Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கிருஷ்ணனின் அருளைப் பெற வேண்டுமா? அப்ப உங்க ராசிக்கேற்ற மந்திரத்தை சொல்லுங்க...
Krishna Janmashtami 2023: பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் அழைப்பார்கள்.
விஷ்ணு பகவான் கம்சனை அழிக்க கிருஷ்ணனாக ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியானது செப்டம்பர் 06 மற்றும் 07 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணனின் அருளைப் பெற பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்யப்படுகின்றன. இருப்பினும் கிருஷ்ணரின் பரிபூர்ண அருளைப் பெற விரும்பினால், ராசிக்கேற்ற மந்திரங்களை சொல்வது நல்லது.
இதனால் கிருஷ்ண பகவான் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வாதத்தை வழங்குவார். இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த கிருஷ்ண மந்திரங்களை சொல்ல வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் விஸ்வரூப நமஹ என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் கிருஷ்ணரின் அருளைப் பெறலாம். மேலும் இந்த மந்திரமானது அனைத்துவிதமான பிரச்சனைகளையும் போக்கி, மன கவலைகளை நீக்கி அமைதி தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் உபேந்திரா நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு கிருஷ்ணரின் அருளைப் பெற உதவுவதோடு, நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஓம் அனந்தாய நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இது மன கவலைகள் மற்றும் கஷ்டங்களைப் போக்கி, கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெற உதவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஓம் தயாநிதியை நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை சொல்ல வேண்டும். இது கிருஷ்ணனின் அருளைப் பெற உதவுவதோடு, அனைத்திலும் வெற்றி காண உதவி புரியும்.
சிம்மம்
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணனை மகிழ்விக்கவும், அவரது பரிபூர்ண அருளைப் பெறவும் ஓம் ஜோதிராதித்ய நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரமானது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், கிருஷ்ணனின் அருளைப் பெறவும் ஓம் அனிருத்தாய நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை சொல்ல வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கிருஷ்ண பகவானின் அருளைப் பெறவும், செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழவும் ஓம் ஹிரண்யகர்பாய நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை கூற வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கிருஷ்ணனின் ஆசீர்வாதத்தைப் பெற ஓம் ஓம் அச்யுதாய நமஹ என்ற கிருஷ்ணனின் மந்திரத்தை கிருஷ்ண ஜெணந்தி நாளில் சொல்ல வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை மாயமாய் மறையும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவும், கிருஷ்ணனின் ஆசீர்வாதங்களைப் பெறவும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஓம் ஜகத்குர்வே நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணனின் அருளைப் பெற ஓம் அஜயாய நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இந்த மந்திரத்தை கிருஷ்ண ஜெயந்தி நாளில் மனதில் நாள் முழுவதும் கூறுவதன் மூலம், கிருஷ்ணனின் கருணையைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஓம் அனாதியை நமஹ என்ற கிருஷ்ணருக்குரிய மந்திரத்தை கூறுவதன் மூலம், கிருஷ்ணனின் ஆசியையும், வெற்றியையும், வளமான வாழ்க்கையையும் வாழலாம்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஓம் ஜகன்னாதாய நமஹ என்ற கிருஷ்ணரின் மந்திரத்தை எப்போதும் சொல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











