Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Olympics 2024: ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இதுவரை நடந்த பிரபல ஊழல்கள் மற்றும் சர்ச்சைகள்..இவ்வளவு நடந்திருக்கா
Olympics 2024: உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளும் உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிரியாது. உலகளாவிய ஒற்றுமை மற்றும் தடகள சிறப்பின் சின்னமாக விளங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் சர்ச்சைகளும், சிக்கல்களும் இல்லாமல் இல்லை.
பல ஆண்டுகளாக, அரசியல் சிக்கல்கள் முதல் ஊக்கமருந்து ஊழல்கள் வரையிலான சிக்கல்களை உள்ளடக்கிய பல சர்ச்சைகள் இந்த கொண்டாட்ட விளையாட்டின் சுவாரஸ்யத்தையும், ஒற்றுமை உணர்வையும் சிதைத்துள்ளன. ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய மோசமான சர்ச்சைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1980-ல் மாஸ்கோ புறக்கணிப்பு
1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா நடத்திய புறக்கணிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
60 க்கும் மேற்பட்ட நாடுகள் புறக்கணிப்பில் இணைந்தபோது பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த அரசியல் நகர்வு பனிப்போர் பதட்டங்களின் தொடர்ச்சியான விளைவுகளையும், ஒலிம்பிக் இயக்கத்தில் உலகளாவிய அரசியலின் தாக்கத்தையும் உலகுக்குக் காட்டியது.
பென் ஜான்சனின் ஊக்கமருந்து ஊழல்
1988 சியோல் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் கனடாவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் பென் ஜான்சனின் வெற்றி குறுகிய காலமே நீடித்தது. அவர் தடைசெய்யப்பட்ட ஸ்டீராய்டு ஸ்டானோசோலோலை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டது, இது அவரது தகுதி நீக்கம் மற்றும் அவரது தங்கப் பதக்கத்தை பறிக்க வழிவகுத்தது. இந்த சம்பவம் கடுமையான ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளுக்கு வழிவகுத்தது.
1996 அட்லாண்டா குண்டுவெடிப்பு
1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்காவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. பைப் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் எரிக் ராபர்ட் ருடால்ப் என்பவரால் நடத்தப்பட்டது, பின்னர் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த மோசமான நிகழ்வு சர்வதேச அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியது.
2016 ரஷ்ய ஊக்கமருந்து ஊழல்
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அரசால் ஆதரவளிக்கப்பட்ட ஊக்கமருந்து பற்றிய வெளிப்பாடுகளால் அதிர்ந்தது. உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி (WADA) நடத்திய விசாரணையில், பரவலான ஊக்கமருந்து பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன, இது பல ரஷ்ய விளையாட்டு வீரர்களின் இடைநீக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த ஊழல் மோசடியின் அளவை அம்பலப்படுத்தியது மற்றும் சம்பந்தப்பட்டவர்களை மோசமான விளைவுகளை சந்திக்க வழிவகுத்தது.
2016 ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் பிரபல பொய்
2016 ரியோ ஒலிம்பிக்கின் போது, அமெரிக்க நீச்சல் வீரர் ரியான் லோச்டே மற்றும் அவரது அணியைச் சேர்ந்த மூன்று பேர் ஆயுதமேந்திய கொள்ளையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறினர். எனினும், கேஸ் ஸ்டேஷனில்
தாங்கள் செய்த நாசத்தை மறைப்பதற்காக அவர்கள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவம், பெரும்பாலும் "லோக்டேகேட்" என்று குறிப்பிடப்படுகிறது, இது சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது.
2021 பெலாரஸ் தடகள சம்பவம்
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில், தொற்றுநோய் காரணமாக 2020-க்குப் பதிலாக, 2021 இல் நடத்தப்பட்டது, பெலாரஷ்ய ஸ்ப்ரிண்டர் கிறிஸ்டினா சிமானோஸ்காயா தனது பயிற்சியாளர்களை விமர்சித்ததற்காக அவரது நாட்டு அதிகாரிகளாலேயே விளையாட்டுகளில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். அவர் போலந்தில் புகலிடம் கோரினார், விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுகளில் அரசியல் தலையீடு போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தினார். இந்த சம்பவம் சிமானுஸ்காயாவுக்கு சர்வதேச கண்டனத்தையும் ஆதரவையும் ஈர்த்தது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் குத்துசண்டை சர்ச்சை
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் தைவானின் லின் யூ-டிங் ஆகியோர் பாலின சோதனை சிக்கல்கள் காரணமாக 2023 மகளிர் உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது பெண்கள் குத்துச்சண்டையில் ஒரு சர்ச்சை வெடித்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) இந்த விளையாட்டு வீரர்கள் திருநங்கைகள் அல்ல என்று தெளிவுபடுத்தியது, ஆனால் இந்த சம்பவம் பரவலான விவாதத்தைத் தூண்டியது.
இரண்டு விளையாட்டு வீரர்களும் தீவிர இனவெறி மற்றும் தவறான பாலின சிக்கல்களை எதிர்கொண்டனர், பலர் அவர்களை திருநங்கைகள் அல்லது பயாலஜிக்கல் ஆண்கள் என்று தவறாக முத்திரை குத்துகின்றனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங், எலோன் மஸ்க் மற்றும் பலர் இரு விளையாட்டு வீரர்களுக்கும் சரமாரியாக ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.



Click it and Unblock the Notifications












