Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
வியாழக்கிழமை அன்று சாய் பாபாவை இப்படி கும்பிட்டால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுமாம்...!
வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வரும் கடவுளாக சாய்பாபா மாறிவிட்டார், கடந்த பத்தாண்டுகளில் சாய்பாபாவை வழிபடுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமையில் சாய்பாபாவை வழிபடுவதன் மூலம், மிகப்பெரிய நெருக்கடிகள் கூட நீங்கும், மேலும் மனதின் விருப்பங்களும் நிறைவேறும்.
இந்து மத நம்பிக்கையின்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்தின் சிறப்பு வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.

எந்த பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்குகிறார்களோ, சாய்பாபா அவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. சாய் பூஜையுடன் வியாழன் அன்று விரதம் இருக்க வேண்டும் என்ற விதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதைச் செய்யும் பக்தர்களுக்கு சாய்பாபா எப்போதும் தனது ஆசீர்வாதத்தைத் தருகிறார்.
வியாழன் அன்று சாய் பாபாவை வழிபடுவதும், விரதம் இருப்பதும் நல்ல பலன்களைத் தரும், ஆனால் இந்த நாளில் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் வேறு சில நடவடிக்கைகள் உள்ளன. அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.
வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
மத நம்பிக்கையின்படி, சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.
மத நம்பிக்கைகளின் படி, தெய்வங்களுக்கு பிரசாதம் வழங்காமல் எந்த வழிபாடும் முழுமையடையாது. சாய்பாபாவுக்கு கிச்சடி என்றால் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது, எனவே நீங்கள் அதை பிரசாதமாக வழங்கினால், சாய்பாபா மிகவும் மகிழ்ச்சியடைந்து, அவருடைய சிறப்பு ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழிவார்.
ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலிலுக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களின் துக்கங்கள், வலிகள் மற்றும் நோய்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. சாய் பாபாவின் இந்த திருத்தலத்திற்கு வரும் எந்தவொரு பக்தரும் வெறுங்கையுடன் செல்வதில்லை என்று நம்பப்படுகிறது. அவரது மனம் எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.
மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
