Latest Updates
-
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
6 வாரத்திற்கு ஒருமுறை தோல் உரிக்கும் பாம்பு பெண்: வினோத சரும கோளாறு!
இங்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை தோல் உரிக்கும் உலகின் அதிசய பாம்பு பெண் பற்றி கூறப்பட்டுள்ளது.
பெண்கள் என்றாலே அழகு. முகத்தில் சிறிய அளவு பரு வந்தாலே பெண்கள் பெரியவளவில் கவலைப்படுவார்கள். ஆனால், இதுவே ஒரு பதின் வயது பெண்ணுக்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை உடலில் இருக்கும் ஒட்டு மொத்த தோலும் உரிந்து வருகிறது என்றால்?

நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கும் இந்த சூழலில் தான் தினமும் வாழ்ந்து வருகிறார் இந்தியாவை சேர்ந்த ஷாலினி எனும் பெண்....

வினோத உடல் நிலை!
ஷாலினி யாதவ் 16 வயது நிரம்பிய இளம் பெண். இவர் ஒரு வினோத சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு ஆறு வாரத்திற்கும் ஒருமுறை இவரது தோல் பாம்பு தோல் போல உரிந்து வந்துவிடுகிறது.

எர்தோடெர்மா (Erthroderma)
இந்த சரும கோளாறுக்கு பெயர் எர்தோடெர்மா என கூறப்படுகிறது. இவர் வலி இல்லாமல் இருக்க க்ரீம் பயன்படுத்துகிறார். இவரது வீட்டின் பொருளாதார சூழலால் அந்த க்ரீமை எப்போதும் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

குழந்தை பருவத்தில் இருந்து!
ஷாலினிக்கு இந்த சரும கோளாறு குழந்தை பருவத்தில் இருந்து இருக்கிறது. 45 நாட்களுக்கு ஒருமுறை தோல் உரிந்து வந்துவிடும்.

சிகிச்சை இல்லை!
ஷாலினியின் பெற்றோர் இவரை பல மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டனர். ஆனால், இதற்கான சரியான சிகிச்சை முறை இல்லை என கூறப்படுகிறது.

கொஞ்சம், கொஞ்சமாக....
இந்த சரும கோளாறு இவரை கொல்லவில்லை எனிலும், இவரது வாழ்க்கை கொஞ்சமாக, கொஞ்சமாக முடிந்து வருகிறது. இதனால் ஏற்படும் வலி, சரும வெடிப்பு, இரத்தம் கசிதல் போன்றவை மிகவும் வலி மிகுந்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு உதவ முடியாத சூழலில் இருக்கிறார் ஷாலினியின் தாய்.

ஷாலினி....
மற்ற குழந்தைகள் அச்சம் கொள்வதால் இவரை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள். இவருடன் நட்புடன் பழகவும் யாரும் முன்வருவது இல்லை. இந்த சரும கோளாறுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம், இதனால் என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்ற கேள்வியை தான் ஷாலினி மக்கள் முன் வைக்கிறார்.



Click it and Unblock the Notifications