Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
ஒரு வருடத்திற்கு பின் கன்னி செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
Mercury Will Make Badra Rajyoga: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இதன் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இத்தகைய புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு ஒரு வருடத்திற்கு பின் செல்கிறார். இதனால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

பத்ரா ராஜயோகமானது ஒருவருக்கு அனைத்துவிதமான சுகங்களையும் தரக்கூடியது. இந்த யோகம் உருவாவதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தால் பல காரியங்கள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
இப்படிப்பட்ட பத்ரா ராஜயோகம் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் உருவாகவுள்ளது. இப்போது இந்த ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நிறைய பணத்தை செலவிடக்கூடும். வியாபாரம் சிறப்பாகவும், லாபகரமாகவும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் ஆர்டர்கள் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் கையில் பணம் அதிகம் சேரும். புதிய வேலைகளை இக்காலத்தில் தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications