Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பண்டைய இந்தியாவில் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை இதுதான்... நல்லவேளை இந்த தண்டனை இப்ப இல்ல...!
பழங்காலம் முதலே தவறு செய்தவர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டுதான் வருகின்றன. சில தண்டனைகள் மக்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தினாலும் பல தண்டனைகள் மிகவும் கொடூரமானவையாக இருந்தன, இந்த தண்டனைகள் ஒருவரின் வாழும் ஆசையையே முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தது.
இந்த தண்டனைகளில் குறிப்பிட்ட தண்டனைகள் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு மட்டுமல்ல, பயமுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த தண்டனைகள் பெரும்பாலும் மரணத்தில் முடிவடைந்தது மற்றும் அவர்களை பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைப்பவையாக இருந்தது. இந்தத் தண்டனைகள் உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறுபட்டது. சாதாரண திருட்டு முதல் புரட்சி வரையிலான குற்றங்களுக்கு இந்த தண்டனைகள் வழங்கப்பட்டன.

தற்போது காணாமல் போய்விட்ட இந்த தண்டனை முறைகள் வரலாற்றில் மனிதர்கள் எப்படி மனித தன்மையற்றவர்களாக இருந்தார்கள் என்பதற்கான சான்றாக இருக்கின்றன. இந்த பதிவில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்திருக்கும் மிகவும் பயங்கரமான மற்றும் வித்தியாசமான சித்திரவதை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
யானையால் நசுக்கப்படுவது
பண்டைய இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், குற்றவாளிகள் யானையின் முன் கட்டப்பட்டனர், அவர்கள் மீது யானை நடப்பதன் மூலம் அவர்களை நசுக்க உத்தரவிடப்படும். யானையின் அபரிமிதமான அளவும் வலிமையும் வலிமிகுந்த மரணத்தை அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு உறுதி செய்தது.
இது ஆட்சியாளர்களின் அதிகாரத்தைக் காட்டவும், விதிகளைப் பின்பற்றும்படி மக்களைப் பயமுறுத்தவும் பொது வெளியில் வழங்ப்பட்டது. இது கிளர்ச்சி போன்ற கடுமையான குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இது மக்களை பயத்தில் வைத்திருக்க உதவியது.
எலி சித்திரவதை
எலி சித்திரவதையில், பசியுள்ள எலிகள் நிறைந்த கூண்டு பாதிக்கப்பட்டவரின் மேல் வைக்கப்பட்டது அல்லது அவர்கள் அதற்குள் கட்டிவைக்கப்பட்டார்கள். அகோர பசியுடன் இருக்கும் எலிகள், அந்த நபரின் உடலை உணவுக்காக மெல்ல சாப்பிட ஆரம்பித்து, கடுமையான வலியை உண்டாக்கும். இந்த சித்திரவதை பல மணிநேரங்கள் அல்லது நாட்கள் கூட நீடிக்கும்.
ஒருவரை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க அல்லது அவர்களின் உறுதியை உடைக்க இது பயன்படுத்தப்பட்டது. ஒருவரை உயிருடன் எலிகளை வைத்து சாப்பிட வைத்தது அந்த காலகட்டத்தில் ஒரு பயங்கரமான தண்டனையாக இருந்தது.

ஸ்கேபிசம்
பழங்கால பெர்சியாவில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு கொடூரமான தண்டனை முறைதான் ஸ்கேபிசம். பாதிக்கப்பட்டவர் இரண்டு படகுகளுக்கு இடையில் கட்டி வைக்கப்பட்டு, பாலையும் தேனையும் குடிக்க வைக்கப்படுவார், மேலும் பூச்சிகளைக் கவரும் வகையில் அவர் உடலில் தேன் பூசப்பட்டது. அதன்பின் அவர்கள் சூரிய ஒளி படும்படி ஒரு ஏரியில் விடப்படுவார்கள், இது மிகவும் வேதனையான கடி, தொற்று மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
பல நாட்கள் தொடர்ந்து நடைபெறும் சித்திரவதையால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிடுவார்கள். ஒருவரை கொல்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் கொடூரமான வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்ட்ராப்படோ
ஸ்ட்ராப்படோவில், தண்டனை வழங்கப்பட்டவரின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, அவர்கள் கயிற்றால் தொங்கவிடப்பட்டனர், இதனால் அவர்களின் தோள்கள் இடம்பெயர்ந்தன. சில சமயங்களில் வலியை அதிகரிக்க அவர்களின் கால்களில் எடைகள் கட்டப்பட்டன.
விசாரணையின் போது வாக்குமூலத்தை பெற இந்த முறை பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. தண்டனை வழங்கப்பட்டவர்கள் மணிக்கணக்கில் தொங்க விடலாம், இதனால் கடுமையான வலி மற்றும் அவர்களின் உடலில் நீண்ட கால சேதம் ஏற்படும், குறிப்பாக உடைந்த எலும்புகள் அல்லது கிழிந்த தசைநார்கள் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
மரணதண்டனை வேன்கள்
மரணதண்டனை வேன்கள் 20 ஆம் நூற்றாண்டில் மிருகத்தனமான அரசாங்கங்களால் மக்களை இரகசியமாகக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வேனில் வைக்கப்பட்டனர், அங்கு அவர்கள் சுடப்படுவார்கள் அல்லது எரிவாயு மூலம் கொல்லப்படுவார்கள்.
இந்த முறை பொதுமக்கள் அறியாமல் அதிகளவில் மரணதண்டனைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உதவியது. ஆட்சியாளர்கள் எதிரிகளாகக் கண்ட மக்களை இரகசியமாகக் கொல்ல இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
லிங் சி
லிங் சி, "மெதுவாக வெட்டுதல்" அல்லது "ஆயிரம் வெட்டுக்களால் மரணம்" என்றும் அறியப்படும் சித்திரவதையான மரணதண்டனை முறை சீனாவில் நடைமுறையில் இருந்தது. தண்டனை வழங்கப்பட்டவர்கள் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு, தோல் மற்றும் கைகால்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாக அகற்றப்படும், பொதுவாக இறுதி வெட்டு இதயத்தில் வெட்டப்படும் அல்லது தலை துண்டிக்கப்படும். இது 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பயன்படுத்தப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது. அதிர்ஷ்டவசமாக இது 1900-ல் தடை செய்யப்பட்டது.



Click it and Unblock the Notifications











