப்ளூவேல் கேம் விளையாடுபவர்கள் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளச் சொல்லும் ஆனால் பிங்க் வேல் என்ன சொல்கிறது தெரியுமா? அன்பு செய்யவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே சொல்கிறது.

ப்ளூவேல் கேம் :
ப்ளீ வேல் கேம் விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என பல புகார்கள் எழுந்து வருகிறது. ஆன்லைன் கேமான இதனை விளையாடுபவருக்கு தினசரி ஒரு டாஸ்க் என 50 நாட்கள் சில வேலைகளை செய்யச் சொல்லும்.
இறுதியாக அந்த கேம் விளையாடுபவர் தற்கொலை செய்ய தூண்டும்.ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கோரிக்கை :
2015- 2016 வரை புளூ வேல் விளையாடி 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் புளூ வேல் பல உயிர்களை பறித்து வருகிறது. புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த கேம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிங்க் வேல் :
இந்தியாவில் புளூ வேல் விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரேசில் நாட்டை சேர்ந்த டெவலப்பர் ஒருவர் பிங்க் வேல் என்ற கேமினை உருவாக்கியுள்ளார்.
போர்ச்சுகீஸ் மொழியில் பலீயா ரோசா என அழைக்கப்படும் பிங்க் வேல் சேலஞ் ஏற்கனவே அச்சுறுத்தலாக இருக்கும் புளூ வேல் சவால்களுக்கு மாறாக இருக்கிறது.

என்ன செய்கிறது பிங்க் வேல்? :
ப்ளூவேல் போலவே பிங்க் வேலிலும் தினமும் ஒரு டாஸ்க் இருக்கும். இது நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை தூண்டும் விதமாகவும் அன்புச்செய்யச் சொல்லியும் தான் இருக்கும். இந்த கேம் ஒருவருக்குள் அன்பை பரிமாறச் செய்வதோடு, நேசிக்கச் செய்யும் சவால்களை கொண்டுள்ளது.

வரவேற்பு
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும். புளூ வேல் போன்றே 50 சவால்களை கொண்டுள்ள பிங்க் வேல் அவை அனைத்தையும் வித்தியாசமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. இதன் ஐம்பதாவது சவால் ஒரு உயிரை காப்பாற்றுவது ஆகும். இதுவரை 500,000க்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்றுள்ள பின்க் வேல் சேலன்ஜ் அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications