'வாழும் நோஸ்ட்ராடாமஸ்' அதோஸ் சலோம் கணித்துள்ள 2025-ல் நடக்கப்போகும் பேரழிவு என்ன தெரியுமா?

"வாழும் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் பிரேசிலிய சித்த மருத்துவரான அதோஸ் சலோம், தனது சர்ச்சைக்குரிய கணிப்புகளால் சர்வதேச அளவில் அடிக்கடி பரபரப்பை கிளப்பியுள்ளார். கோவிட்-19 தொற்றுநோய், எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததன் மூலம் அவர் சர்வதேச கவனத்தை ஈர்த்தார். தற்போது அவர் உலகளாவிய அமைப்புகளின் சரிவால் உலகப் போர் மூளும் என்று எச்சரித்துள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகள் மோதல்கள் நிறைந்திருக்கும் மற்றும் உலகம் ஒரு இறுக்கமான சூழலில் இருக்கும் என்று இந்த அதிர்ச்சியளிக்கும் கணிப்பு விளக்குகிறது. அதோஸ் இந்த கூற்றுக்களை பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார், அதில் அவர் உலகளாவிய பதட்டங்களையும், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவில், ஒரு புதிய வகை போரை நோக்கிய சூழ்நிலைகள் ஏற்படலாம் என்று கூறியுள்ளர்.

Living Nostradamus Athos Salome Warns About World War 3

டினிப்ரோவை குறிவைத்து சமீபத்தில் ஓரெஷ்னிக் சூப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியது மட்டுமின்றி உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்களுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவின் அறிக்கையின் படி "தேவைப்பட்டால் எந்த வகையிலும்" தன்னை தற்காத்துக் கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினார். சலோமின் கூற்றுப்படி, இத்தகைய மோதல்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் மேலும் அதிகரிக்கும் அபாயத்தை குறிப்பிட்ட அளவு அதிகரிக்கிறது.

மேலும் "இது மனிதர்களின் போர் மட்டுமல்ல, இயந்திரங்களின் போர்" என்று அதிர்ச்சியளிக்கும் செய்தியை அவர் கூறியுள்ளார். நவீன மோதல்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார். போரின் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் பரிமாணங்கள், மோதல் காலங்களில் நாடுகள் எவ்வாறு ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன என்பதை தீர்மானிக்கிறது. அவரது கணிப்பின் மையமாக இருப்பது "உலகளாவிய அமைப்பு சரிவு" என்ற கருத்தாகும்.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மனிதகுலம் ஒரு "தொழில்நுட்பப் போரின்" தொடக்கத்தைக் காண முடியும் என்று சலோமி கணித்துள்ளார், இது நவீன போர்களின் போக்கில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது. அவரது கணிப்புகள் 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸுக்கு இணையானவையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் நோஸ்ட்ராடாமஸின் புதிரான தீர்க்கதரிசனங்கள் பல தலைமுறையினரைக் கவர்ந்துள்ளன.

பெரும்பாலும் "டூம் தீர்க்கதரிசி" என்று அழைக்கப்படும் நோஸ்ட்ராடாமஸ் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவித்த பெருமைக்குரியவர், மேலும் அவரது எழுத்துக்கள் எதிர்கால பேரழிவுகள் பற்றிய தகவல்களை தேடுபவர்களுக்கு ஆர்வத்துக்குரிய ஒன்றாகவே இருக்கின்றன.

சலோமியின் தற்போதைய கணிப்புகள் மட்டும் மக்களை கவலையடையச் செய்யவில்லை, நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் கூட 2025 ஒரு தொந்தரவான ஆண்டாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் காத்திருக்கும் சில பேரழிவுகளில் ஒரு சிறுகோள் தாக்குதல் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு கொடிய, பிளேக் போன்ற நோயின் தோற்றம் போன்றவையும் அடங்கும்.

Story first published: Tuesday, December 17, 2024, 19:49 [IST]
Desktop Bottom Promotion