ஆட்டோ ஓட்டுனர் முதல் தேசிய விருது வரை - கலாபவன் மணி!

சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி தென்னிந்திய திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. காமெடி, நடிப்பு, குணச்சித்திரம் என ஒரு வெர்சடைல் நடிகரார சிறந்து விளங்கினார் கலாபவன் மணி.

மிமிக்ரி மூலம் சினிமா வாய்ப்பு பெற்றிருந்தாலும், திரையுலகில் நுழைந்த பிறகு காமெடி மட்டும் இல்லாமல், சிறந்த நடிப்பு, இசை, கதை எழுதுதல் என பல துறைகளில் தனது முத்திரையை பதித்தார். இவரது மறைவு உறவினர்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு சினிமா ரசிகரையும் அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. முன்னேற திறமையை தவிர வேறெதுவும் தேவையில்லை என்பதற்கு கலாபவன் மணி ஓர் சிறந்த எடுத்துக் காட்டு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்பக் காலக்கட்ட வாழ்க்கை

ஆரம்பக் காலக்கட்ட வாழ்க்கை

கேரளாவின் சாலக்குடி எனும் பகுதியில் 1971-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்தார் கலாபவன் மணி. சாதாரண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை கடந்து தனது திறமையால் திரையுலகில் உயர்ந்தவர் கலாபவன் மணி.

ஆட்டோ ஓட்டுனர்

ஆட்டோ ஓட்டுனர்

சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் கலாபவன் மணி ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். ஆரம்பம் முதலே இவர் பலக்குரல்களில் பேசும் திறன் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலக்குரல் திறமை

பலக்குரல் திறமை

கேரளாவில் கலாபவன் மணியின் நாடகக்குழு மிகவும் பிரபலமானதாக இருந்து வந்தது. இவர்கள் பல மேடை நிகழ்சிகள் நடத்தியுள்ளனர். பல நடிகர்களின் குரல்கள் மட்டுமின்றி விலங்குகள் போல நகைச்சுவையாக பேசுவதிலும் திறமைவாய்ந்த்து இருந்தார் கலாபவன் மணி.

திரையில் தோற்றம்

திரையில் தோற்றம்

மை டியர் குட்டிச்சாத்தானில் ஆரம்பித்து, சமுதாயம், தி போர்ட்டர், அக்ஷாரம் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றினார் கலாபவன் மணி. இதன் பிறகு பல படங்களில் காமெடி வேடங்கள் ஏற்று நடித்தார் கலாபவன் மணி.

வசந்தியும், லக்ஷிமியும் பின்னே நானும்

வசந்தியும், லக்ஷிமியும் பின்னே நானும்

வசந்தியும், லக்ஷிமியும் பின்னே நானும் என்ற திரைப்படம் தான் இவரது முதல் சீரியஸ் படமாக அமைந்தது. இந்த படத்திற்காக கலாபவன் மணி தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்காக கேரள மாநில விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகளும் வாங்கினர்.

ராமு

ராமு

வசந்தியும், லக்ஷிமியும் பின்னே நானும் என்ற படத்தில் இவர் வேடமேற்று நடித்த ராமு கதாப்பாத்திரம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

நாட்டுப்புற பாடல்கள்

நாட்டுப்புற பாடல்கள்

மிமிக்ரி, மேடை நாடகம், காமெடியன், நடிகன் மட்டுமின்றி, கலாபவன் மணி நாட்டுப்புற பாடல்களும் பாடியுள்ளார். இவரது முதல் இசை ஆல்பம் "Kannimanga Prayathil" என்பதாகும். மேலும், பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் கலாபவன் மணி.

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்

நாட்டுப்புற பாடல்கள் மட்டுமின்றி கலாபவன் மணி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். "மணி மழுகுன்னது யார்க்குவேண்டி" (Mani Mazhugunnathu Arkkuvendi), "எம்.எல்.எ மணி பத்தாம் கிளாசும் குஸ்தியும்" போன்ற இரண்டு படங்களுக்கு இவர் இசை அமைத்தார்.

கதை

கதை

"எம்.எல்.எ மணி பத்தாம் கிளாசும் குஸ்தியும்" என்ற படத்திற்கு கதை எழுதியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ ஓட்டுனர் முதல் தேசிய விருது வரை

ஆட்டோ ஓட்டுனர் முதல் தேசிய விருது வரை

சாதாரண ஆட்டோ ஓட்டுனராக இருந்து படிப்படியாக முன்னேறியவர் கலாபவன் மணி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில டிவி நிகழ்சிகளிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion