For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டையக் காலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தண்டனைகள் - புகைப்படங்கள்!

பண்டையக் காலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தண்டனைகள் - புகைப்படங்கள்!

|

இன்றைய மனித சமூகத்தை நீங்கள் ஆணாதிக்க உலகம் என்று கூறினால்... சில நூற்றாண்டுகளுக்கு முன் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சில தண்டனைகள் குறித்து அறிந்தால்., நீங்கள் ஆண்களை அரக்கர்கள் அல்லது ஏலியன்கள் என்று தான் கூறுவீர்.

தவறுகள் என்பது அன்றும், ஆண் - பெண் இரு பாலரும் செய்து வந்தனர். ஆனால், சில குற்றங்களுக்கு பெண்களுக்கு மட்டும் தண்டனை என்றும், சில குற்றங்களுக்கு பெண்களுக்கு மட்டுமே கொடுமையான தண்டனைகள் என்றும் அக்காலத்தில் இருந்தன.

குறிப்பாக 10 - 16ம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டங்களில் இத்தகைய தண்டனைகள் உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக கூற வேண்டும் என்றால் மேற்கத்திய நாடுகளில் இவை மிகையாக இருந்தன.

Horrible Ways that women has been tortured in History, in Photos.

புரளி பேசுதல், பாலியல் தொழில் செய்வது, சூனியம், திருட்டு, தவறான உறவு வைத்துக் கொள்தல் என சிறிய அளவிலான குற்றங்களில் இருந்து பெரிய அளவிலான குற்றங்கள் வரை பெண்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 99% தண்டனைகள், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், அவர்களை நிர்வாணப்படுத்தி கொடுக்கப்பட்ட தண்டனைகளுமாகவே இருந்துள்ளன.

பெண்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட இந்த மனிதத்தன்மையற்ற தண்டனைகளை காணும் போது, பண்டையக் காலங்களில் பெண் என்பவள் தனக்கு அடிமை என்ற நிலையில் தான் ஆடவர் வைத்து பார்த்துள்ளனர் என்பது துளியளவும் சந்தேகமின்றி தெளிவாக தெரிகிறது.

இன்றைய சமூகம் பெண்களுக்கு எதிரானது என்று கருதினால், அன்றைய சமூகம் பெண்களுக்கு நரகமாக திகழ்ந்துள்ளது என்பதே நிதர்சனம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Horrible Ways that women has been tortured in History, in Photos.

Horrible Ways that women has been tortured in History, in Photos.
Desktop Bottom Promotion