Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்தியாவின் முதல் விமான தொழிற்சாலையை உருவாக்கி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசென்றவர் யார் தெரியுமா?
இந்தியாவின் தொழில்துறை தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கார் தொழிற்சாலைகள் முதல் விமான கட்டுமானம் வரை அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் அளவிற்கு இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சிகள் அனைத்தும் சுதந்திரத்திற்கு பின்னர்தான் உருவானது என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும்.
சுதந்திரத்திற்கு முன்னரே இந்தியா தொழில்துறையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போதே சில தலைவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள். குறைவான வளங்களைக் கொண்டிருந்தாலும் அவர்களால், இன்றும் இயங்கும் நிறுவனங்களை உருவாக்க முடிந்தது.

அப்படி இந்தியாவை வளர்ச்சி பாதையில் செல்ல வைத்த முக்கிய தலைவர்களில் ஒருவர் இந்திய மேதை சேத் வால்சந்த் ஹிராசந்த் ஆவார், அவர் இந்தியாவிற்கு முதல் விமானத் தொழிற்சாலை, கார் தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் தளத்தை வழங்கினார். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் தொழில்துறை புரட்சிக்கு முன்னோடியாக இருந்த ஒரு தேசபக்தர் ஹிராசந்த். வால்சந்த் குழுமத்தின் நிறுவனரான அவர் 'இந்தியாவில் போக்குவரத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
யார் இந்த ஹிராசந்த்?
1882 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் ஷோலாப்பூரில் ஒரு பிரபலமான குடும்பத்தில் ஹிராசந்த் பிறந்தார். ஹிராசந்த் ஆரம்பத்தில் பருத்தி வியாபாரம் மற்றும் கடன் வழங்கும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். தனது தந்தையின் குடும்பத் தொழிலை சில ஆண்டுகள் நடத்திய பிறகு, முன்னாள் ரயில்வே எழுத்தருடன் இணைந்து கட்டுமானம் தொடர்பான பணிகளுக்கான ரயில்வே ஒப்பந்ததாரராக மாறுவதற்காக தந்தையின் வியாபாரத்தை விட்டு விலகினார். இந்தியாவில் சர்க்கரை மற்றும் ஜவுளி தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ரசாயன ஆலைகள் போன்ற பல தொழில்துறை திட்டங்களை நிறுவுவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
கல்வி
1899 ஆம் ஆண்டு சோலாப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் பட்டம் பெற்றார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் தனது குடும்பத் தொழிலில் சேர்ந்தார். அவர் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவரானார்.
Hindustan Aircraft Limited (HAL) நிறுவனர்
ஹார்லோ டிரெய்னர், கிளைடர், ஹாக்-பி36, ஹார்லோ-பிசி5 போன்ற விமானங்களைத் தயாரித்த "இந்துஸ்தான் ஏர்கிராஃப்ட் லிமிடெட்" நிறுவனத்தை நிறுவிய பெருமைக்குரியவர் ஹிராசந்த்தான். பின்னர் அது இந்திய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டது.
கடல்சார் போக்குவரத்து
ஏப்ரல் 5, 1919 அன்று, 'எஸ்எஸ் லாயல்டி' என்ற இந்திய கப்பல் அதன் முதல் பயணத்தை மேற்கொண்டது, கடல் வழிகள் ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்ட காலத்தில் இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நகர்வாக இருந்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி இப்போது இந்தியாவில் தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது.
கப்பல் துறையின் முன்னோடி
கப்பல் கட்டும் துறையில் இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த நினைத்த சேத் வால்சந்த் உணர்ந்து 1948 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் ஒரு கப்பல் கட்டும் தளத்தை நிறுவினார். நிறுவனத்தின் முதல் கப்பலான "ஜல்-உஷா" இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் இயக்கப்பட்டது. பின்னர் அவர் உருவாக்கிய கப்பல் கட்டும் தளமும் இந்திய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டது.
கடைசி நாட்கள்
1947 ஆம் ஆண்டு, வால்சந்த் குழும நிறுவனங்கள் நாட்டின் 10 பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. 1949 ஆம் ஆண்டு வால்சந்த் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து 1950 ஆம் ஆண்டு அவர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார், மேலும் அவரது மனைவி கஸ்தூரிபாய் அவரது இறுதி காலத்தில் அவரை கவனித்துக் கொண்டார். அவர் ஏப்ரல் 8, 1953 அன்று குஜராத்தின் சித்பூரில் இறந்தார்.



Click it and Unblock the Notifications












