Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்தியாவின் மிகவும் சுத்தமான மற்றும் சிறந்த ரயில் நிலையம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும், இது நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான மக்களை இணைக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 7,325 ரயில் நிலையங்கள் உள்ளன மற்றும் தோராயமாக 24,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் இருப்பதால், அதன் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிப்பது என்பது அரசருக்கு மிகப்பெரிய சவாலாகும். பயணிகளுக்கு சிறந்த பயண வசதிகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதற்கு, இந்தியாவில் எந்த ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமானவை, பாதுகாப்பானவை மற்றும் பயணிகளுக்கு மிகவும் உகந்தவையாக இருக்கிறது என்பதைக் கண்டறிய அரசாங்கம் ஆண்டுதோறும் தூய்மை கணக்கெடுப்பை நடத்துகிறது.

இந்தியாவின் மிகவும் சுத்தமான ரயில் நிலையம்
இந்தியாவின் மிகவும் சுத்தமான ரயில் நிலையம் ராஜஸ்தானின் தலைநகரில் அமைந்துள்ள ஜெய்ப்பூர் ஜங்சன் ஆகும். இது அதன் நவீன வடிவமைப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத கட்டுமானம் மற்றும் சிறந்த பராமரிப்புக்காக அறியப்படுகிறது. இந்த நிலையம் சுத்தமாக இருக்க சூரிய சக்தி, நீர் மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக்-டு-டீசல் ஆலைகளைப் பயன்படுத்துகிறது. இலவச வைஃபை, பிரகாசமான எல்இடி விளக்குகள் மற்றும் சுகாதார வசதிகளுடன், ஜெய்ப்பூர் ஜங்சன் இந்திய ரயில்வேயில் தூய்மை மற்றும் பராமரிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
ஜெய்ப்பூர் ஜங்சனின் வரலாறு
ராஜஸ்தான் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜெய்ப்பூர் ஜங்சன், மாநிலத்தின் மிகவும் பழமையான மற்றும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது முதலில் 1875 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது, பின்னர் நவீன வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
இன்றைய நிலையத்திற்கான அடிக்கல் 1956 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அப்போதைய ஜெய்ப்பூரின் ஆட்சியாளரான மகாராஜா சவாய் மான் சிங் II அவர்களால் நாட்டப்பட்டது. கட்டுமானம் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆனது, அதன் பின்னர், ஜெய்ப்பூர் ஜங்சன் வடமேற்கு இந்தியாவில் ரயில் போக்குவரத்திற்கான முக்கிய மையமாக மாறியுள்ளது.
ஜெய்ப்பூர் ஜங்சனின் முக்கியத்துவம்
ஜெய்ப்பூர் ஜங்சன் ராஜஸ்தானின் மையத்தில் அமைந்துள்ளது மற்றும் வடமேற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் ஜெய்ப்பூர் ரயில்வே பிரிவின் தலைமையகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும், சுமார் 35,000 பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர், இது ராஜஸ்தானின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாக அமைகிறது. இது சிந்தி கேம்ப் பேருந்து நிலையம் மற்றும் ஜெய்ப்பூர் மெட்ரோவுடன் எளிதாக இணைக்கப்படுகிறது, இது உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை வழங்குகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நவீன உள்கட்டமைப்பு
இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்களில் ஜெய்ப்பூர் ஜங்சன் முதலிடத்தில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் சுற்றுச்சூழலுக்கு நவீன உள்கட்டமைப்பு ஆகும். இந்த ரயில் நிலையம் சூரிய சக்தியைப் பயன்படுத்தி விளக்குகள் மற்றும் அமைப்புகளுக்கு மின்சாரம் வழங்குகிறது, இதனால் மின்சார செலவுகள் மற்றும் மாசுபாடு குறைகிறது. இது ஒரு நாளைக்கு 500 கிலோலிட்டர்கள் வரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் நீர் மறுசுழற்சி ஆலையைக் கொண்டுள்ளது, இது தண்ணீரை பெருமளவில் சேமிக்க உதவுகிறது. இது மட்டுமின்றி கழிவிலிருந்து ஆற்றலை உருவாக்கும் ஒரு ஆலை பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றுகிறது, இது நிலையத்தை மேலும் நவீனமானதாக மாற்றுகிறது.
எப்படி சுத்தமான ரயில் நிலையமாக உள்ளது?
ஜெய்ப்பூர் ஜங்சனின் தூய்மை இந்திய ரயில்வே, உள்ளூர் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகும். நிலையத்தின் கழிவு மேலாண்மை அமைப்பு, வழக்கமான சுத்தம் செய்யும் அட்டவணைகள் மற்றும் பயணிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நாள் முழுவதும் சுகாதாரத்தை பராமரிக்க உதவுகின்றன.



Click it and Unblock the Notifications












