For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பரிசாக 1.2 கோடி மதிப்புள்ள கார், பைக்குகளை கொடுத்துள்ள சென்னை நகைக்கடை முதலாளி யார் தெரியுமா?

இந்தியாவின் கொண்டாட்டமிக்க பண்டிகையான தீபாவளி அருகில் வந்துவிட்டது. பணியில் இருக்கும் அனைவருமே தங்களின் அலுவலகத்திலிருந்து தீபாவளி போனஸுக்காக காத்திருக்கிறார்கள்.

|

இந்தியாவின் கொண்டாட்டமிக்க பண்டிகையான தீபாவளி அருகில் வந்துவிட்டது. பணியில் இருக்கும் அனைவருமே தங்களின் அலுவலகத்திலிருந்து தீபாவளி போனஸுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் தீபாவளி போனஸ் என்பது பெரும்பாலானவர்களுக்கு கனவாகவே இருக்கிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால் சல்லானி, கோவிட்-19 நெருக்கடி போன்ற கடினமான நேரங்களிலும் நிறுவனத்திற்கு அளித்த ஆதரவைக் கௌரவிக்கும் வகையில் தீபாவளிப் பரிசாக தனது ஊழியர்களுக்கு கார்கள் மற்றும் பைக்குகளை பரிசளித்துள்ளார்.

Chennai Jewellery-Owner Gifts Cars and Bikes to Employees Worth Rs 1.2 cr

சல்லானி ஜூவல்லரியின் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் உதவி பொது மேலாளர் எஸ் பாலாஜி கூறுகையில், நகைக்கடை உரிமையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு கார் அல்லது பைக்குகளை பரிசாக வழங்குவது நாட்டிலேயே இதுவே முதல் முறை. எட்டு ஊழியர்களுக்கு கார்களும், 18 பேருக்கு பைக்குகளும் கிடைத்தன என்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chennai Jewellery-Owner Gifts Cars and Bikes to Employees Worth Rs 1.2 cr

Chennai jewellery shop owner gifts cars, bikes to employees as Diwali gifts worth Rs 1.2 Cr.
Story first published: Tuesday, October 18, 2022, 16:30 [IST]
Desktop Bottom Promotion