Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
ஜப்பான் பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு 25 நாட்களுக்கு பின் பலித்துள்ளது... 44 நாடுகள் ஆபத்தில் இருக்காம்...!
சமீபத்தில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் 44 நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் அனுப்பும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய பாபா வாங்கா என்று அழைக்கப்படும் மங்கா கலைஞரும் தீர்க்கதரிசியுமான ரியோ டாட்சுகி, பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட கணிப்பில் இந்த பேரழிவை துல்லியமாக கணித்திருக்கலாம் என்று பலரும் நம்புகின்றனர்.

ஜப்பான் பாபா வாங்காவின் கணிப்பு
ஜப்பானின் ஹொக்கைடோ தீவு வரை சுனாமி பேரலைகளை ஏற்படுத்திய கம்சட்கா பூகம்பம், 1999 ஆம் ஆண்டு ரியோ டாட்சுகியால் வெளியிடப்பட்ட வாட்டாஷி கா மிதா மிராய் (நான் பார்த்த எதிர்காலம்) என்ற கணிப்பில் குறிப்பிட்டுள்ள சில வாரங்களுக்குப் பிறகு நிகழ்ந்ததுள்ளது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால்தான் அவர் புதிய பாபா வாங்கா என்று அழைக்கப்படுகிறார். அவரது கணிப்பில் அவர் ஜூலை 2025 இல் இதேபோன்ற பேரழிவு நிகழும் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த கால கணிப்புகள்
ரஷ்ய நிலநடுக்கம் ரியோ டாட்சுகியின் தீர்க்கதரிசனங்கள் மீது மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ஏனெனில் அவரை பின்தொடர்பவர்களில் பலர், இளவரசி டயானா மற்றும் ஃப்ரெடி மெர்குரியின் இறப்புகள், கோவிட்-19 வெடிப்பு, மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் ஜப்பானில் சுனாமி உள்ளிட்ட முக்கிய உலக நிகழ்வுகளை டாட்சுகி துல்லியமாக கணித்துள்ளார் என்று நம்புகிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாட்சுகியின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள், ஜூலை மாதம் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் அவர் கணித்ததாகக் கூறினர், ஆனால் அன்று அவர் குறிப்பிட்டது போல எதுவும் நடக்கவில்லை, இதனால் அவரது கணிப்புகள் ஏமாற்று வேலைகள் என்றும், இதுபோன்ற தீர்க்க தரிசனங்களை நம்ப வேண்டாமென்றும் ஒரு சாரார் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
ரியோ டாட்சுகி பற்றி சமூக வலைத்தளங்களில் என்ன பேசுகிறார்கள்?
ரியோ டாட்சுகியின் ஜூலை மாத தீர்க்கதரிசனங்கள் ஏமாற்று வேலை என்று கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா, ஜப்பான் முதல் ஆஸ்திரேலியா வரை உலகெங்கிலும் உள்ள 44 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, இதன் மூலம் ரியோ டாட்சுகி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமீபத்திய நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கைகளுடன் தட்சுகியின் தீர்க்கதரிசனத்தை பலர் இணைப்பதாக சமூக ஊடகங்கள் பரபரப்பாக உள்ளன. ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, ஜப்பானின் முழு கடற்கரைக்கும் 3 அடி சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, 2011 நிலநடுக்கத்தை முன்னறிவித்த ரியோ டாட்சுகி, அவரது தீர்க்கதரிசனம் மூலம், மீண்டும் அதைச் செய்துள்ளார்! ஜப்பான், பாதுகாப்பாக இருங்கள்," என்று சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்படுகிறது.
கம்சட்கா நிலநடுக்கம்
புதன்கிழமை ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. USGS அறிக்கையின் படி, 19.3 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்கின் கிழக்கு-தென்கிழக்கில் 25 கிமீ தொலைவில் அவாச்சா விரிகுடாவின் கடற்கரையில் மையமாக இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவைக் காட்டின, நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின, அதே நேரத்தில் பல இடங்களில் உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.



Click it and Unblock the Notifications












