Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!
செக்ஸ்க்கு மறுத்து கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி!
இங்கு பெண் ஒருவர் தாம்பத்தியத்திற்கு மறுத்து ஆணின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் பற்றி கூறப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்து வந்த கணவன் மீது சந்தகம் எழுந்ததால் ஆத்திரமடைந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம்!
இந்த அசம்பாவிதம் உத்திரபிரதேசம் மாநிலத்தின் ஒரு சிறிய டவுன் பகுதியில் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பிய போது நடந்துள்ளது.

அதிர்ச்சி!
இவரது மனைவி கணவன் வரும் வரை வீட்டில் காத்திருந்துள்ளார். வீடு வந்தவுடன் கடாய் வைத்து மண்டையில் அடித்துள்ளார். அதன் பிறகு அவர் சுயநினைவு இழந்துவிட்டார். கணவன் கீழே விழுந்த பிறகும் மனைவி அடித்துள்ளார்.

இரத்தம்!
அந்நபர் விழித்தெழுந்து பார்த்த போது ஒரே இரத்தமாக இருந்துள்ளது. பிறகு உடனே நண்பரை உதவிக்கு அழைத்துள்ளார் அந்த நபர்.

மருத்துவமனை!
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே அந்நபரின் நிலை அபாயகரமாக தான் இருந்தது. அரை மணிநேரத்திற்கும் மேலாக அவருக்கு இரத்தப்போக்கு நிற்காமல் போய் கொண்டிருந்தது. காயம் மிகவும் கடுமையாக ஏற்பட்டிருந்தது.
ஆனால், எப்படியோ மருத்துவர்கள் அந்நபரின் ஆணுறுப்பை மீண்டும் இணைத்து விட்டனர்.

ஏன் இப்படி?
மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானதால் மனைவி இச்செயலில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நாளாக அந்நபர் உடலுறவுக்கு மறுத்து வந்ததாக தெரியவருகிறது.
ஆகையால் அவருக்கு ஏதேனும் தகாத உறவு இருக்குமோ என்ற சந்தேகமும் மனைவிக்கு எழுந்துள்ளது. இதன் காரணத்தால் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளார் அந்த மனைவி.

புகார்!
ஐந்து மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு தான் ஆணுறுப்பு இணைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபரின் தம்பி, அவருக்கு பிறப்புறுப்பு தவிர வேறு எந்த இடத்திலும் அடியோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுக்குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications