Latest Updates
-
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள கேதார ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Kedar Rajyog After 500 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்வதுண்டு. அவ்வாறு உருவாகும் யோகங்கள் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் கேதார ராஜயோகம் உருவாகியுள்ளது.

எப்போது 7 கிரகங்கள் 4 ராசிகளில் உள்ளதோ, அப்போது கேதார ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு திடீர் லாபமும், அதிர்ஷ்டத்தால் நல்ல வெற்றியும் கிடைக்கும். இப்போது கேதார ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேதார ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். ஏனெனில் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன் உள்ளனர். அதோடு சூரியனும், சனி பகவானும் சிறப்பான ஸ்தானத்தில் அமைந்துள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சில புதிய வருமானத்தை உருவாக்கலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேதார ராஜயோகமானது பல நன்மைகளை அளிக்கும். குறிப்பாக வணிகர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களின் காதல் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம். நீண்ட நாள் ஆசைகள் இந்த யோக காலத்தில் நிறைவேறும். புதிய வேலைகளைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேதார ராஜயோகம் சிறப்பான பலன்களை வழங்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைத் துறைகளில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. சிலர் எதிர்பாராத அளவில் பண வரவைப் பெறலாம். வீட்டில் சுப காரியம் நடக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலையில்லாமல் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











