Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
வடகொரியா சர்வாதிகாரி கிம் ஜாங் உன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா தலையே சுத்தும் போல...!
உலக வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் இதுவரை வாழ்ந்துள்ளனர். கொடுங்கோல் சர்வாதிகாரிகள் கடந்த காலங்களில் மட்டும்தான் வாழ்ந்தார்கள் என்றால் நிச்சயம் இல்லை. தற்போதைய உலகின் சர்ச்சைக்குரிய தலைவர்களைப் பற்றி விவாதிக்கும் போது, வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் பெரும்பாலும் அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவரது கடுமையான கொள்கைகள் மற்றும் இரகசிய வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற கிம், வட கொரியாவின் மீது தனது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார் மற்றும் உலகின் மற்ற தலைவர்களை விட தனிப்பட்ட அளவில் பெரும் செல்வத்தை குவித்துள்ளார். பல்வேறு ஆதாரங்களின்படி, அவரது மொத்தச் சொத்து சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 41,500 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

செல்வத்தின் ஆதாரம்
கிம்-ன் இந்த மிகப்பெரிய செல்வம் முதன்மையாக வட கொரியாவின் பொருளாதாரம் மற்றும் அதன் இயற்கை வளங்கள் மீதான அவரது முழுமையான கட்டுப்பாட்டிலிருந்து உருவாகிறது. அவர் தனது நாட்டின் பொருளாதார நிர்வாகத்தில் மட்டுமல்ல, உலக முழுவதும் பல்வேறு ஆதாரங்களிலிருந்து செல்வத்தைப் பெறுகிறார். அவரது செல்வத்தின் கணிசமான பகுதி சீனா, சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அமைந்துள்ள 200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகள் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், சர்வதேச விசாரணையில் இருந்து அவரது சொத்துக்களை மறைக்கவும் உதவுகின்றன.
ஆண்டு வருமானம்
பொதுவாக நாட்டின் தலைவர்கள் தங்கள் குடிமக்களின் நலனில் அக்கறை செலுத்துவார்கள், ஆனால் கிம் ஜாங் உன் அவரது தனிப்பட்ட ஆடம்பரங்களுக்கு வாழ்க்கைக்கு மிகவும் பிரபலமானவர். அவரது ஆண்டு வருமானம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 830 கோடி) ஆகும், அதை அவர் வட கொரியாவின் நிதி அமைப்பு மற்றும் நாட்டின் தலைவராக தனது அதிகாரத்தின் மூலம் திரட்டுகிறார்.
ஆடம்பர வாழ்க்கை
கிம்மின் ஆடம்பரமான வாழ்க்கை அவரது செல்வம் மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாடாக உள்ளது, பல வட கொரியர்கள் எதிர்கொள்ளும் வறுமைக்கு முற்றிலும் எதிர்மறையாக நிற்கிறது. விலையுயர்ந்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு பெயர் பெற்ற கிம், உயர்தர கார்கள், தனியார் படகுகள் மற்றும் ஜெட் விமானங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்காக அடிக்கடி செலவு செய்கிறார். அவருக்கென்று ஆடம்பர கார்களின் கலெக்ஷ்ன் உள்ளது, அவர் வெளிநாட்டு பயணங்களின் போது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார்.
ரகசிய வாழ்க்கை
கிம் ஜாங் உன்னின் வாழ்க்கை நீண்ட காலமாக மர்மமாகவே உள்ளது, இதனால் அவரது வயது என்னவென்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. அவர் ஜனவரி 8, 1984 இல் பிறந்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது, இதனால் அவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. அவர் சுவிட்சர்லாந்தில் கல்விப் பெற்றதாக கூறப்படுகிறது, ஆனால் அவர் தனது வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான விவரங்களை மறைத்து வைத்திருக்கிறார்.
திருமண வாழ்க்கை
அவரது மனைவி, ரி சோல்-ஜூ, 2009 இல் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் தோன்றத் தொடங்கினார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் மகள்களில் ஒருவரான கிம் ஜு ஏ மட்டும் தனது தந்தையுடன் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் காணப்படுகிறார். அவரின் சகோதரி, கிம் யோ-ஜோங், வட கொரிய நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார், மேலும் வட கொரியாவின் எதிர்கால அதிபராக எதிர்பார்க்கப்படுகிறார்.
அடக்குமுறை
கிம் ஜாங் உன் அவரது இராணுவ வலிமை, கடுமையான ஆட்சிமுறை மற்றும் சர்வாதிகாரக் கொள்கைகளுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவர். ஆக்கிரமிப்பு இராணுவ திட்டங்கள், குறிப்பாக அவரது அணு ஆயுத திட்டங்கள் உலகளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவரது கணிக்க முடியாத நடத்தை மற்றும் சர்வாதிகார ஆட்சி அவருக்கு "பைத்தியக்கார சர்வாதிகாரி" என்று முத்திரை குத்துவதற்கு பல வழிவகுத்தது, ஏனெனில் அவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப நாட்டை ஆளுகிறார் மற்றும் எந்த வகையான கருத்து வேறுபாடுகளையும் எதிர்ப்பையும் உடனுக்குடன் கடுமையாக அடக்குகிறார்.



Click it and Unblock the Notifications












