Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
இந்தியாவில் ரயில் டிக்கெட்கள் ஏன் கவுண்ட்டரை விட ஆன்லைனில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது தெரியுமா?
IRCTC: இந்திய போக்குவரத்து மற்றும் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருப்பது ரயில்வே துறைதான். 1853 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே தற்போது 22, 593 ரயில்களுடன் உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாக இருக்கிறது. தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
தினமும் 23 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கும் இந்திய ரயில்வே, இந்தியாவின் இயக்கத்திற்கு உயிர்நாடியாக உள்ளது. பண்டிகைகள் மற்றும் திருமண காலங்களில், ரயில் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிறது. கடந்த களங்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையைப் பெற பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக மாறத் தொடங்கியதும், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய விருப்பமான தேர்வாக மாறியுள்ளது.

தற்போது டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் வாங்குபவர்களை விட ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், அனைத்து பயணிகளுக்கும் இருக்கும் கவலை என்னவென்றால், ஆன்லைன் டிக்கெட்டுகள் விலை கவுண்டர் டிக்கெட்டுகளை விட பல மடங்கு அதிகமாக இருப்பதுதான். நீங்கள் எப்போதாவது ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், அது கவுண்டர் டிக்கெட்டை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை அதிகமாக உள்ளதை பார்த்திருப்போம்.
ஏனென்றால், ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். டிக்கெட் முன்பதிவு செய்ய நீங்கள் மற்ற ஆப்களைப் பயன்படுத்தினாலும், உங்களுக்கு IRCTC-ல் அக்கவுண்ட் இருக்க வேண்டும். அது இல்லாமல், ஆன்லைனில் முன்பதிவு செய்வது சாத்தியமில்லை.
ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, IRCTC பயணிகளிடம் சரக்கு மற்றும் சேவை வரி (GST) உடன் ஒரு Convenience கட்டணத்தையும் வசூலிக்கிறது. Convenience கட்டணம் நேரடியாக IRCTC-க்குச் செல்கிறது, அதே நேரத்தில் GST அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணங்கள் ஆன்லைன் டிக்கெட்டுகளை கவுண்டர் டிக்கெட்டுகளை விட விலை அதிகமாக ஆக்குகின்றன.
ஆன்லைன் டிக்கெட்டுகள் கவுன்டர் டிக்கெட்டுகளை விட ஏன் விலை அதிகம்?
சமீபத்தில் மக்களவை உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகள் கவுன்டர் டிக்கெட்டுகளை விட ஏன் அதிக விலை கொண்டவையாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் டிக்கெட் முறையைப் பராமரித்தல், மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு ஐஆர்சிடிசி கணிசமான செலவுகளைச் செய்கிறது என்று விளக்கினார். இந்தச் செலவுகளை மீட்டெடுக்க, ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளுக்கு Convenience கட்டணத்தை வசூலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
80% பயணிகள் ஆன்லைன் முன்பதிவை விரும்புகிறார்கள்
டிஜிட்டல் முன்பதிவுக்கான மிகப்பெரிய மாற்றத்தை ரயில்வே அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார். "இன்று, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் டிக்கெட்டுகளிலும் 80% ஐ.ஆர்.சி.டி.சி வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன," என்று அமைச்சர் கூறினார். ஆன்லைன் டிக்கெட்டுகள் பயணிகள் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க உதவுகின்றன, ஏனெனில் இது நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது மற்றும் டிக்கெட் கவுண்டர்களுக்குச் சென்று திரும்பும் பயணச் செலவுகளைக் கூட குறைக்கிறது என்றும் அவர் கூறினார். இதனால் பயணிகளுக்கு இழப்பு குறைவதாக என்றும் சுட்டிக்காட்டினார்.



Click it and Unblock the Notifications
