இனிமே உங்க SIM நெட்வொர்க்கை அவ்வளவு ஈஸியா மாத்த முடியாதாம்... நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகள்...!

சிம் பரிமாற்றம், சேதமடைந்த அல்லது திருடப்பட்ட சிம் கார்டுகளை மாற்றுவது தொடர்பான பல புதிய வழிகாட்டுதல்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மார்ச் 14 அன்று அறிவித்தது. இந்த விதிகள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகின்றன.

இந்த வழிகாட்டுதல்களின்படி, மொபைல் ஃபோன் பயனர்கள் தங்கள் நெட்வொர்க்குகளை மாற்ற அனுமதிக்கப்படுவதற்கு முன் குறிப்பிட்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டும். ரெகுலேட்டரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையானது மோசடியான சிம் மாற்றங்களைத் தடுப்பதையும், தொலைத்தொடர்பு வழங்குநர்களை(telecom providers) மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

New Sim Card Rule TRAI Imposes New Regulations for Mobile Number Portability

புதிய TRAI வழிகாட்டுதல்கள்

TRAI வழங்கிய சுற்றறிக்கையின்படி, நெட்வொர்க் வழங்குநர்களை மாற்ற பயனர்கள் திருடப்பட்ட, சேதமடைந்த அல்லது இழந்த சிம் கார்டுகளை மாற்றிய பின் ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டும். 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (MNP)ரெகுலேஷனின் ஒன்பதாவது திருத்தத்தைத் தொடர்ந்து இந்த புதிய விதிகள் இன்று நடைமுறைக்கு வருகின்றன. MNP விதிமுறைகள் கடந்த காலத்தில் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளன.

பொதுவாக MNP விதிமுறைகள் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் எண்களைத் தக்க வைத்துக் கொண்டு, இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடையே மாறுவதற்கான வழியை வழங்குகின்றன. TRAI அறிக்கையின் படி, அதன் புதிய விதிகள் மோசடியான சிம் பரிமாற்றங்கள் அல்லது தவறான நபர்களால் செய்யப்படும் மாற்றங்களைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

TRAI சிம் ஸ்வாப்பை "தற்போதுள்ள சந்தாதாரரால் தொலைந்து போன அல்லது வேலை செய்யாத சிம் கார்டுக்குப் பதிலாக புதிய சிம் கார்டைப் பெறுவதற்கான" செயல்முறையாக வரையறுக்கிறது. பழைய சிம் கார்டு தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ மொபைல் ஃபோன் பயனர்கள் புதிய சிம் கார்டைப் பெறுவதற்கு ரெகுலேட்டர் அனுமதிக்கிறது.

விதிமுறைகளின்படி, டெலிகாம் வழங்குநர்கள் சிம்மை மாற்றியமைத்தல் அல்லது மாற்றியமைத்த முதல் ஏழு நாட்களில் பயனர்களுக்கு தனித்துவமான போர்டிங் குறியீட்டை (UPC) வழங்குவது தடைசெய்யப்படும். இதற்காக, UPC வெளியீட்டை நிராகரிப்பதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. UNP ஐ வெளியிட, மொபைல் சேவை வழங்குநர்கள் பின்வரும் நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டும்.

1. மொபைல் எண் முன்பே போர்ட் செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், போர்டிங்கின் கடைசித் தேதியிலிருந்து 90 நாட்கள் கடக்காமல் இருக்க வேண்டும்.
2. அதே மொபைல் எண்ணிலிருந்து மற்றொரு போர்டிங் கோரிக்கை செயல்பாட்டில் உள்ளது.
3. மொபைல் எண்ணுக்கு ஏற்கனவே UPC வழங்கப்பட்டுள்ளது மற்றும் காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கூறிய நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், நெட்வொர்க் வழங்குநர் UPC ஐ உருவாக்குவதிலிருந்து தடைசெய்யப்படுவார் மற்றும் TRAI இன் படி அதற்கான காரணத்தை சந்தாதாரருக்கு SMS மூலம் தெரிவிக்க வேண்டும்.

இந்த விதிகளின் வரைவு தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஆலோசனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டது என்று TRAI தெரிவித்துள்ளது. உரிய பகுப்பாய்வோடு பங்குதாரர்களுடன் சந்திப்புகளும் நடத்தப்பட்டன, அதைத் தொடர்ந்து திருத்தம் அறிவிக்கப்பட்டது.

Story first published: Monday, July 1, 2024, 20:01 [IST]
Desktop Bottom Promotion