Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான ஸ்கூல் இதுதான்...இங்க எவ்வளவு பீஸ் வாங்குறாங்கனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்...
ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி பணத்தை விட கல்விக்குதான் உள்ளது. கல்வி என்னும் பேராயுதமே ஒருவரை வாழ்க்கையில் வெற்றிகரமானவராகவும், பண்பட்டவராகவும் மாற்றக்கூடும். ஆனால் தற்போது உலகம் முழுவதும் கல்வி மிகப்பெரிய வியாபரமாக மாறிவிட்டது. இந்தியாவில் கூடுதலாக கல்வி அரசியலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.
அற்ப அரசியல் நன்மைகளுக்காக மாணவர்களின் கல்வியில் விளையாடும் போக்கு துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்தியாவில் மிகவும் அதிகரித்துள்ளது. கல்வி வியாபாரம் என்று வரும்போது இந்தியாவில் ஆரம்ப வகுப்புகளுக்கே லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் ஆடம்பர பள்ளிகள் நூற்றுக்கணக்கில் உள்ளது.

இந்தியாவின் விஐபிக்களின் குழந்தைகள் படிக்கும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிதான் இந்தியாவிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். அதைவிட அதிகம் கட்டணம் வசூலிக்கும் ஒரு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வாங்கப்படும் கட்டணத்திற்கு நீங்கள் ஒரு ஆடம்பர காரையே வாங்கி விடலாம். அது எந்த பள்ளி, அங்கு வாங்கப்படும் கட்டணம் எவ்வளவு என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் ஆடம்பர பள்ளி
இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த பள்ளி மலைகளின் உச்சியில் அமைந்துள்ளது, இந்த பள்ளி மாணவர்களுக்கு வசதிகளை மட்டுமல்லாமல் இயற்கையின் அழகிய அமைதியான காட்சிகளையும் வழங்குகிறது. இந்த பள்ளி முசோரியில் அமைந்துள்ளது, அதன் பெயர் வுட்ஸ்டாக் பள்ளி. இது பல்வேறு வசதிகள் மற்றும் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியைக் கொண்ட ஒரு சர்வதேச போர்டிங் பள்ளியாகும்.
இந்தியாவின் முதல் சர்வதேச போர்டிங் பள்ளி
வுட்ஸ்டாக் பள்ளி நூற்றாண்டு பழமையானது. இது 1854 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது கிழக்கிந்திய கம்பெனியின் உருவாக்த்துடன் ஒத்துப்போகிறது. இது 160 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டதாகும், இது இரண்டு உலகப் போர்கள், இந்திய சுதந்திரம், இந்தியப் பிரிவினை மற்றும் அதைத் தொடர்ந்து வந்த அரசியல் எழுச்சிகள் என அனைத்திற்கும் சாட்சியாக உள்ளது.
இந்த பள்ளி கடல் மட்டத்திலிருந்து 6500-7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மாணவர்கள் டூன் பள்ளத்தாக்கு, டெஹ்ரி மலைகள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ரசிக்கிறார்கள். இது இந்தியாவின் மிகவும் பழமையான பள்ளிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முதல் சர்வதேச போர்டிங் பள்ளியாகவும் கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 30க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.
எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
இந்த பள்ளியின் கட்டணம் கேட்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படி, 12 ஆம் வகுப்பின் ஆண்டு கட்டணம் ரூ. 17, 65, 000. 6 ஆம் வகுப்பிற்கு ரூ. 15, 90, 000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மட்டுமின்றி கூடுதலாக, இன்னொரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
நிறுவனக் கட்டணம் 4,00, 000 INR (திரும்பப் பெற முடியாதது)
செக்யூரிட்டி வைப்புத்தொகை 3,50, 000 INR (திரும்பப் பெறக்கூடியது)
வுட்ஸ்டாக் பள்ளியில் ஒரு இடத்திற்கு விண்ணப்பிப்பதிலும், அதைத் தொடர்ந்து பொருத்தமான பள்ளிப் பிரிவில் நுழைவதிலும் சேர்க்கப்பட்டுள்ள கட்டணங்களில் வருடாந்திர கட்டணம், நிறுவனக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை ஆகியவை அடங்கும். வருடாந்திர கட்டணங்களில் கல்விக் கட்டணம், பாடப்புத்தகங்கள், நோட்புக், உணவு மற்றும் தங்குமிடம், அடிப்படை சலவை, இணையம் மற்றும் மின்னஞ்சல் வசதிகள், களப் பயணங்கள் மற்றும் பெரும்பாலான சமூக நடவடிக்கைகள் ஆகியவையும் அடங்கும்.



Click it and Unblock the Notifications
