Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
எந்த நாடு உலகின் ஆபத்தான அணு ஆயுதத்தை உருவாக்கியது தெரியுமா? அது வெடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பூமியின் மிகவும் ஆபத்தான ஆயுதம் எதுவென்றால் அது தற்போது வரை அணுகுண்டுதான். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டுகளை வீசியபோது, அவை ஏற்படுத்திய பேரழிவு உலகையே பயமுறுத்தியது. உலக வரலாற்றில் ஒருமுறை மட்டுமே இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்று வரை தொடர்கிறது. இதில் கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் இப்போது பல நாடுகளிடம் இருக்கும் அணுகுண்டுகளை விட பலமடங்கு சக்தி குறைந்தது.
ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகளை பார்த்த பிறகு, உலகெங்கிலும் உள்ள நாடுகள் அணு ஆயுதங்களைச் சோதிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகளை உருவாக்க கோரிக்கை வைத்தன. இன்று, இந்தியா உட்பட ஒன்பது நாடுகள் அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மாறுபட்டவை, வெவ்வேறு ஆற்றல் கொண்டவை.

இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த அணுகுண்டுகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த அணுகுண்டுகள் உலகை ஒரு முறை இரண்டு முறை அல்ல நூற்றுக்கணக்கான முறைகள் அழிக்கக்கூடியவை. உலக நாடுகளிடம் இருக்கும் சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கேஸில் ரோமியோ
கேஸில் ரோமியோ என்ற உலகின் மிக சக்திவாய்ந்த அணுகுண்டுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1954 ஆம் ஆண்டு, அமெரிக்கா கேஸில் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான சோதனைகளைத் தொடங்கியது. இந்த சோதனை வலுவான அணு ஆயுதங்களை உருவாக்கி சோதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்த சோதனைகளில் ரோமியோ அணு குண்டும் அடங்கும், இது 11 மெகாடன் TNT-க்கு சமமான வெடிக்கும் சக்தியைக் கொண்டிருந்தது. இது ஜப்பானில் வீசப்பட்ட குண்டுகளை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தது.
ஐவி மைக்
இந்த ஆபத்தான ஆயுதங்களின் பட்டியலில் ஐவி மைக் நான்காவது இடத்தில் உள்ளது, இது அணு ஆயுதத்தின் வரலாற்றை மாற்றியமைத்த ஒரு குண்டு. இது உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டு, இது வெப்ப அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி, அணுக்கரு பிளவுகளை விட மிகவும் சக்திவாய்ந்த அழிவை ஏற்படுத்தும் செயல்முறையாகும்.
1952 இல் சோதிக்கப்பட்ட ஐவி மைக் 12 மெகாடன்களின் சக்தியைக் கொண்டிருந்தது. சோதனையின் போது இது பசிபிக் பெருங்கடலில் உள்ள எலுகெலாப் தீவை முற்றிலுமாக அழித்துவிட்டது. இந்த வெடிப்பு ஒரு பெரிய மஷ்ரூம் மேகத்தை உருவாக்கியது, அது வானத்தில் 37 கிலோமீட்டர் உயரமும் 160 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. இது 50 மீட்டர் ஆழமும் இரண்டு கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு பள்ளத்தையும் ஏற்படுத்தியது.
கேஸ்ட்ல் யாங்கி
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது கேஸ்ட்ல் யாங்கி, இது அமெரிக்காவால் அதன் Castle திட்டத்தின் கீழ் சோதிக்கப்பட்ட மற்றொரு சக்திவாய்ந்த அணு ஆயுதமாகும். இதை வடிவமைக்கும் போது, விஞ்ஞானிகள் ஒரு சிறிய அளவிலான குண்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர், ஆனாலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டுமென்று நினைத்தனர்.
இந்த ஆயுதம் சோதனை செய்யப்பட்டபோது, அது 13 மெகாடன் டிஎன்டியை விட அதிகமான வெடிக்கும் சக்தியை உருவாக்கியது. இந்த வெடிப்பு ஒரு மஷ்ரூம் மேகத்தை வானத்தில் 40 கிலோமீட்டருக்கும் அதிகமாக உயரச் செய்தது. இது மற்ற அணுகுண்டுகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் சிறிய வடிவமைப்பில் இருந்தாலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடியது.
கேஸ்ட்ல் பிராவோ
கேஸ்ட்ல் பிராவோ இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய குண்டு சுமார் 10 டன் எடையும் கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளமும் கொண்டது. இது விமானம் மூலம் வீசக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது, இது இராணுவ பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற அணு குண்டாக இருந்தது. மார்ச் 1954 இல், பசிபிக் பெருங்கடலில் உள்ள தொலைதூரப் பகுதியான பிகினி அட்டோலில் அமெரிக்கா கேஸ்ட்ல் பிராவோவை சோதித்தது.
இந்த வெடிப்பு எதிர்பார்த்ததை விட 15 மெகாடன் ஆற்றலை வெளியிட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட மஷ்ரூம் மேகம் வளிமண்டலத்தில் 40 கிலோமீட்டர் உயரத்திற்கு உயர்ந்து 100 கிலோமீட்டருக்கும் அதிகமான அகலத்தில் பரவியது. இந்த குண்டுவெடிப்பு கடல் தளத்தில் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய பள்ளத்தையும் உருவாக்கியது. இது வரலாற்றில் மிகவும் ஆபத்தான மற்றும் சர்ச்சைக்குரிய அணு குண்டு சோதனைகளில் ஒன்றாகும்.
Tsar Bomba
முதலிடத்தில் இருப்பது இதுவரை சோதனை செய்யப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதமான ஜார் பாம்பா (AN602 என்றும் அழைக்கப்படுகிறது). இந்த பயங்கரமான ஆயுதம் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டது மற்றும் 1961 இல் சோதிக்கப்பட்டது. ரஷ்ய ஆர்க்டிக்கில் உள்ள ஒரு தொலைதூர தீவின் மீது வீசப்பட்ட இந்த 8 மீட்டர் நீளமுள்ள குண்டு சுமார் 10 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்தது. வெடிப்பின் சக்தி 58 மெகாடன்களுக்கும் அதிகமாக அளவிடப்பட்டது, இது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டை விட 3,300 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
இந்த குண்டுவெடிப்பால் ஏற்பட்ட அதிர்வலைகள் 900 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஜன்னல்களை உடைத்தது, மேலும் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்தும் அதனால் ஏற்பட்ட மின்னலைப் பார்க்க முடிந்தது. போரில் இதைப் பயன்படுத்தியிருந்தால், நியூயார்க் அல்லது டெல்லி போன்ற பெரிய நகரங்களை சில நொடிகளில் அழித்திருக்க முடியும். Tsar Bomba வெறும் அணு குண்டு அல்ல, அது உலகின் முடிவை சில நிமிடங்களில் உருவாக்கக் கூடிய விஞ்ஞானம் உருவாக்கிய எமன்.



Click it and Unblock the Notifications












