Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
பெண் கல்வியை கட்டாயமாக்கி அதனை இலவசமாக கொடுத்த இந்தியாவின் இந்த சிறந்த அரசர் யார் தெரியுமா?
இந்திய மன்னர்கள் மற்றும் மகாராஜாக்கள் பொதுவான பொதுவான கருத்து அவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள், தங்கள் மக்கள் மீது அதிக வரிகளை சுமத்தினார்கள் மற்றும் சர்வாதிகாரியாக விளங்கினார்கள், அவர்களின் செல்வம் அளப்பரியதாக இருந்தது.
அவர்கள் பொதுமக்களிடமிருந்து விலகி இருந்தார்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் என்று கருதப்பட்டார்கள். ஆனால் சில மன்னர்கள் இந்த கருத்துக்களுக்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தார்கள். ஒரு மன்னர் மற்ற அரசர்களிடமிருந்து மிகவும் தனித்து நின்றார், ஏனென்றால் அவர் மற்றவர்களைப் போலல்லாமல் இருந்தார்.

அவர் சாம்ராஜ்யத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின் மருத்துவம் படிக்க வெளிநாடு சென்றார். பின்னர் அவர் தனது ஆதரவற்ற மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தார்.
இந்த சிறப்பு வாய்ந்த அரசர் யாரெனில் குஜராத்தின் கோண்டல் மாநிலத்தின் மகாராஜா பகவத் சிங் ஆவார். அவர் மருத்துவப் பயிற்சி பெற்றவர் மற்றும் முறையே முதுகலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முதுகலை பட்டங்களைப் பெற்றார். அவர் தனது குஜராத்தி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆற்றிய பணி உண்மையிலேயே இந்திய வரலாற்றில் போற்றுதலுக்கு உரியது.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட 217 சிறிய மாநிலங்களில் கோண்டலும் ஒன்றாகும். அக்டோபர் 24, 1865 அன்று, பகவத் சிங் தற்போது ராஜ்கோட்டின் குஜராத்தி மாவட்டத்தில் உள்ள தோராஜியில் பிறந்தார். அவர் கோண்டலின் தாக்கூர் அல்லது மன்னன் இரண்டாம் சங்க்ராம் சிங்கின் மூன்றாவது குழந்தையாவார். ஜாம்நகர் மற்றும் கட்ச் போன்ற மாநிலங்களையும் ஆட்சி செய்த ஜடேஜா வம்சம், இந்த சிறிய சமஸ்தானத்தை நிறுவியது.
ஆரம்பக் கல்வி
1875 ஆம் ஆண்டு பகவத் சிங்கிற்கு பத்து வயதாக இருந்தபோது, அவரது ஆரம்பக் கல்விக்காக அவரது குடும்பத்தினர் அவரை ராஜ்கோட்டுக்கு அனுப்பினர். அங்கு, இந்திய இளவரசர்களுக்காக பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட நிறுவனமான ராஜ்குமார் கல்லூரியில் பயின்றார். இது நவீன காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை அவருக்குக் கற்றுக் கொடுத்தது மற்றும் அவரது மன கதவுகளைத் திறந்தது.
மருத்துவக் கல்வி
1884 இல், தனது கல்வியை முடித்துவிட்டு, மாநிலத் தலைமையை ஏற்க கோண்டலுக்குத் திரும்பினார். ஆனால் இந்த நேரத்தில் அவர் மனதில் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அவர் இங்கிலாந்திற்கு பயணம் செய்ய வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இதற்கு அரசவையும், அவரது தாயும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் அந்தக் காலத்தில் ஆர்த்தடாக்ஸ் இந்துக்கள் கடல் கடந்து செல்வது அவர்களை தூய்மையற்றவராக மாற்றும் என்று கருதினர். இதையும் மீறி பகவத் சிங் இதில் பிடிவாதமாக இருந்தார். மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தவுடனேயே டாக்டராக வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்.
கல்வி சீர்திருத்தம்
புகழ்பெற்ற மருத்துவ மாணவரான பகவத் சிங், தனது படிப்பை முடித்து எம்.டி., பட்டம் பெற்றார், இது முதல் குஜராத்தி அகராதி மற்றும் கலைக்களஞ்சிய வெளியீடு உட்பட மாநில நிர்வாகம், கல்வி மற்றும் பெண்களின் உரிமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. பல்கலைக்கழகப் படிப்பு முழுவதும் ஆண், பெண் இருபாலருக்கும் அவர் இலவசக் கல்வி அளித்தார்.
பகவந்த் சிங் மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்ற பிறகு மாநில குடிமக்களின் பராமரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பொருத்தமான கட்டமைப்பை உருவாக்கினார். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், அவர்களை அடிக்கடி பார்த்து ஆரோக்கியத்தை கண்காணிப்பதை அவரை வழக்கமாக வைத்திருந்தார்.
வரி சீர்த்திருத்தம்
பகவத் சிங் தனது ஆட்சியின் போது மாநிலத்தில் அனைத்து ஏற்றுமதி வரிகள், பிற வரிகள், சுங்கம் மற்றும் ஆக்ட்ராய் ஆகியவற்றை நீக்கினார். அந்த நேரத்தில், கோண்டல் மாநிலம் மட்டுமே வரியிலிருந்து விலக்கு பெற்ற சமஸ்தானமாக இருந்தது. கூடுதலாக, பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்ற நிபந்தனையை அவர் நீக்கினார். அவர் இந்திய வரலாற்றில் மிகவும் தாராளவாத அரசர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் பின்தங்கியவர்களுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சந்தேகமே இன்றி இந்திய வரலாற்றின் மிகசிறந்த அரசர்களில் பகவத் சிங்கும் ஒருவராவார்.



Click it and Unblock the Notifications












