Latest Updates
-
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி?
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
இந்தியா நாம் நினைப்பதை விட மிகப்பழமையான வரலாற்றையும், தொன்மையையும் கொண்டுள்ளது. உலகின் முதல் ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. உண்மையில் சொல்லப்போனால், ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மனிதச் செயல்பாடுகளுக்கான சான்றுகள் இந்தியாவில் கிடைத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆதி மனிதர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி விவரிக்கும் பல இடங்கள் இங்கு உள்ளன. வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடங்கள், இந்தியாவில் நிகழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட மனிதப் பயணத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகின்றன. ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும், இந்தியாவில் அமைந்துள்ள முக்கியமான இடங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பீம்பேட்கா பாறை உறைவிடங்கள், மத்தியப் பிரதேசம்
மத்திய பிரதேசத்தின் போபாலிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பீம்பேட்கா, 700-க்கும் மேற்பட்ட பாறை உறைவிடங்களைக் கொண்ட ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாகும். இந்த உறைவிடங்களில் சில பகுதிகள் சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. கற்காலத்தைச் சேர்ந்த கல் கருவிகளையும், வேட்டையாடுதல், நடனம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்தரிக்கும், இடைக்கற்காலத்தைச் சேர்ந்த பிரமிக்க வைக்கும் பாறை ஓவியங்களையும் இந்த இடத்திற்கு சென்றால் நாம் பார்க்கலாம்.
அத்திரம்பாக்கம், தமிழ்நாடு
சென்னையருகே கொற்றலை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள அத்திரம்பாக்கம், இந்தியாவின் மிகப் பழமையான தொல்லியல் தளங்களில் ஒன்றாகும். ஆய்வுகளின் படி, இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் 1.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருவிகள் 'ஹோமோ எரக்டஸ்' அல்லது அது சார்ந்த ஆதி மனித இன முன்னோடிகளுடன் தொடர்புடையவை என கருதப்படுகிறது. இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், கைக்கோடாரிகள் மற்றும் வெட்டுக்கருவிகள் போன்ற 'அச்சூலியன்' வகைக் கருவிகளையும் கண்டறிந்துள்ளன.
நர்மதா பள்ளத்தாக்கு, மத்திய பிரதேசம்
இந்தியாவில் இதுவரை அறியப்பட்ட ஒரே ஒரு 'ஹோமோ எரக்டஸ்' படிமம் நர்மதா பள்ளத்தாக்கில்தான் உள்ளது. இது 1982-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மண்டையோட்டின் ஒரு பகுதியாகும், இது சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பகுதியிலிருந்து, இடைக்கால பிளெய்ஸ்டோசீன் (Middle Pleistocene) காலகட்டத்தைச் சேர்ந்த பல கற்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நர்மதா பள்ளத்தாக்கைச் சுற்றி பல எழில்மிகு பகுதிகள் உள்ளன. இங்கு சென்றால் ஆதி மனிதர்களின் வரலாறு மட்டுமின்றி கண்கவர் காட்சிகளையும் பார்க்கலாம்.
தாபா, மத்தியப் பிரதேசம்
சோன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள 'தாபா', இந்தியாவின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான தொல்லியல் தளங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில், சுமார் 80,000 முதல் 65,000 ஆண்டுகளுக்கு முன்பே 'ஹோமோ சேப்பியன்ஸ்' இனத்தவர் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளது. இப்பகுதி சுற்றுலாரீதியாகப் பெரிதாக மேம்படுத்தப்படவில்லை என்றாலும், மத்திய பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா மற்றும் சாஞ்சி போன்ற தளங்கள் போலவே இதுவும் மிகவும் பழமையானதாகும்.
தோலாவிரா, குஜராத்
தோலாவிரா, குஜராத்தின் கட்ச் ரண் பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக முக்கியமான யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும். கி.மு. 2600 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில் செழித்தோங்கிய, சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த நகரங்களிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றாக தோலாவிரா திகழ்கிறது. இந்த மேம்பட்ட நகரக் குடியிருப்பு, ஆதி மனிதச் சமூகங்களால் வாழ்விடமாகப் பயன்படுத்தப்பட்டது. இது அதிநவீன நீர் மேலாண்மை அமைப்புகள், படிக்கிணறுகள் மற்றும் கட்டவடிவ அமைப்பிலான தெருக்களைக் கொண்டிருந்தது. சிந்து சமவெளி நாகரிகத்தின் முத்திரைகள், மட்பாண்டங்கள் மற்றும் மணிகள் போன்ற பல பொருட்கள் இத்தளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications
