Latest Updates
-
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது!
வியாழக்கிழமை அன்று சாய் பாபாவை இப்படி கும்பிட்டால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுமாம்...!
வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வரும் கடவுளாக சாய்பாபா மாறிவிட்டார், கடந்த பத்தாண்டுகளில் சாய்பாபாவை வழிபடுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமையில் சாய்பாபாவை வழிபடுவதன் மூலம், மிகப்பெரிய நெருக்கடிகள் கூட நீங்கும், மேலும் மனதின் விருப்பங்களும் நிறைவேறும்.
இந்து மத நம்பிக்கையின்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்தின் சிறப்பு வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.

எந்த பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்குகிறார்களோ, சாய்பாபா அவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. சாய் பூஜையுடன் வியாழன் அன்று விரதம் இருக்க வேண்டும் என்ற விதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதைச் செய்யும் பக்தர்களுக்கு சாய்பாபா எப்போதும் தனது ஆசீர்வாதத்தைத் தருகிறார்.
வியாழன் அன்று சாய் பாபாவை வழிபடுவதும், விரதம் இருப்பதும் நல்ல பலன்களைத் தரும், ஆனால் இந்த நாளில் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் வேறு சில நடவடிக்கைகள் உள்ளன. அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.
வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
மத நம்பிக்கையின்படி, சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.
மத நம்பிக்கைகளின் படி, தெய்வங்களுக்கு பிரசாதம் வழங்காமல் எந்த வழிபாடும் முழுமையடையாது. சாய்பாபாவுக்கு கிச்சடி என்றால் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது, எனவே நீங்கள் அதை பிரசாதமாக வழங்கினால், சாய்பாபா மிகவும் மகிழ்ச்சியடைந்து, அவருடைய சிறப்பு ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழிவார்.
ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலிலுக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களின் துக்கங்கள், வலிகள் மற்றும் நோய்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. சாய் பாபாவின் இந்த திருத்தலத்திற்கு வரும் எந்தவொரு பக்தரும் வெறுங்கையுடன் செல்வதில்லை என்று நம்பப்படுகிறது. அவரது மனம் எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.
மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications












