Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
6 வாரத்திற்கு ஒருமுறை தோல் உரிக்கும் பாம்பு பெண்: வினோத சரும கோளாறு!
இங்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை தோல் உரிக்கும் உலகின் அதிசய பாம்பு பெண் பற்றி கூறப்பட்டுள்ளது.
பெண்கள் என்றாலே அழகு. முகத்தில் சிறிய அளவு பரு வந்தாலே பெண்கள் பெரியவளவில் கவலைப்படுவார்கள். ஆனால், இதுவே ஒரு பதின் வயது பெண்ணுக்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை உடலில் இருக்கும் ஒட்டு மொத்த தோலும் உரிந்து வருகிறது என்றால்?

நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கும் இந்த சூழலில் தான் தினமும் வாழ்ந்து வருகிறார் இந்தியாவை சேர்ந்த ஷாலினி எனும் பெண்....

வினோத உடல் நிலை!
ஷாலினி யாதவ் 16 வயது நிரம்பிய இளம் பெண். இவர் ஒரு வினோத சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு ஆறு வாரத்திற்கும் ஒருமுறை இவரது தோல் பாம்பு தோல் போல உரிந்து வந்துவிடுகிறது.

எர்தோடெர்மா (Erthroderma)
இந்த சரும கோளாறுக்கு பெயர் எர்தோடெர்மா என கூறப்படுகிறது. இவர் வலி இல்லாமல் இருக்க க்ரீம் பயன்படுத்துகிறார். இவரது வீட்டின் பொருளாதார சூழலால் அந்த க்ரீமை எப்போதும் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

குழந்தை பருவத்தில் இருந்து!
ஷாலினிக்கு இந்த சரும கோளாறு குழந்தை பருவத்தில் இருந்து இருக்கிறது. 45 நாட்களுக்கு ஒருமுறை தோல் உரிந்து வந்துவிடும்.

சிகிச்சை இல்லை!
ஷாலினியின் பெற்றோர் இவரை பல மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டனர். ஆனால், இதற்கான சரியான சிகிச்சை முறை இல்லை என கூறப்படுகிறது.

கொஞ்சம், கொஞ்சமாக....
இந்த சரும கோளாறு இவரை கொல்லவில்லை எனிலும், இவரது வாழ்க்கை கொஞ்சமாக, கொஞ்சமாக முடிந்து வருகிறது. இதனால் ஏற்படும் வலி, சரும வெடிப்பு, இரத்தம் கசிதல் போன்றவை மிகவும் வலி மிகுந்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு உதவ முடியாத சூழலில் இருக்கிறார் ஷாலினியின் தாய்.

ஷாலினி....
மற்ற குழந்தைகள் அச்சம் கொள்வதால் இவரை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள். இவருடன் நட்புடன் பழகவும் யாரும் முன்வருவது இல்லை. இந்த சரும கோளாறுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம், இதனால் என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்ற கேள்வியை தான் ஷாலினி மக்கள் முன் வைக்கிறார்.



Click it and Unblock the Notifications