Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
அக்டோபர் 24-க்குள் இந்த மாதிரியான கனவுகள் வந்துச்சுன்னா.. உங்கள தேடி பணம் வரப் போகுதுன்னு அர்த்தம்..
Navratri 2023: இந்த ஆண்டின் நவராத்திரியானது அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் மிகவும் சிறப்பாக பூஜை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.
மேலும் நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வணங்கும் போது, துர்கா தேவி தனது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. இதனால் துர்கா தேவியை மகிழ்விக்க ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் பலகாரங்கள் செய்து படைத்து வழிபடுவது வழக்கம்.

இப்படிப்பட்ட நவராத்திரி நாட்களில் காணும் சில கனவுகள் மிகவும் மங்களகரமானது என்பது தெரியுமா? அதுவும் அந்த கனவுகள் துர்கா தேவியின் அருள் கிடைத்துள்ளதைக் குறிக்கிறது. அதோடு இது ஒருவருக்கு வரவுள்ள நல்ல செய்திகளையும், பண வரவையும் குறிக்கிறது. இப்போது எந்த கனவுகள் நவராத்திரி நாட்களில் வருவது மங்களகரமானது என்பதைக் காண்போம்.
சிங்கத்தின் மீது துர்கா தேவி இருப்பது
நவராத்திரி நாட்களில் நீங்கள் உங்கள் கனவில் சிங்கத்தின் மீது துர்கா தேவி சவாரி செய்வதைக் கண்டால், அது மிகவும் மங்களகரமான அறிகுறியாகும். இம்மாதிரியான கனவு வந்தால், பாதியில் நிறுத்தப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு நீண்ட நாட்களாக உங்களை தொந்தரவு செய்து வந்த எதிரிகளை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.
குங்குமமும்.. சிவப்பு வளையலும்..
கனவு சாஸ்திரத்தின் படி, பொதுவாக ஒருவரது கனவில் வளையலும், குங்குமமும் வருவது நல்ல அறிகுறி. அதுவும் நவராத்திரி நாட்களில் இம்மாதிரியான கனவு வந்தால், அது உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப் போகிறது என்பதையும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதையும் குறிக்கிறது.
யானையை காண்பது
பொதுவாக யானை கனவில் வருவது நல்லது. அதுவும் நவராத்திரி காலத்தில் கனவில் யானை வந்தால் அல்லது யானையின் மீது துர்கா தேவி சவாரி செய்வது போன்று வந்தால், அது நல்ல அறிகுறியாகும். இம்மாதிரியான கனவு காண்பரின் பெரிய திட்டம் ஒன்று வெற்றிகரமாக முடியவுள்ளதைக் குறிக்கிறது. மேலும் தடைபட்ட வேலைகளும் வெற்றிகரமாக முடியும்.
பால் அல்லது இனிப்புக்களை காண்பது
நவராத்திரி நாட்களில் உங்களின் கனவில் பாலையோ அல்லது இனிப்பு பலகாரங்களையோ கண்டால், அது உங்களுக்கு நடக்கவுள்ள நல்ல விஷயங்களைத் தான் குறிக்கிறது. அதுவும் இந்த கனவு சமூகத்தில் உங்கள் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கப் போவதைக் குறிக்கிறது. மேலும் உங்களின் பெரிய ஆசைகளும் நிறைவேறப் போவதையும் உணர்த்துகிறது.
துர்க்கையின் சிலை
கனவில் தெய்வங்களைக் காண்பது நல்ல சகுனமாகும். அதுவும் நவராத்திரி நாட்களில் துர்க்கை அம்மனை கண்டால், துர்கா தேவியின் பரிபூர்ண அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம். உங்களின் பூஜையால் துர்கா தேவி மகிழ்ச்சியாக இருப்பதை இந்த கனவு குறிக்கிறது. அதோடு நிறைய பணத்தை சம்பாதிக்கப் போகிறீர்கள் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் போவதையும் இந்த கனவு குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications