Latest Updates
-
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
நவராத்திரி 2023: நவராத்திரி சமயத்தில் இந்த பொருட்களை தெரியாமகூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பாவம் வந்துசேரும்...
Navaratri 2023: நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் கலைகட்ட தொடங்கி விட்டது. நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் நடைபெறும் மங்களகரமான பண்டிகையாகும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் குறிப்பிட்ட நிறம் மற்றும் அவதாரத்துடன் தொடர்புடையது.
துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களில் மா சஹில்பூர்த்ரி, மா பிரம்மச்சாரிணி, மா சந்திரகண்டா, மா குஷ்மாண்டா, மா ஸ்கந்தமாதா, மா காத்யாயனி, மா கல்ராத்ரி, மா மஹாகௌரி மற்றும் மா சித்திதாத்ரி ஆகியவை அடங்கும்.

நவராத்திரி என்பது இந்துக்களின் மிகவும் புனிதமான மற்றும் மரியாதைக்குரிய பண்டிகைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டங்களில் விரதம் இருப்பது, துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை வழிபடுவது, கடவுளுக்கு உணவு படைத்தல் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.
நவராத்திரியின் முக்கிய சடங்காக விரதம் இருந்து வருகிறது, மேலும் இந்த புனிதமான ஒன்பது நாட்களில் சில உணவுகளைத் தவிர்ப்பதும் அடங்கும். எனவே நவராத்திரியின் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ உணவுகள்
இந்து மத சாஸ்திரங்களின்படி, நவராத்திரியின் ஒன்பது நாட்கள் புனிதமான காலத்தில் இறைச்சி, கோழி, மீன் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பின்னால் இருக்கும் பிரபலமான நம்பிக்கைகளில் ஒன்று, இந்து மதத்தில் விலங்குகளைக் கொல்வது பாவமாகக் கருதப்படுகிறது.
ஆல்கஹால்
நவராத்திரியின் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று பல சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி தனது பக்தர்களுக்கு அருள் புரிய பூமிக்கு வருவதால் மிகவும் புனிதமான காலமாக கருதப்படுகிறது. எனவே, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
மசாலா பொருட்கள்
பல மசாலாப் பொருட்கள் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்வதாகவும், மேலும் அவற்றை அதிகரிப்பதாகவும் கருதப்படுகின்றன, அதனால்தான் நவராத்திரியின் போது அவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
சிவப்பு மிளகாய், மஞ்சள், பெருங்காயம், கரம் மசாலா, கொத்தமல்லி தூள், வெந்தயம் மற்றும் சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் போன்றவை தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்களாகும். மேலும், நவராத்திரியின் போது வழக்கமான உப்பு உட்கொள்ளக்கூடாது, வழக்கமான உப்புக்குப் பதிலாக கல் உப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.
காய்கறிகள்
நவராத்திரியின் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில காய்கறிகள் உள்ளன. வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை நவராத்திரியின் ஒன்பது நாள் மங்களகரமான காலத்தில் சாப்பிடுவது தடைசெய்யப்பட்ட காய்கறிகளில் முக்கியமானவையாகும்.
தானியங்கள்
பிரபலமான நம்பிக்கைகளின்படி, சில தானியங்களை உட்கொள்ளக்கூடாது என்ற பொதுவான கருத்து பரவலாக உள்ளது. தினை, கோதுமை போன்ற தானியங்கள் செரிமான செயல்முறையை மெதுவாக்குகின்றன, அதனால் அவை நவராத்திரியின் போது உட்கொள்ளக்கூடாது.



Click it and Unblock the Notifications












